SONG | என்ன சொல்லி அழைத்தால் ...

Описание к видео SONG | என்ன சொல்லி அழைத்தால் ...

Credits
Lyrics - Sakthis: Srinivaas Venkatarayan, Sridevi Velumyl
Lead Vocalist - Ajaey Shravan
Music Composer - Sakthi Radhika Sivaraj
Programming, Mixing - Sasi Keys
Flute: Jay
Recording : Senthamil
Video Script - Sakthi Sridevi Velumyl
Video Editing - Sakthi Ramya
Thumbnail - Sakthi Surender
For Adhiswara


அம்மையும் நீயே என் அப்பனும் நீயே!
அன்பால் அணைக்கும் குருவும் நீயே!
பங்காரு தாயே எமக்கெல்லாம் நீயே!

Pallavi:
என்னசொல்லி அழைத்தால் வருவாயோ அம்மா
ஒருமுறையேனும் உந்தன் திருக்காட்சி தருவாயோ!
எங்கிருந்து நானழைத்தால் வருவாயோ அம்மா
ஏங்கிநிற்கும் பிள்ளையெந்தன் ஏக்கத்தைத் தீர்ப்பாயோ!

Charanam 1
வாடிய போதெல்லாம் அருட்கூடம் ஓடி வந்தேன்
எட்டிவந்து என்னவென்று கேட்கும் குரு எங்கே!
அம்மா இருக்கிறேன் எனும் ஆறுதல்மொழி எங்கே
கனிவோடு எமைக்காக்கும் கருணைத்தாய் எங்கே!

அம்மா அம்மா மனம் ஏங்கித் தவிக்குதம்மா!
அம்மா அம்மா உந்தன் காட்சி கொடுத்திடம்மா!


Charanam 2
உனைப்போல் ஒருதாயை இனியெங்கு நான் பெறுவேன்
உந்தன் திருப்பாதம் இனியெங்கு நான் காண்பேன்!
அன்பொழுகும் அருள்வாக்கை இனியெங்கு நான் கேட்பேன்
அம்மா அம்மாயென யாரை நானழைப்பேன்!
(அம்மா அம்மா மனம்)



Charanam 3
அற்பனையும் அரவணைத்த அன்னையுனைத் தேடிவந்தேன்
ஓமென்னும் உட்பொருளில் உறைந்த உனை நாடி வந்தேன்!
புற்றுறையும் பீடத்தில் உந்தன் முகம் கண்டுநின்றேன்
அருள்மழை பொழிந்திங்கே ஆட்சிசெய்யும் அழகைக்கண்டேன்!
(அம்மா அம்மா மனம்)

Комментарии

Информация по комментариям в разработке