Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருவாசகம் - திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை - மாணிக்கவாசக சுவாமிகள்

  • Thiruneriya Thamizhosai
  • 2025-07-27
  • 1424
திருவாசகம் - திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை - மாணிக்கவாசக சுவாமிகள்
ThevaaramThirumuraiDeiva ThamizhPanniru ThirumuraiPanniru ThirumuraigalThirugnanasambanthar PathigamThirunavukarasar PathigamSundaramurthy PathigamManikkavasagarThiruvasagamThiruneriya Thamizhosaiபன்னிரு திருமுறைகள்தேவாரம்திருவாசகம்திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரமூர்த்திமாணிக்கவாசகர்தெய்வத் தமிழ்திருநெறிய தமிழோசைDevara Paadal Petra SthalamThiruThellenumதிருத்தெள்ளேணம்
  • ok logo

Скачать திருவாசகம் - திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை - மாணிக்கவாசக சுவாமிகள் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருவாசகம் - திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை - மாணிக்கவாசக சுவாமிகள் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருவாசகம் - திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை - மாணிக்கவாசக சுவாமிகள் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருவாசகம் - திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை - மாணிக்கவாசக சுவாமிகள்

08.011 திருவாசகம் | திருத்தெள்ளேணம் | திருமாலும் பன்றியாய் | மாணிக்கவாசக சுவாமிகள் | ‪@ThiruneriyaThamizhosai‬

#Thiruvasagam | #ThiruThellenum | #ThiruneriyaThamizhosai

தெள்ளேணம் என்பது பெண்களின் ஒருவகை விளையாட்டு. மணிவாசகர் தாம் தலைவியாக நின்று தமது தோழியரை அழைத்து தமக்கு ஆண்டவன் அருளிய திருஅருட் செயல்கைளயும், ஆண்டவனுடைய பெருமைகளையும் பற்றி பாடி தெள்ளேணம்(கும்மி பாட்டு) கொட்டுவோமாக என்று கூறுவது இப்பதிக திருத்தெள்ளேணம் பதிகம்

திருமுறை : எட்டாம் திருமுறை 011 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : மாணிக்கவாசக சுவாமிகள்

பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்

00:10 திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராத் திருவடியை
உருநாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (01)

01:57 திருவார் பெருந்துறை மேயபிரான் என் பிறவிக்
கருவேர் அறுத்தபின் யாவரையும் கண்டதில்லை
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன் மருவும்
திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (02)

03:13 அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்தன்றி நின்ற சிவம் வந்து நம்மை
உருக்கும் பணி கொள்ளும் என்பது கேட்டு உலகம் எல்லாம்
சிரிக்கும் திறம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (03)

04:30 அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே
பவமாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து
சிவம் ஆனவா பாடி தெள்ளேணங் கொட்டாமோ. ..... (04)

05:59 அருமந்த தேவர் அயன் திருமாற்கு அரிய சிவம்
உருவந்து பூதலத்தோர் உகப்பு எய்த கொண்டருளிக்
கருவெந்து வீழக் கடைக்கணித்து என் உளம் புகுந்த
திருவந்தவா பாடிக் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (05)

06:59 அரையாடு நாகம் அசைத்த பிரான் அவனியின்மேல்
வரையாடு மங்கைதன் பங்கொடும் வந்து ஆண்ட திறம்
உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில் நீர்த்
திரையாடுமா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (06)

08:22 ஆவா அரி அயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன்
வா வா என்று என்னையும் பூதலத்தே வலித்து ஆண்டுகொண்டான்
பூவார் அடிச்சுவடு என் தலைமேல் பொறித்தலுமே
தேவானவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (07)

10:29 கறங்கு ஓலை போல்வதோர் காயப் பிறப்போடு இறப்பு என்னும் அறம்
பாவம் என்று இரண்டு அச்சம் தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான்
மறந்தேயும் தன்கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அத்
திறம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (08)

12:13 கல்நார் உரித்து என்ன என்னையும் தன் கருணையினால்
பொன்னார் கழல் பணித்து ஆண்ட பிரான் புகழ் பாடி
மின்னேர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர்
தென்னா தென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ. ..... (09)

13:40 கனவேயும் தேவர்கள் காண்பரிய கனை கழலோன்
புனவேயன வளைத் தோளியோடும் புகுந்தருளி
நனவே எனைப் பிடித்து ஆட்கொண்டவா நயந்து நெஞ்சம்
சினவேற் கண் நீர் மல்கத் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (10)

14:41 கயல் மாண்ட கண்ணிதன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே
அயல் மாண்டு அருவினைச் சுற்றமும் மாண்டு அவனியின்மேல்
மயல் மாண்டு மற்று உள்ள வாசகம் மாண்டு என்னுடைய
செயல் மாண்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (11)

15:40 முத்திக்கு உழன்று முனிவர் குழாம் நனி வாட
அத்திக்கு அருளி அடியேனை ஆண்டுகொண்டு
பத்திக் கடலுள் பதித்த பரஞ்சோதி
தித்திக்குமா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (12)

17:04 பார் பாடும் பாதாளர் பாடும் விண்ணோர் தம்பாடும்
ஆர் பாடும் சாரா வகை அருளி ஆண்டுகொண்ட
நேர் பாடல் பாடி நினைப்பரிய தனிப் பெரியோன்
சீர் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (13)

18:25 மாலே பிரமனே மற்று ஒழிந்த தேவர்களே
நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்து அடியேன்
பாலே புகுந்து பரிந்து உருக்கும் பாவகத்தால்
சேலேர் கண் நீர் மல்கத் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (14)

19:25 உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு
பருகற்கு இனி பரங்கருணைத் தடம் கடலை
மருவித் திகழ் தென்னன் வார்கழலே நினைந்து அடியோம்
திருவைப் பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (15)

20:11 புத்தன் புரந்தர ஆதியர் அயன் மால் போற்றி செயும்
பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பு அறுத்த
அத்தன் அணி தில்லை அம்பலவன் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ. ..... (16)

21:08 உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல் உளனாய்க் கிடந்து தடுமாறும்
கவலைக் கெடுத்துக் கழல் இணைகள் தந்தருளும்
செயலைப் பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (17)

21:51 வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும்
தான் கெட்டல் இன்றி சலிப்பு அறியாத் தன்மையனுக்கு
ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வு கெட்டு என் உள்ளமும் போய்
நான் கெட்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (18)

22:59 விண்ணோர் முழுமுதல் பாதாளத்தார் வித்து
மண்ணோர் மருந்து அயன் மாலுடைய வைப்பு அடியோம்
கண்ணார வந்து நின்றான் கருணைக் கழல் பாடித்
தென்னா தென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ. ..... (19)

23:40 குலம் பாடிக் கொக்கு இறகும் பாடிக் கோல்வளையாள்
நலம் பாடி நஞ்சு உண்டவா பாடி நாள்தோறும்
அலம்பார் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பு ஆடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ. ..... (20)

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]