Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழவும்/ பிரித்த குடும்பங்கள் இணையவும் கேட்க வேண்டிய திருச்செங்கோடு பதிகம்

  • Hasini Musicals
  • 2023-04-09
  • 4524
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழவும்/ பிரித்த  குடும்பங்கள் இணையவும் கேட்க வேண்டிய திருச்செங்கோடு பதிகம்
hasini musicalsdevotional songpakthi paadal
  • ok logo

Скачать கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழவும்/ பிரித்த குடும்பங்கள் இணையவும் கேட்க வேண்டிய திருச்செங்கோடு பதிகம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழவும்/ பிரித்த குடும்பங்கள் இணையவும் கேட்க வேண்டிய திருச்செங்கோடு பதிகம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழவும்/ பிரித்த குடும்பங்கள் இணையவும் கேட்க வேண்டிய திருச்செங்கோடு பதிகம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழவும்/ பிரித்த குடும்பங்கள் இணையவும் கேட்க வேண்டிய திருச்செங்கோடு பதிகம்

SPOTIFY LINK : https://open.spotify.com/track/7nD7Jw...

திருச்செங்கோடு பதிகம்
பிரிந்த தம்பதியை சேர்த்துவைப்பார் அர்த்தநாரீஸ்வரர்!

சிவபெருமானின் எத்தனையோ வடிவங்கள்... அவை அனைத்துமே எல்லா ரூபங்களுமே மக்களுக்கு பயன் தரும் வாழ்வியல் தத்துவங்களைப் போதிக்கின்றன. அப்படி நம் வாழ்க்கையில் சிவனார் போதித்ததுதான் ஆணும் பெண்ணும் சமம் எனும் தத்துவம்.

சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவமில்லை எனும் போதனையை நமக்கு வழங்கியதை இன்னும் உணர்த்துவதற்காகத்தான் தன் இடபாகத்தை உமையவளுக்குத் தந்தார் சிவனார். சிவபெருமானுக்கு சக்தியாகவும் உலகுக்கே சக்தியாகவும் திகழ்ந்தார். அதை உணர்த்துகிற வடிவம்தான் அர்த்தநாரீஸ்வர திருவடிவம்.

அர்த்தநாரீஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கும் ஆலயங்கள் மிகக்குறைவுதான். அவற்றில் மிக முக்கியமான திருத்தலம் திருச்செங்கோடு கோயில். அழகிய மலையின்மீது அமைந்துள்ள அற்புதமான திருத்தலம் இது. தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.

கோடு என்றால் மலை என்றும் மலையுச்சி என்றும் அர்த்தம். செங்கோடு, செங்குன்றம், செம்மலை என பல பெயர்களுடன் திகழ்கிறது திருச்செங்கோடு. செவ்வண்ணக் கல்லால் அமைந்த செங்கோட்டு மலை என்று அறியலாம்.
செங்கோட்டின் பெரிய மலைமுகடு நாகமலை என்றும், சிறிய முகடு நந்திமலை என்றும் அழைக்கப்படுகிறது. திருச்செங்கோடு மலையை நாகாசலம், நாகமலை, நாககிரி, உரககிரி என்றும் சொல்வார்கள். மலையின்மீது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் ஒருபுறமும், ஸ்ரீபாண்டீஸ்வரர் கோயில் இன்னொரு பக்கமும் உள்ளது. அடிவாரத்தில் செங்குன்றூரின் நடுவே ஸ்ரீகயிலாசநாதர் கோயில் உள்ளது. ஆக, இங்கே, இந்தத் தலத்தில் மூன்று சிவாலயங்களை தரிசிக்கலாம்.

திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய்மலை முதலான தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வழிபட்ட ஞானசம்பந்தர், வழியெங்கும் பல தலங்களை தரிசித்து வழிபட்டபடியே, திருச்செங்கோட்டுக்கு வந்தார். சிவனாரை தரிசித்து பதிகம் பாடியவர், அடுத்து திருநணா என்கிற பவானிக்குச் சென்றுவிட்டு, மலையின் மீதும் இறைவனின் மீது கொண்ட ஈர்ப்பால், மீண்டும் திருச்செங்கோடு வந்து தங்கினாராம். அத்தனை அழகும் கம்பீரமும் வாய்ந்தது இந்த மலை என வர்ணிக்கிறது ஸ்தல புராணம்!

மலையடிவாரத்தில் இருந்து செல்ல, அதாவது நகரின் நடுப்பகுதியில் இருந்து படிக்கட்டுகள் உள்ளன. அதேபோல், ஊருக்குக் கிழக்கே உள்ள சாலையில் இருந்து மலையுச்சிக்கு வாகனங்களில் செல்வதற்குச் சாலை வசதி உண்டு. படிகளின் வழியே செல்லும்போது பெரிய மலைக்கும் சிறிய மலைக்கும் இடையே அமைந்துள்ள நாகர்பள்ளம் எனும் இடத்தைப் பார்க்கலாம்!

இங்கே, ஆதிசேஷன் ஐந்து தலைகளையும் விரித்துப் படமெடுத்த நிலையில் லிங்கத் திருமேனியைச் சுமந்துகொண்டிருக்கும் 60 அடி நீளச் சிற்பக் காட்சியைக் கண்டு பிரமித்துப் போய்விடுவோம்! இந்த நாகத்தின் மீது குங்குமம் தூவி வழிபடுகின்றனர். நாக தோஷம் உள்ளவர்கள், சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

அடுத்ததாக இருக்கிற அறுபதாம் படியில் பிணக்குகள், வழக்குகள் உள்ளோர் சத்தியம் செய்து, தங்கள் பகையை முடிப்பதும் வழிவழியாக இருக்கிறது! திருச்செங்கோடு திருத்தலம், சென்னை நங்கநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் முதலான தலங்களுக்குச் சென்று தரிசித்து வழிபடுங்கள்.

வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி,
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே. [ 1]

அலை மலி தண்புனலோடு அரவம் சடைக்கு அணிந்து, ஆகம்
மலைமகள் கூறு உடையான், மலை ஆர் இள வாழைக்
குலை மலி தண் பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

[ 2]

பால் அன நீறு புனை திருமார்பில், பல்வளைக்கை நல்ல
ஏலமலர்க் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி,
கோல மலர்ப்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநல் மாமிடற்றான் கழல ஏத்தல் நீதியே.

{3}
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில், நண்ணும்
கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளி,
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீர் உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே.

[ 4]
மேலே செல்

பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் மார்பில், நல்ல
பன்றியின் கொம்பு அணிந்து, பணைத்தோளி ஓர்பாகம் ஆக,
குன்று அன மாளிகை சூழ் கொடி மாடச் செங்குன்றூர், வானில்
மின்திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே.
[ 5]

ஓங்கிய மூஇலை நல் சூலம் ஒரு கையன், சென்னி
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து,
கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே.

[ 6]

நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ, வெள்ளை-
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்,
கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே.

[ 7]

மத்த நல் மாமலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று
தொத்து அலர் செஞ்சடைமேல்-துதைய உடன் சூடி,
கொத்து அலர் தண்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

[ 8]
மேலே செல்

செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம் பவளத்திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான்,
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடி மாடச்செங்குன்றூர் மேய
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே.

[ 9]

போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம் கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர்! வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழ, நும் வினை ஆன வீடுமே.

[ 10]

அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலிநகர் பேணும்
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்,
கொலை மலி மூஇலையான் கொடி மாடச்செங்குன்றூர் ஏத்தும்
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]