அவ்வினைக்கு இவ்வினையாம் |திருநீலகண்டத் திருப்பதிகம் | திருச்செங்கோடு |திருஞானசம்பந்த சுவாமிகள் | RGS

Описание к видео அவ்வினைக்கு இவ்வினையாம் |திருநீலகண்டத் திருப்பதிகம் | திருச்செங்கோடு |திருஞானசம்பந்த சுவாமிகள் | RGS

#அவ்வினைக்கு_இவ்வினையாம் #திருநீலகண்டத்_திருப்பதிகம் #திருச்செங்கோடு #திருஞானசம்பந்த_சுவாமிகள்

#ThiruneelakandaPathigam #Thiruchengode #ThirugnanasambantharPathigam

"நோய்களும் துன்பங்களும் நீங்க ஓதவேண்டிய திருப்பதிகம்."

கொடிமாடச் செங்குன்றூரில் திருஞானசம்பந்தர், அடியார்களுடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்பொழுது பனிக்காலம் வந்தது. பல அடியார்களை நளிர் சுரம் பீடித்தது. அதனால் அடியார்கள் வருந்தினர். சம்பந்தரிடம் விண்ணப்பித்தனர். இது கேட்ட சம்பந்தர், "இந்த நளிர் சுரம் வருதல் இந்நாட்டிற்கு இயல்பே என்றாலும், அடியார்களை இந்த நோய் எய்தக்கூடாது. "நீலகண்டமே எந்நாளும் அடியார் இடர் தீர்க்கும் அரிய துணை" என்று எண்ணி "அவ்வினைக்கு இவ்வினை" என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் "வினை தீண்டா! திருநீலகண்டம்!" என்று ஆணையிட்டு அருளினார். உடனே அடியார்களுக்குச் சுரம் தீர்ந்தது மட்டுமல்லாமல் அந்நாட்டிலேயே அந்தச் சுரநோய் தொலைந்தது.

#திருமுறை : #முதல்_திருமுறை_116வது_திருப்பதிகம்

#அருளிச்செய்தவர் : #திருஞானசம்பந்த_சுவாமிகள்

#பதிக_குரலிசை : #ஓதுவார்_கோவை_மருது_சிவகுமார்

இப்பதிகம் கொடிமாடச் செங்குன்றூரில் பாடப்பெற்றிருந்தாலும் பாடல்களில் தலப்பெயர் சொல்லப் பெறாததால், இது தலப்பெயர் இல்லாத பொதுத் திருப்பதிகங்களுள் ஒன்று. கொடிமாடச் செங்குன்றூர் - இத்தலம் இக்காலத்தில் "திருச்செங்கோடு" என்று வழங்கப்பெறுகின்றது.

பதிகப் பலன் : மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவபிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்.

Disclaimer

This channel does not promote or encourage any illegal activities
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Комментарии

Информация по комментариям в разработке