எல்லாம் நீயே ஓம்சக்தி || ELLAM NEEYE OMSAKTHI || MARUVATHUR ADHIPARASAKTHI SONGS || VIJAY MUSICALS

Описание к видео எல்லாம் நீயே ஓம்சக்தி || ELLAM NEEYE OMSAKTHI || MARUVATHUR ADHIPARASAKTHI SONGS || VIJAY MUSICALS

ELLAM NEEYE OMSAKTHI - JUKEBOX || MELMARUVATHUR ADHIPARASAKTHI SONGS || 108 AMMAN POTRI || AMMAN SONGS TAMIL || SINGERS : PUSHPAVANAM KUPPUSAMI, KALPANA, AMRUTHA || MUSIC : KANMANIRAJA || LYRICS : SENKATHIRVANAN || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals

எல்லாம் நீயே ஓம்சக்தி || மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி || பாடியவர்கள் : புஷ்பவனம் குப்புசாமி, கல்பனா, அம்ருதா || இசை : கண்மணிராஜா || பாடல் : செங்கதிர்வாணன் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்

பாடல்கள் || SONGS :

00:00 சுலோகம் - SLOGAM
00:51 மருவத்தூரில் - MARUVATHOORIL
05:30 இருமுடி - IRUMUDI
12:06 சக்தி வடிவானவளே - SAKTHI VADIVANAVALE
16:20 அகிலம் முழுவதும் - AKILAM MUZHUVATHUM
33:03 குங்குமத்தில் - KUNKUMATHIL
38:36 108 போற்றிகள் - POTRI 108
44:26 ஆதிபராசக்தி - ADHIPARASAKTHI

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர். 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாள் தமிழகத்தில் வீசிய புயல்காற்றால் வேப்பமரம் வீழ்ந்தது என்றும் அதன் அடியில் இருந்த புற்று கரைந்து சுயம்பு வெளிப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது. தெய்வம் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற தெய்வ மூர்த்தமே “சுயம்பு” என்று கூறுப்படுகின்றது.

இப்போது கருவறை உள்ள இடத்தில் தான் புற்று இருந்தது. அந்தப் புற்றிலிருந்துதான் சுயம்பு வெளிப்பட்டது என அறிவோம். கருவறையின் வலப்புறத்தில் தனியாகப் புற்றை அமைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அவ்வாறே அமைத்துக்கொண்டாள். பக்தர்களை காப்பதற்கும், தீயவர்களைத் தண்டிப்பதற்கும் நான் நாகவடிவில் உறைகிறேன் எனக்கூறிய அன்னை புற்றில் நாகமாக உறைவதுடன் சிலர்க்கு காட்சி கொடுத்ததும் உண்டு.

இப்புற்றை வலம் வருவது நவக்கிரக சந்நிதியை வலம் வருவதற்குச் சமம் என்று கூறிய அன்னை அன்றிலிருந்து இன்று வரை இங்கே தான் அமர்ந்து அருள்வாக்கு நல்கி வருகிறாள். 1974ஆம் ஆண்டில் புற்று மண்டபம் தனியாக நிறுவப்பட்டது.

Комментарии

Информация по комментариям в разработке