Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть மாணிக்கவாசகர் வரலாறு

  • Selviyin Selvan
  • 2023-06-22
  • 222
மாணிக்கவாசகர் வரலாறு
  • ok logo

Скачать மாணிக்கவாசகர் வரலாறு бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно மாணிக்கவாசகர் வரலாறு или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку மாணிக்கவாசகர் வரலாறு бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео மாணிக்கவாசகர் வரலாறு

மாணிக்கவாசகர் வரலாறு


திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன், அருள்வாசகர், மாணிக்கவாசகர், என்ற  சிறப்புகளைப் பெற்று தமிழுக்குத் திருவாசகத்தைத் தந்து தெய்விகத் தமிழை உலகறியச் செய்த மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளே வாழ்ந்து இறைவனோடு இரண்டறக் கலந்த நாள் இன்று. ஆம், ஆனி மகம்  தில்லையில் இறைவனுடன் நேரடியாகக் கலந்து மாணிக்கவாசகர் முக்தி பெற்ற நாள்!

ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழி என்றும், இத்தாலி காதலின் மொழி என்றும் கூறுவது பொருந்தும் என்றால் தமிழ் பக்தியின் மொழி என்று கூறுவதும் பொருந்தும் என்கிறார் அறிஞர் தனிநாயக அடிகளார். அவரது கூற்று முற்றிலும் உண்மை. இத்தகைய சிறப்புமிக்க பக்தியின் மொழியாகத் தமிழ் மொழி திகழ்வது நமக்கெல்லாம் மிகவும் பெருமை, வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் தமிழுக்குக் கிடைத்த அருள்கொடைகள் .

சைவத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் சிவன் கோயில்களில் பாடிய பதிகங்களில் மறைந்தவை போகக் கிடைத்தவை 8,000 பதிகப் பாடல்கள் ஆகும். இதன் தொடர்ச்சியாக அந்தக் காலகட்டத்தில் மாணிக்கவாசகர் தோன்றிப் பதிகம் பாடினார்.

சிவபக்தர்கள் பலரது வீடுகளில் வைத்து வணங்கப்படும் நூல் திருவாசகம்! அந்த மாபெரும் பொக்கிஷத்தை, நமக்கெல்லாம் தந்து அருளியவர் சைவ சமயக் குரவர்கள், நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் ஆவார்.

மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட, பெரும் நூல்களுள் முதலாவது திருவாசகம், மற்றொன்று திருக்கோவையார் என்பதாகும். சிவனைப் பற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே இந்த இரண்டு நூல்கள்.

குரு வடிவாகக் காட்சியளித்து, திருவடி தீட்சை தந்து மறைந்த சிவபெருமானை, மீண்டும் பெற நினைத்து, நனைந்து நனைந்து பாடியவை திருவாசகம் எனும் தேனருவி. இறைவனின் பேரன்பையும் பெருங்கருணையும் விளக்கும் தெவிட்டாத நூல்.

திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற தொடர் பாடல்களின் கனிவுத் தன்மையைப் புலப்படுத்தும்.

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்

பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த

செல்வமே சிவபெரு மானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே.

இப்பாடலின் பொருளுணர்ந்த டாக்டர் ஜி.யூ. போப் ‘எலும்பை உருக்கும் பாட்டு’ என்று கூறினார். திருவாசகத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்தார். மாணிக்கவாசகரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார். அத்தகைய சிறப்புமிக்க திருவாசகத்தைப் பற்றியும் மாணிக்கவாசகப் பெருமான் பற்றியும் முழுவதும் விரித்துக் கூற இந்த ஒரு கட்டுரையில் முடியாது. அவரைப் பற்றிய ஒரு சிறு முன்னுரையாக இந்த கட்டுரையைக் காண வேண்டும்.

தாயுமானவர், இராமலிங்கர் ஆகியோரது பாடல்கள் மாணிக்கவாசகரது பாடல் அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளன எனில் இதன் சிறப்பு விளங்கும்.

திருவாசகத்தைப் படித்தால் உள்ளம் இளகும். உயிர் உருகும். கரும்புச் சாற்றில் lதேன் கலந்து, பால் கலந்து, கனியின் சுவை கலந்து இனிக்கும் திருவாசகப் பாடல்கள் உயிரில் கலந்து உவகை தரும் என்று இராமலிங்க வள்ளலார் கூறுவார். திருவாசகத்தில் சிவத்தை உணர்ந்ததால் அருட்பெரும் ஜோதி தனிபெருங்கருணை என்று இறைவனை வள்ளலார் குறிப்பிட்டார்.

திருவாசகம் 656 பாடல்களைக் கொண்டது. 51 பிரிவுகள் உள்ளன. பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறை என்று அழைக்கப்படுகிறது. சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் வரை அமைந்துள்ளது.

#selviyinselvan #trichy #devotional #viral #vlog #sivan @selviyinselvan #selviyinselvan #trichy

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]