Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் 13

  • Sri Sakthi Sumanan
  • 2025-08-28
  • 119
கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம்   13
  • ok logo

Скачать கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் 13 бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் 13 или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் 13 бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் 13

************************
இருள் வழி நடக்க - அக இருள் நீங்கி குருவருள் பெற
**************************

இந்தப் பாடலிற்கு சித்தர் பிரான் ஓலைச்சுவடியில் இட்ட பிரயோகத் தலைப்பு "இருள்வழி நடக்க" என்பதாகும். இந்தப் பாடலின் பிரயோகம் இருவகைப்படும். ஒன்று அக இருளில் இருந்து மீண்டு மனத் தெளிவு பெற, இரண்டாவது நாம் புறஇருளில் இருக்கும் போது பயமின்றி பயணிக்க இந்த பாடலின் பிரயோகம் உதவும் என்று இந்தப் பிரயோகங்களை வெளியிட்ட தியாகராஜ முதலியார் அனுபவ உதாரணத்துடன் கூறுகிறார். சம்பவம் 100 வருங்களுக்கு முன்னர் தற்போதைய மின்சார வசதி இல்லாத காலத்தைச் சார்ந்தது என்பதை நினைவில் கொள்க.

உத்தர மேரூரில் வசித்து வந்த பெரியார் ஒருவர் இரண்டு மூன்று நாட்களுக்கொருமுறை காஞ்சிபுரம் சென்று தனது நெசவுத் தொழிலிற்கு நூல் வாங்கி வருவது வழக்கம். பகலில் வெய்யில் அதிகாகையால் மாலையில் சென்று இரவில் திரும்புவது வழமை. இப்படித் திரும்பும் போது இவரிடம் பணம் இருப்பதைக் கண்டு திருடுவதற்கு இவரிப் பின் தொடர்ந்து வருவதைக் கண்ட பெரியவர் இந்தப் பாடலைத் தொடர்ந்து படிக்க கள்வர்கள் இவர் அருகில் வருவதைத் தவிர்த்துக்கொண்டு பின் தொடர்ந்தனர், பின்னர் காலையில் விடிந்தவுடன் ஊரை அண்டி குளத்தில் முகம் கழுவும் போது இவருடன் கூட வந்தவர்களைக் காணவில்லை என்று அவர்கள் விசாரிக்க இந்தப் பெரியவருக்கு ஆச்சரியம்! அதாவது இவருடன் இன்னும் சிலர் வருவது போல் ஒரு மாயத்தோற்றத்தைக் கள்வர்கள் கண்களுக்கு காட்டி அவர்களை பயங் கொள்ளச் செய்திருப்பதை அறிந்து கொண்டார்.

இந்தப்பாடலின் அதிர்வுகள் எம்மைச் சூழ எம்மை மற்றவர்களிடமிருந்து பாதுக்காகும் தன்மையை உருவாக்கும். இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள அக இருளை நீக்கி எம்மை உயர் ஞானப்பாதையில் செலுத்தும் வல்லமையும் உடையது.

இந்தப் பாடல் முருகப்பெருமானின் பரம்பொருள் இலக்கணத்தைக் கூறுவதுடன் குருத்தன்மையை வெளிப்படுத்துகிறது. குரு எம்மைக் காக்கும் சக்தி! இந்தப்பாடலின் மூலம் நாம் முருகப்பெருமானை பரம்பொருளாகத் துதித்து குருவாக வரிக்கும் போது அந்த ஆற்றல் எம்மைச் சூழ இருந்து காக்கும் தன்மையுடையது என்பது இந்த பாடலின் பிரயோகமாம்.

முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே


முருகன் தனிவேல் கொண்ட முனிவன், நம்முடைய குரு என்று எப்படி அறிவது? அவன் வெறும் அறிவினால் அறியும் தரத்தில் உள்ளவனோ! உருவம் அற்றவன், அருவமும் அற்றவன், உள்ள பொருளும் அன்று! இல்லாத பொருளும் அன்று, இருளும் அன்று, ஒளியும் அன்று என்று எல்லாப் பொருளுக்கும் உள்ளே நிற்கும் பரம்பொருள் அன்றோ அவன்!

இந்தப் பாடலில் முருகனை குரு தத்துவமாக, பரம்பொருள் தத்துவமாக உருவகித்து பாடுகிறார். வேல் என்பது பூரண ஞான சக்தி தத்துவம், தனிவேல் முருகன் என்பது அவன் பரிபூரண ஞான சக்தியை உடையவன், அதனால் நம் குரு என்று கூறுகிறார். அவனது ஞானசக்தியையும், குருத்தன்மையும் எமது சாதாரண அறிவினால் புரிந்துகொள்ள முடியாது. அவன் அருள் இருந்தால் மாத்திரமே அறிந்து கொள்ள முடியும்.

முருகனின் பரம்பொருள் தன்மையை எவரும் சுருக்கி விடமுடியாத படி நீங்கள் உருவில் தியானித்தால் அவன் உருவத்தையும் தாண்டியவனாக இருக்கிறான். அருவம் என்று உணர்ந்தால் அவன் அருவம் மாத்திரமல்ல, இருக்கும் பொருளில் மாத்திரம் அவன் இல்லை. அவன் இருளும் அன்று, ஒளியும் அன்று என எல்லாவற்றிலும் நிறைந்து காணப்படும் பரம்பொருள். இப்படி முருகனின் பரம்பொருள் தன்மையை எம்முள் தியானிக்க அந்தப் பரம்பொருள் அறியாமையை நீக்கும் குருவடிவாக எம்மை ஞானத்தில் செலுத்தும் என்பதே இந்தப்பாடலின் ஆன்ம முன்னேற்றப் பிரயோகமாகும்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]