பூஜ்யாய ராகவேந்த்ராய || POOJYAYA RAGHAVENDRAYA || GURU MANDIRAM || VIJAY MUSICALS

Описание к видео பூஜ்யாய ராகவேந்த்ராய || POOJYAYA RAGHAVENDRAYA || GURU MANDIRAM || VIJAY MUSICALS

POOJYAYA RAGHAVENDRAYA - TAMIL || ALBUM : GURU MANDIRAM || SINGER : RAMU || LYRICS : RAVIRANGASWAMY || MUSIC : SIVAPURANAM D V RAMANI || GURU RAGHAVENDRA || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals

பூஜ்யாய ராகவேந்த்ராய || ஆல்பம் : குரு மந்திரம் ||பாடியவர் : ராமு || பாடல் : ரவிரங்கஸ்வாமி || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || குரு ராகவேந்திரர் || விஜய் மியூஸிக்கல்ஸ்

பாடல் வரிகள் :

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

மகிழ்ச்சி ஊட்டும் மந்த்ராலயம் மனங்கள் பூஜிக்கும் பிருந்தாவனம்
மூர்த்தி கீர்த்தி தீர்த்தமென்றே மூன்றிலும் சிறந்தது மந்த்ராலயம்

நாளும் பேரருள் புரிபவரே ஞாலம் போற்றிட அருள்பவரே
தாகம் தீர்த்து தணிப்பவரே யோகம் யாவும் அருள்பவரே

பேரருள் ஊறிடும் பிருந்தாவனம் ஸ்ரீ ராகவேந்த்ரரின் மந்த்ராலயம்
கோடி நன்மை தரும் குரு பார்வை உலகம் முழுதும் உன் அருள் பார்வை

பிருந்தாவனம் வந்தாலே பெரும் புகழும் அருள்வாயே
தினமும் நாமம் ஜெபித்தோமே அறிவும் பொருளும் தருவாயே

சீடரைக் காத்து காத்திடவா காலமும் பேரருள் புரிந்திடவா
வாழ்ந்திட வாழ்த்திடு வேங்கடவா வாட்டம் போக்கிடு ஸ்ரீராகவா

மந்த்ராலயம் வந்தாலே மகிழ்ச்சி வாழ்வை பெறலாமே
தூங்கபத்ரா ஆற்றினிலே நீராட புண்ணியம் சேர்ந்திடுமே

உடனடி நிவாரணி உன் மந்த்ரமே உலகம் முழுதும் ஒலிக்குதே
உலகம் இயங்குது உன் அருளால் உதயம் பிறக்குது உள்ளத்திலே

வேதனை போக்கி வாழ்வளிப்பாய் சாதனை ஏணியில் ஏற்றிடுவாய்
சோதனையாவும் அகற்றிடுவாய் போதனை ஊற்றித் தேற்றிடுவாய்

நாடும் வீடும் நலம் பெறவே தேடும் யாவும் கிடைத்திடவே
பாடும் பாட்டால் வரம் பெறவே வீடும் பேறும் அருளிடவே

நாளும் பேரருள் புரிபவரே ஞாலம் போற்றிட அருள்பவரே
தாகம் தீர்த்து தணிப்பவரே யோகம் யாவும் அருள்பவரே

பேரருள் ஊறிடும் பிருந்தாவனம் ஸ்ரீ ராகவேந்த்ரரின் மந்த்ராலயம்
கோடி நன்மை தரும் குரு பார்வை உலகம் முழுதும் உன் அருள் பார்வை

பிருந்தாவனம் வந்தாலே பெரும் புகழும் அருள்வாயே
தினமும் நாமம் ஜெபித்தோமே அறிவும் பொருளும் தருவாயே

சீடரைக் காத்து காத்திடவா காலமும் பேரருள் புரிந்திடவா
வாழ்ந்திட வாழ்த்திடு வேங்கடவா வாட்டம் போக்கிடு ஸ்ரீராகவா

மந்த்ராலயம் வந்தாலே மகிழ்ச்சி வாழ்வை பெறலாமே
தூங்கபத்ரா ஆற்றினிலே நீராட புண்ணியம் சேர்ந்திடுமே

உடனடி நிவாரணி உன் மந்த்ரமே உலகம் முழுதும் ஒலிக்குதே
உலகம் இயங்குது உன் அருளால் உதயம் பிறக்குது உள்ளத்திலே

வேதனை போக்கி வாழ்வளிப்பாய் சாதனை ஏணியில் ஏற்றிடுவாய்
சோதனையாவும் அகற்றிடுவாய் போதனை ஊற்றித் தேற்றிடுவாய்

நாடும் வீடும் நலம் பெறவே தேடும் யாவும் கிடைத்திடவே
பாடும் பாட்டால் வரம் பெறவே வீடும் பேறும் அருளிடவே

வேண்டி வேண்டி யாசிக்கொறோம் மீண்டும் மீணடும் வேண்டுகிறோம்
தீண்டவேண்டி பூஜிக்கின்றோம் ஆண்டு ஆண்டாய் காத்திருக்கோம்

