அருள்மிகு ஸ்ரீ பூர்ணாதேவி ஸ்ரீ புஷ்கலா தேவி உடனாய ஸ்ரீ பனையடி ஐயனார் (எ) சித்தமல்லி ஐயனார் கோவில் ஒத்தக்குதிரைக்காரன்
திருவருள் சூழ் பக்த மெய்யன்பீர்!
நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் தை மாதம் 25-ஆம் நாள் (08-02-2026)
ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதியும் சுவாதி நட்சத்திரமும் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்ப லக்னத்தில்; நிலவளம், நீர்வளம், செந்நெல்வளம், தனவளம்,
தான்யவளம், நிறைந்து மகாலக்குமியின் அருள்பெற்ற திருத்தலத்தில் கலியுக வரதனாகத்
தோன்றி அருள்வழங்கும் அருள்மிகு ஸ்ரீ பூர்ணாதேவி ஸ்ரீ புஷ்கலா தேவி உடனாய ஸ்ரீ பனையடி
ஐயனார் (எ) சித்தமல்லி ஐயனாருக்கு புதிதாக எழுநிலை மாடம் மைத்து கருவரை விமானம்
அமைத்து மற்றும் பரிவார தேவதைகளுக்கும் எழுந்தருளச் செய்து குடமுழுக்கு விழா நடைபெற
உள்ளது. அது சமயம் பக்தகோடி மெய்யன்பர்களும் ஆன்மீக அருட்செல்வர்களும் கலந்து கொண்டு
ஐயனின் அருள்பெற அழைக்கின்றோம்.
இங்ஙனம் :
திருப்பணிக்குழுவினர்
அழகமாநகரி, அரக்கிவாச்சான் மருதன் கூட்டத்தார்கள், கட்டாணிபட்டி, கொள்ளகருப்பன்
வகையறா, மணவாக்கிபட்டி, அய்யாப்பட்டி, மல்லாக்கோட்டை, வடவன்பட்டி, ஏரியூர்,
சொக்கநாதபுரம், கௌரிப்பட்டி, S.S.கோட்டை, சூரியாநகர், மணக்குடி, திருநல்லூர்,
கல்லூர் (கும்பகோணம்) அசூர், வீரசேனன்பட்டி, எருமைபட்டி, மேலையாம்பட்டி,
கருவனூர், மேட்டுப்பட்டி, கரடிபட்டி, கையிலம்பட்டி, நயினாப்பட்டி, திருவேலங்குடி,
வளையபட்டி, செவல்பட்டி, அறந்தாங்கி, கொடிகுளம், தஞ்சாவூர், நத்தம், சிங்கம்புணரி,
கோவில்பட்டி, கோரிக்கடவு (பழனி) சித்தமில்லிப்பட்டி, திருச்சி, சென்னை, மற்றும்
அரக்குவாச்சான், மன்றான், மூளவெட்டி கூட்டத்தார்கள்.
சர்வ சாதகம் :
பழ, பாஸ்கரன், சிவாச்சாரியார், தளக்காவூர்
உப சாதகம் : அம்பிகை உபாசகர், ப.கருங்குளம் அர்ச்சகர் தனுசு சிவம்
ஸ்தபதியார்கள் : கரு. கணேசன், K.சொக்கநாதபுரம், V.செல்லக்கண்ணு, கண்டனூர்
போ. கார்த்திக், R.சத்யா, நாதஸ்வரம்,
கலைஇளமணி, கா. தேவேஷ் தவில், திருப்புவனம்
Информация по комментариям в разработке