Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть புதுமை 36. உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் இளைப்பாற்றியடைய ஏழை எளியோருக்கு தர்மம் செய்யுங்கள்!

  • Catholic Tamil Official
  • 2023-11-18
  • 217
புதுமை 36. உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் இளைப்பாற்றியடைய ஏழை எளியோருக்கு தர்மம் செய்யுங்கள்!
Catholic Tamilcatholictamilபாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபைகத்தோலிக்கம்தமிழ்ஆலயம் அறிவோம்நற்கருணைஆராதனைவானொலிதிருப்பலி நேரலைசூசையப்பர்பாத்திமாஆலயங்கள்தவக்காலம்புனிதர்கள்பாடல்கள்மறைக்கல்விநூலகம்செபமாலைநவநாள்சிலுவைப்பாதைபிரார்த்தனைஉத்தரிக்கிற ஸ்தலம்மோட்சம்நரகம்திருக்குடும்ப ஜெபம்குழந்தை இயேசுமறையுரை சிந்தனைசிலுவைபரிகாரம்திருவிவிலியம்பாவசங்கீர்த்தனம்ஆன்மீகம்தியானம்மரியன்னைக்கான போர்
  • ok logo

Скачать புதுமை 36. உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் இளைப்பாற்றியடைய ஏழை எளியோருக்கு தர்மம் செய்யுங்கள்! бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно புதுமை 36. உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் இளைப்பாற்றியடைய ஏழை எளியோருக்கு தர்மம் செய்யுங்கள்! или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку புதுமை 36. உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் இளைப்பாற்றியடைய ஏழை எளியோருக்கு தர்மம் செய்யுங்கள்! бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео புதுமை 36. உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் இளைப்பாற்றியடைய ஏழை எளியோருக்கு தர்மம் செய்யுங்கள்!

இத்தாலி நாட்டில் அவேர்சா என்ற நகரத்தில் புனித அகுஸ்தினார் சபையின் துறவியான இலாரியோன் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களின் பேரில் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர் மரணமடைந்த தன் தந்தைக்காக சில திருப்பலிகள் ஒப்புக்கொடுத்தார். ஒரு நாள் தன் தந்தையின் ஆன்மாவுக்காக திருப்பலி ஒப்புக் கொடுக்கையில் அருளப்பன் என்பவனை பூசைக்கு உதவி செய்ய அழைத்திருந்தார். அருளப்பன் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் பேரில் அதிக பக்தி கொண்டவன். அவனும் முன்னமே பாவசங்கீர்த்தனம் செய்து அந்தப் புண்ணியத்தை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக ஒப்புக்கொடுத்திருந்தான்.

திருப்பலி முடிந்த பிறகு குருவானவர் இலாரியோன் தன் தந்தையின் ஆன்மா குறித்து அருளப்பனுக்கு உணவு கொடுக்க அவனைத் தன் அறைக்கு அருகே இருக்கச் சொன்னார். உணவு வேளை வரை குருவானவர் தம் அறைக்குள்ளே செபித்துக் கொண்டிருந்தபோது அருளப்பன் முற்றத்தில் இருந்தான். இந்தச் சூழ்நிலையில் கதவு அடைத்திருந்தாலும் ஒருவன் உள்ளே வந்தான். வந்தவனுடைய முகமும், தோற்றமும் அவன் பிரபு குலத்தைச் சார்ந்தவனாகக் காட்டியது. வந்தவன் அருளப்பனிடம் குருவானவர் எங்கே இருக்கிறார்? அவரிடம் ஓர் அவசரச் செய்தி சொல்ல வேண்டும் என்றான்.

அருளப்பன் உடனே போய் குருவானவரை அழைத்து வந்தான். வந்தவன் குருவானவரிடம் தனக்கு உணவு அளிக்குமாறு கெஞ்சிக் கேட்டான். பார்த்தால் பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவன் போலிருக்கிறான், நம்மிடம் உணவு கேட்கிறானே? என்று ஆச்சரியப்பட்டு உள்ளே போய் தன் சாப்பாட்டின் ஒரு பங்கை அவனுக்குக் கொடுத்தனுப்பி மடத்தின் ஓரிடத்தில் அமர்ந்து சாப்பிடச் சொல்லியனுப்பினார்.