வியாசராசனாய் அவதரித்தாய் விவேகாசீடராய் திகழ்ந்தாய்
விவாக ஜோடியைப் பிரிந்தாய் விவாதப் போட்டியை வென்றாய்

ப்ரகலாதனாய் அவதரித்தாய் ஸ்ரீஹரி நாமத்தை உச்சரித்தாய்
ஹிரண்யாசூரனை எச்சரித்தாய் ஹரியை தூணிலும் காட்டுவித்தாய்

ஜீவ சமாதி அடைந்தாயே யோகசயனம் கொண்டாயே
பிறவா பேரின்பம் பெற்றாயே இறைவா பேரருள் புரிவாயே

வியாழக்கிழமை பிறந்தாயே விந்தையாவும் புரிந்தாயே
தந்தை தாயும் ஆனாயே சிந்தை முழுதும் நிறைந்தாயே

இல்லம் தோறும் உன்படமே உள்ளம் தோறும் உன் உருவே
நடப்பன யாவும் உன் செயலே நட்புடன் நாளும் அருள்வாயே

கமண்டல நீரைத் தெளித்தாயே சரஸ்வதி பேயை தெளிவித்தாய்
யாகம் ஒரு மண்டலம் செய்தாயே யாத்திரை பலவிடம் சென்றாயே

புவனம் செழிக்க புவனகிரியில் ஜனனம் செய்த ஜகத் குருவே
கணமும் சிதறா கவனத்துடன் மனனம் செய்தாய் மறைபலவே

வாசிக்க வாசிக்க வசியமாவாய் நேசிக்க நேசிக்க நிவர்திப்பாய்
யாசிக்க யாசிக்க பலன் அளிப்பாய் பூசிக்க பூசிக்க அருள் தருவாய்

மூலராமரை ஆட்டுவித்தாய் மோட்ச யோகத்தை நீர் கொண்டாய்
தயவு தாக்ஷனை காட்டிடுவாய் வாழ்த்தி வாஞ்சனையோடருள்வாய்

மார்பில் ராமரைக் கொண்டவரே வாக்கில் யோகம் அருள்பவரே
வேள்வி யாகம் செய்தவரே தாழ்விலா வாழ்வை அருள்பவரே

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமே ஏற்றம் ஏற்றம் முன்னேற்றமே
போட்டி பூசல் மறைந்திடுமே வாட்டும் வேதனை நீங்கிடுமே

வாழ்வை போதிக்க வந்தவரே தாழ்வைப் பூட்டி தாழிட்டவரே
ஏழ்மைப் பூட்டை உடைத்தவரே கீழ்மை ஓட்டி அருள்பவரே

ஈவு இரக்கம் காட்டிடுவாய் நோவு நொடியைப் போக்கிடுவாய்
தாவும் மனதை அடக்கிடுவாய் யாவும் நலமாய் நல்கிடுவாய்

நோக்கம் யாவும் நிறைவேறவே ஆக்கம் ஆற்றல் அருள்பவரே
ஏக்கம் யாவும் தீர்ந்திடுமே ஊக்கம் ஊட்டு உள்ளத்திலே

பேச்சில் மூச்சில் கலந்திடுவாய் கூச்சம் கோபம் களைந்திடுவாய்
பூஜை நேரத்தில் மகிழ்ந்திடுவாய் போற்றிட போற்றிட அருளிடுவாய்

நீடூழி நீடூழி வாழ்ந்திடவே பேரருள் பேரருள் புரிந்திடய்யா
பிறவா மோட்ச பேரினையே கமண்டல நீரால் அளித்திடய்யா

அமைதி வாழ்வை அருளிடுவாய் அவசரச் சூழலில் உதவிடுவாய்
விஸ்வரூபம் காட்டிடுவாய் அசரீரி வாக்கால் உயிர்த்திடுவாய்

எத்தனை எத்தனை சூழ்ச்சிகளை எப்படி எப்படி முறியடித்தாய்
அத்தனை அத்தனை லீலைகளை அத்தனை அத்தனை நீ செய்தாய்

மாமிசம் மாம்பழம் ஆனதய்யா பட்டமரம் துளிர் விட்டதய்யா
சடலம் உயிருடன் எழுந்ததய்யா யாகம் மழையை பொழிந்ததய்யா

தோஷம் யாவும் போக்கிடுவாய் மோசம் போகாது காத்திடுவாய்
வேஷதாரியை ஓட்டிடுவாய் ஆசா பாசம் காட்டிடுவாய்

திருஷ்டியெல்லாம் போக்கிடுவாய் அதிர்ஷ்ட பலனை ஊட்டிடுவாய்
ஸ்ருஷ்டிகர்த்தா காத்திடுவாய் சிரமம் எல்லாம் அகற்றிடுவாய்

வாக்கால் நோக்கால் லீலைகளால் பூமியை காக்கும் ஸ்ரீராகவா
தேசசஞ்சாரம் செய்தாயே திவ்யதரிசனம் தந்தாயே

Комментарии

Информация по комментариям в разработке