Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும் - திருநாவுக்கரசர் தேவாரம்

  • Thiruneriya Thamizhosai
  • 2025-11-07
  • 130
திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும் - திருநாவுக்கரசர் தேவாரம்
ThevaaramThirumuraiDeiva ThamizhPanniru ThirumuraiPanniru ThirumuraigalThirugnanasambanthar PathigamThirunavukarasar PathigamSundaramurthy PathigamManikkavasagarThiruvasagamThiruneriya Thamizhosaiபன்னிரு திருமுறைகள்தேவாரம்திருவாசகம்திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரமூர்த்திமாணிக்கவாசகர்தெய்வத் தமிழ்திருநெறிய தமிழோசைDevara Paadal Petra SthalamTiruvaanchiyamSri Vaanchinathar Templeதிருவாஞ்சியம்
  • ok logo

Скачать திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும் - திருநாவுக்கரசர் தேவாரம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும் - திருநாவுக்கரசர் தேவாரம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும் - திருநாவுக்கரசர் தேவாரம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும் - திருநாவுக்கரசர் தேவாரம்

05.067 திருவாஞ்சியம் | படையும் பூதமும் பாம்பும் | திருநாவுக்கரசர் தேவாரம்

காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவாஞ்சியம் தலமும் ஒன்றாகும். மற்றவை திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருசாய்க்காடு மற்றும் மயிலாடுதுறை ஆகும். இவற்றில் திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது. பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென்திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டுவிட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும்.

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வாஞ்சியநாதர், ஸ்ரீ வாஞ்சி லிங்கேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வாழவந்த நாயகி, ஸ்ரீ மங்கள நாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 067 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்

திருச்சேறை, குடவாயில், நறையூர் முதலிய பல பதிகளை வணங்கித் திருவாஞ்சியம் அணைந்துதொழுது பாடி அருளியது இத்திருப்பதிகம்.

படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்
புடை நிலாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே. ..... (01)

பறப்பையும் பசுவும் படுத்துப் பல
திறத்தவும் உடையோர் திகழும் பதி
கறைப் பிறைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்புடை திருவாஞ்சியம் சேர்மினே. ..... (02)

புற்றில் ஆடரவோடு புனல் மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பிரான் பதி
சுற்று மாடங்கள் சூழ் திருவாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே. ..... (03)

அங்கம் ஆறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர்
செங்கண்மால் இடமார் திருவாஞ்சியம்
தங்குவார் நம் அமரர்க்கு அமரரே. ..... (04)

நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை
ஆறு சூடும் அடிகள் உறைபதி
மாறுதான் ஒருங்கும் வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க்குச் செல்வம் ஆகுமே. ..... (05)

அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு
உற்ற நற்றுணை ஆவான் உறைபதி
தெற்று மாடங்கள் சூழ் திருவாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க்குக் கருத்தாவதே...... (06)

இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடியான் திகழும் நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே. ..... (10)

பொருளுரை : சூரியனும், அக்கினியும், யமனும், பிற தேவர்களும் திருத்தி அணிசெய்கின்ற சேவடியான் திகழும் நகரமாகியதும், மங்கையை ஒருபங்கிற் கொண்டு மகிழ்ந்தவனுடையதுமாகிய திருவாஞ்சியத்தை விருப்பத்தினால் அடைவார்க்கு அல்லல் இல்லை.

ஆலய முகவரி : அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம், PIN - 610 110.

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]