Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Chapter 51 -

  • Sayee Yeesa
  • 2022-12-17
  • 61
Chapter 51 -
iMovie
  • ok logo

Скачать Chapter 51 - бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Chapter 51 - или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Chapter 51 - бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Chapter 51 -

ஶ்ரீபாத ராஜம் சரணம் பிரபத்யே!

#sripadasrivallabha Charitram # Sripada Sampoorna Charitramurutham #Siddha Mangala Stotram #datta #dattatreyaswamy
சிவாயநம இன்னைக்கு ஒரு குழுவாக திருவாசகம் நாம் பாராயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் ஆதிகுரு ஸ்ரீ தத்தாத்ரேயர். ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான சீரடி சாயி அவர்கள் என்னுடைய வாழ்வில் நான்கு வருடங்களுக்கு முன்பு குருவாக வந்து ஆட்கொண்டார். அப்பொழுது அவர் யார் என்பது கூட எனக்கு தெரியாது. குரு என் வாழ்வில் வந்த விதம் இன்று நினைத்தாலும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஏனென்றால் நான் வசிக்கும் இடத்தில் சீரடி சாய் அடியவர்கள் யாரும் இல்லை. அப்பொழுது நான் வாட்ஸப்பில் எந்த குழுவிலும் இல்லை. அப்பொழுது எனக்கு திருவாசகம் என்றால் என்ன என்று கூட தெரியாது. ஆனால் என்னையும் திருவாசகம் படிக்க வைத்து ஒரு குழுவையும் ஆரம்பிக்க வைத்து இன்று நாம் 10,000 திருவாசகத் பாராயணத்திற்கு மேல் செய்திருக்கிறோம் என்றால் அது முழுக்க முழுக்க ஸ்ரீ தத்தாத்ரேயர் கருணை. அதுமட்டுமன்றி ஸ்ரீ தத்தாத்ரேயர் அவதாரமான ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்திர புத்தகத்தை பாராயணம் செய்ய வைத்தார். இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு அட்சரமும் சத்தியம் என்று சொல்லப்பட்டிருக்கும். அதனை என் வாழ்வில் நடந்த மிக மிக முக்கியமான சம்பவங்களினால் அதனை உணர வைத்தார். மாணிக்கவாசகர் உருகி உருகி திருவாசகத்தை பாடி இருப்பார். இறைவன் குருவாக வந்து ஆட்கொள்ளும் பொழுது மாணிக்கவாசகர் உணர்வு நிலை எப்படி இருக்கும் என்பது திருவாசகத்தில் புரியும். திருவாசகத்தின் சில பக்கங்களுக்கு இறைவன் விளக்க உரை எழுத வைத்தார். அப்படி எழுதும் பொழுது பல உள்ளார்ந்த அர்த்தங்களை இறைவன் புரிய வைத்தபோது உள்ளம் உருகியது. குருவாக வந்த இறைவனின் அன்பு புரிந்தது. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று திருமூலர் ஏன் பாடினார் என்பது புரிந்தது. தன்னுடைய உணர்வினை திருவாசக பதிவு செய்த மாணிக்கவாசகருக்கு மனமார்ந்த நன்றியில் கண்கள் நனைந்தது. குருவாக இறைவன் வந்தால் எவ்வளவு தூரம் கருணையை உடையவனாக அன்பு உடையவனாக இருப்பான் என்பது ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரித்திரத்தைப் படிக்கும் போது புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்திரத்தில் வரும் அத்தனை அடியவர்களும் தங்கள் வாழ்வில் சிறியதும் பெரியதுமாக பல்வேறு வகையான தவறுகளை செய்திருக்கிறார்கள். மிக எளிய முறையில் சொல்ல வேண்டும் என்றால் அனைவருக்கும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் அருணகிரிநாதரை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். அருணகிரிநாதர் முதல் பாதி வாழ்வில் பெண்களின் மோகத்தில் மூழ்கியிருந்தார் அடுத்த பாதி வாழ்வில் தான் இறைவன் அவரை ஆட்கொண்டார். மனிதனாக பிறந்தவர்கள் அனைவருமே ஒவ்வொரு பிறவியிலும் தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு வகையான புண்ணியங்கள் பாவங்கள் இவை இரண்டையுமே செய்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் மூலம் நம்முடைய வாழ்வில் ஏதோ ஒரு வழியில் வந்து ஆட்கொள்கிறார். குரு அருள் இன்றேல் திருவருள் இல்லை அதுமட்டுமன்றி மகான்களின் சரித்திரங்கள் படிக்கப்படும் பொழுது அதனுடைய அதிர்வலைகள் நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கிறது. அந்த எண்ணத்தில் இறைவனின் அருளால் ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரிதம் ஆடியோ வடிவில் யூடியூபில் போடப்பட்டு வருகிறது. ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்திரம் சில மாதங்களுக்கு முன்பு மாதங்கி பாலாஜி அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது இதற்கு முன்பு திரு சந்தானம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தாலும் விதிவசத்தால் முழுமையாக அது மொழிபெயர்க்கப்படவில்லை. இறைவன் அருளால் திருமதி மாதங்கி பாலாஜி அவர்களின் மொழிபெயர்ப்பை ஆடியோ வடிவில் ஒவ்வொரு அத்தியாயமாக கொடுத்துக்கொண்டு வருகிறோம். முன்பே இந்த பதிவில் சொல்லப்பட்டது போல குருவின் அன்பு விலைமதிக்க முடியாதது அது அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்தில் திருமதி கீதா பிரியா அவர்கள் தங்களுடைய குரலின் மூலம் ஆடியோவில் பதிவு செய்து வருகிறார். இதில் உள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவெனில் திருமதி கீதா பிரியா அவர்களுக்கு ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் என்றால் யார் என்று கூட தெரியாது. ஆனால் அவர் மூலமாக இந்த புத்தகம் ஆடியோ வடிவில் வருவது மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கிறது. குரு யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆட்கொள்வார் என்பது திருமதி கீதா பிரியா அவர்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும். இதில் ஒரு வினோதம் என்னவென்றால் திருமதி கீதா பிரியா அவர்களை முன்பே எங்களுக்கு தெரியுமா என்றால் இல்லை. அவர்கள் அறிமுகமானது சில வாரங்களுக்கு முன்புதான். அவ்வாறு இறைவன் அறிமுகப்படுத்தி அவர்கள் மூலம் ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் ஸ்ரீ வல்லப சரித்திரம் படிக்கப்பட வேண்டும் என்று இறைவனின் சித்தம். இந்த சரித்திரத்தை கேட்கும்பொழுது மனிதர்களாகிய நாம் எவ்வளவு தான் தவறு செய்திருந்தாலும் இறைவன் நம்மைக் கைவிடுவதில்லை நம்மேல் அபரிதமாக அன்பையும் கருணையையும் காட்டி நம்மை ஆட்கொள்கிறது என்பதை புரிந்து கொள்ளும் விதமாக ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரித்திரம் இருக்கிறது விருப்பம் உடையவர்கள் கீழே உள்ள யூடியூப் பிளேளிஸ்ட் மூலம் கேட்டு குருவருளை பெறலாம்.
Playlist up to chapter 6 :    • Sampoorna Charitramrutham by Geetha Priya UK   சிவாயநம

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]