வணக்கம்.
அன்பர்களே, சமயம் என்பது ஒரு மனிதனை நெறிபடுத்தி அவனை ஒழுக்க சீலனாக உருவகபடுத்த வள்ளது. சமயமே சமசீர் மனிதனை உருவாக்கும். ஆகையால், தற்போது நமது இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும், நமது மொழி, கலை, பண்பாடு, மற்றும் இந்து சமய மேம்பாட்டிற்காகவும், இந்த இந்து சமய நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது எங்களது நோக்கம், சமய வகுப்பு, தேவாரம், பரதநாட்டியம், சமய சொற்பொழிவுகள், இந்திய கலை பண்பாடு சம்மந்தமான நிகழ்வுகளை நடத்துவதே ஆகும். இதன் மூலம் இன்றய இளைஞர்களை நல்வழி படுத்தி நமது மொழியையும், சமயத்தையும், பாரம்பரியத்தையும் பேணிகாப்பதுவே எங்களின் இலட்சியம். இதனால் மாணவர்களும் மனம் தூய்மைப்பெற்று கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது திண்ணம்.