Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть பிரதோஷ வழிபாட்டின் முதல் கோவில் தேவர்கள் அமிர்தத்தை மறைத்தது இங்குதான்

  • bakthi deepam
  • 2024-06-21
  • 61
பிரதோஷ வழிபாட்டின் முதல் கோவில்  தேவர்கள் அமிர்தத்தை  மறைத்தது இங்குதான்
  • ok logo

Скачать பிரதோஷ வழிபாட்டின் முதல் கோவில் தேவர்கள் அமிர்தத்தை மறைத்தது இங்குதான் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно பிரதோஷ வழிபாட்டின் முதல் கோவில் தேவர்கள் அமிர்தத்தை மறைத்தது இங்குதான் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку பிரதோஷ வழிபாட்டின் முதல் கோவில் தேவர்கள் அமிர்தத்தை மறைத்தது இங்குதான் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео பிரதோஷ வழிபாட்டின் முதல் கோவில் தேவர்கள் அமிர்தத்தை மறைத்தது இங்குதான்

அருள்மிகு திருபாலீஸ்வர சுவாமி
திருக்கோயில், திருப்பாலைவனம்

முதல் பிரதோச திருத்தலம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பழமையான திருக்கோயில்களில்
ஒன்று திருப்பாலைவனம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு
திருபாலீஸ்வர சுவாமி திருக்கோயில் ஆகும்.இத்திருக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில்
கட்டப்பட்டதாக தெரிய வருகிறது. அவன் தனது பெரும்படையுடன்

வடபுலம் சென்று வெற்றிக்கொடி நாட்டி திரும்பிய போது
பாலைமரங்கள் நிறைந்துள்ள இப்பகுதியில் தங்கி ஓய்வெடுத்தான்,
அதுசமயம் ஒருபாலைமரத்தில் பிணிக்கப்பட்டி ருந்து யானை
மூர்ச்சையடைந்து விழுந்தது. அம்மரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக
மன்னனுக்குத் தோன்றவே அவன் அம்மரத்தை வெட்டப்
பணித்தாள். கோடாரிப் பட்ட இடத்திலிருந்து குருதி வெளிப்பட்டது,
உடனே அரசன் அம்மரத்தை வெட்டுவதை நிறுத்தி அகழ்ந்துபார்த்தான்

அப்போது தேவர்களால் பிரதிஸ்டை செய்யப்பட்டலிங்க
வடிவில் இருந்த இறைவனின் தலைமீது கோடாரிபட்ட இடத்தில்
குருதி வெளிப்பட்டதையுணர்ந்து மனம்பதைத்தும், பரவசம்
கொண்டான் உடன் ஒரு கோவிலையும் எழுப்பி
ஆராதனைகள் செய்ய ஆணையிட்டான் அவரால் எழுப்பப்பட்ட கோயிலே தூங்கானைமாடமாக அமைந்த திருப்பாலீசப் பெருமான் கருவரை கோயிலாகும் அம்மன்னனால் கோடாரி இடப்பட்ட தழும்பு இன்றும்
காணமுடிகின்றது

இத்திருக்கோயிலில் அருள்மிகு திருபாலீஸ்வர பெருமானை
வலமாக கொண்டு அருள்மிகு லோகாம்பிகாதேவி சன்னதி
அமைந்துள்ளது.
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை அமுதம்
வேண்டிக் கடயத் தொடங்கிய நாள் அமாவாசை. ஆலகாலவிஷம்
வெளிபட்ட நாள்
அமாவாசைக்குப் பத்தாம்
நாளாகிய தசமி திதி. அமுதம்
கிடைக்கப்பெற்ற நாள்
பதினோராம் நாளாகிய
ஏகாதசி. அசுரர்களைப்
புறக்கணித்துத் தாங்கள்
மட்டும் அமுதத்தை
உண்ணுதற்கு மறைவான
இடம் தேடி தேவர்கள்
வந்தபோது
பன்னிரெண்டாம் நாளாகிய
த்வாதசி நாளாகும். அவர்கள் அமுதத்தை உண்ணுவதற்குத்
தேர்ந்தெடுத்த மறைவான இடம் இன்றைய திருப்பாலைவனம்
பகுதியாகும்.

இறைவனைப் பூசித்த நாள் 'திரயோதசி' அதாவது
பதிமூன்றாம் நாள் நேரம் மாலை 4.30 முதல் 6.30 மணி
சுக்லபக்ஷத்துப் பிரதோஷகாலம். அந்த நேரத்தில்தான் இறைவன்
நந்திதேவரின் தலைமீது நின்று 'சந்தியாத்தாண்டவம்' எனும்
நடனத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் காணுமாறு ஆடியதாக
புராணம் புகழ்கின்றது. இதன்படிப் பார்த்தால் முதன் முதலில்
ப்ரதோஷ வழிபாடு தோன்றிய திருத்தலம் திருப்பாலைவனமே
என்பது புலனாகிறது.

மூலவர் மற்றும் உற்சவராக ஆக திருப்பாலீஸ்வரர் சுவாமி காட்சி தருகிறார்
அம்பாள் லோகாம்பிகாதேவி
தலவிருட்சம் பாலமரமாக உள்ளது

முருகர் பைரவர் தட்சிணாமூர்த்தி துர்க்கை பைரவர் சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட சாமிசிலைகள் உள்ளன
சுற்றுபிரகாரத்தில் சுரங்கபாதை வழி உள்ளது.
கோவில் திருக்
கோவிலில் அமிர்த புஷ்கரணிதவளைகள் வாழாத திருக்குளம் உள்ளது
கோவிலில் முக்கிய விழாவாக பிரதோசம் பவுர்ணமி மகாசிவாரத்திரி. பங்குணிஉத்தரம் தெப்பல் தேரோட்டம் நடைபெறும்

எனவே, இத்திருத்தலத்தில் பிரதோஷ
வழிபாட்டை நாம் செய்தோமானால் நமக்கு எல்லா நன்மைகளும்
கைகூடும் என்பது திண்ணம். திருமண தடை செவ்வாய் தோசம் நரம்பு சம்மந்தமான நோய் தீரவும் 60 ஆம் வயது திருமணம் செய்வதும் இக்கோவிலில் சிறப்பானது

கோவிலில்
நடையானது காலை 7.00 மணி முதல் 12.00 மணிவரையும்
மாலை 4.30 மணி முதல் 8.30 மணிவரை. திறந்திருக்கும்

இத்திருக்கோயில், சென்னையிலிருந்து பழவேற்காடு
செல்லும் சாலை மார்க்கத்தில் சென்னையிலிருந்து 45 கிலோமீட்டர்
தூரத்தில் அமைந்துள்ளது
‪@bakthideepam‬ #kovil #கோவில் #கோவிலில் #பக்தி#ஓம் #ஓம்சக்தி #siva #sivan #சிவன் #சிவனே

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]