குருவானவரும் அருளப்பனும் வந்தவன் யாராக இருக்கும் என்று அவன் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த அறைக்குள் அவன் வந்தான். மூடியிருந்த அறைக் கதவைத் திறக்காமல் இவன் எப்படி உள்ளே வந்தான்? ஒருவேளை இவர் சம்மனசோ? என்று குருவானவர் கேள்வியெழுப்ப, அருளப்பனோ, "வந்தவன் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களில் ஒருவன். எப்படிச் சொல்கிறேனென்றால், நீங்கள் இந்த ஆன்மாவுக்காக இன்று திருப்பலி ஒப்புக் கொடுத்தீர்கள். நானும் இந்த ஆன்மா குறித்து சில புண்ணிய காரியங்களைச் செய்தேன்

பின்னர் அருளப்பன் வந்தவனை அழைத்துக் கொண்டு அவன் முன்பு அமர்ந்திருந்த இடத்திற்குப் போனான். அவன் அருளப்பனைப் பார்த்து, “தம்பி, ஆண்டவர் எனக்கு உணவு தந்தமைக்காக அவருக்கு நன்றி கூறுகிறேன். அவரைத் தோத்தரித்து வணங்க நாமிருவரும் முழங்காலிலிருந்து உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காக ஒரு கர்த்தர் கற்பித்த செபமும், ஒரு மங்கள வார்த்தை செபமும் சொல்லி செபிப்போம்' என்று கூற முழங்காலிலிருந்து வேண்டிக் கொண்டார்கள்.

செபம் முடிந்தவுடன் அவனை வழியனுப்ப வாசலுக்கு வந்த அருளப்பனிடம் அவன் கையைப் பிடித்துக் கொண்டு, "அருளப்பா, குருவானவரிடம் சென்று அவர் தம் தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இனிமேல் வேண்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அந்த ஆன்மா இப்போது மோட்சத்துக்குப் போகிறதென்று தெரியப்படுத்து” என்று கூறினான். அடுத்த வினாடி திடீரென்று பளிச்சிட்ட மின்னலைப்போல் பிரகாசித்து மறைந்து போனான்.

பயந்துபோன அருளப்பன், "சுவாமி” என்று குரல் எழுப்பியபடி மூர்ச்சையாகி மயக்கத்தில் வீழ்ந்தான். அவனுடைய சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த குருவானவர் அருளப்பனுக்கு நினைவு திரும்பச் செய்து நடந்ததை விசாரித்தார். அவன் சொன்ன விவரங்களைக் கேட்ட பிறகு வந்தவர் குருவானவரின் தந்தையின் ஆன்மாதான் என்று இருவருமே தீர்மானித்து உறுதிப்படுத்தினர்.

கிறிஸ்தவர்களே! நீங்கள் எத்தனை திருப்பலி காண முடியுமோ அத்தனை முறையும் பராக்கில்லாமல் பக்தியோடு திருப்பலி கண்டு, அந்தப் புண்ணியத்தை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காக ஒப்புக்கொடுத்தால் அதனால் அவர்கள் வேதனை குறையும். நீங்கள் பிச்சை கொடுக்கும்போது அந்தத் தர்மத்தை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காக ஒப்புக்கொடுங்கள். அனுதினமும் நீங்கள் சாப்பிட்டு முடித்த பிறகு உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காக ஒரு கர்த்தர் கற்பித்த செபமும், ஒரு மங்கள வார்த்தை செபமும் வேண்டிக்கொண்டு ஒப்புக்கொடுப்பது ஒரு நல்ல அருமையான வழக்கம்.

தாய், தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டிருப்பார்கள், படிக்க வைக்கவோ, அவர்களை நல்ல நிலையில் வைக்கவோ கடன்பட்டிருப்பார்கள். எனவே, பெற்றோருக்கு உதவுவது, அவர்கள் கடன் சுமைகளைக் குறைப்பது பிள்ளைகளின் தலையான கடமையல்லவா? அவர்களுக்குப் பிள்ளைகள் பெரிதும் கடன் பட்டிருக்கின்றனர். அந்தக் கடனை முழுவதும் தீர்க்க முடியாவிட்டாலும், கொஞ்ச மேனும் அதைத் தீர்க்க அவர்களின் ஆத்துமங்களுக்காக அடிக்கடி ஜெபமாலை செபித்தல், ஒருசந்தி, தானதர்மம், திவ்ய பலிபூசை ஒப்புக்கொடுத்தல் பேன்றவற்றைச் செய்யலாம் அல்லவா?

உங்களைப் பெற்ற தாய், தகப்பன் இறந்த பிறகு உம் முன்னே தோன்றி "எனக்கொரு பிடி சோறு, பிடியரிசி கொடுப்பாயா?” என்று கேட்டால் உன்னால் கொடுக்காமல் இருக்க முடியுமா? ஒருவேளை அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றாமல் நீ தட்டிக் கழித்தால் உன்னைவிட ஈவிரக்கமற்ற, கல்நெஞ்ச பிள்ளைகள் யாராயிருக்க முடியும்?

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]