கரிசல் காட்டு காட்டாறு கி.ராவின் பேரன்களில் ஒருவன் பேசுகிறேன்- "எழுத்து தான் அரசியல்

Описание к видео கரிசல் காட்டு காட்டாறு கி.ராவின் பேரன்களில் ஒருவன் பேசுகிறேன்- "எழுத்து தான் அரசியல்

நூறு வருடங்கள் கதை தின்று வாழ்ந்த கி.ரா எனும் கிழவனின் கடைசி பேரன்களில் வரிசையில் நானும் ஒருவன்.

கல்லுளிமங்கன் என்ற சொல்லுக்கு பொதுவில் தவறான அர்த்தம் தான் கற்பிக்கப்பட்டுள்ளது. அதன் உண்மையான் அர்த்தம் கரிசல் நிலத்துக்காரனுக்குத்தான் தெரியும். எவ்வளவு ஊற்றியும் நீர் உள்ளிழுக்காத அந்த களிமண் போன்றவனைத் தான் கல்லுளிமங்கன் என்பார்கள்.

இது போல லட்சம் கதைகள் வாய் மொழியாக கி.ரா அவர் தொட்டு தோப்பில் முஹம்மது மீரான் அவர் தொட்டு கழனியூரான் அவர் தொட்டு நாறும்பூ நாதன் அவர் தொட்டு உதய சங்கர் அவர் தொட்டு கார்த்திக் புகழேந்தி என கற்றுக்கொண்டது ஏராளம்.

எழுதுவது நன்றாக எழுதுவது தன்னை அடையாளப்படுத்தி எழுதுவது என எழுத்தே ஒரு அரசியல் தான் என கற்றுக்கொண்ட கதையை பேசியிருக்கிறேன்.

Комментарии

Информация по комментариям в разработке