🤲 கைகளை ஏந்தி விட்டேன் கண்ணீரைச் சிந்தி விட்டேன் ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

Описание к видео 🤲 கைகளை ஏந்தி விட்டேன் கண்ணீரைச் சிந்தி விட்டேன் ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

கைகளை ஏந்தி விட்டேன்
கண்ணீரைச் சிந்தி விட்டேன்
கல்புக்குள் உனை நினைத்து இறைவா
உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா
உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா
----------------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் ஸாயிர் H.அப்துர் ரஹீம் (மதிதாசன்) அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "கைகளை ஏந்தி விட்டேன் கண்ணீரைச் சிந்தி விட்டேன்" என்ற பாடல்.
------------------------------------------------------------------------------------------------------------------
பாடல் வரிகள்

கைகளை ஏந்தி விட்டேன்
கண்ணீரைச் சிந்தி விட்டேன்
கல்புக்குள் உனை நினைத்து இறைவா
உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா
உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா

1
சரணம் அடைந்துவிட்டேன்
ஸஜ்தாவில் வீழ்ந்து விட்டேன்
சகலமும் நீ என்று
சத்தியத்தை உணர்ந்து விட்டேன்
அரணாக எனைக் காத்து முரணான செயல் தடுத்து
அறமான தீனுக்காக இறைவா
என்னை உரமாக்கி வைத்திடுவாய் இறைவா
2
ஹக்காக நின்றிலங்கும்
மிக்கோனே துணை செய்வாய்
துக்கமேதும் தோன்றாமல்
தக்கபடி காத்திடுவாய்
கண்ணான நபிவழியில் என்னை நீ நடத்திடுவாய்
பொன்னான தீன் நெறியில் இறைவா
உந்தன் புகழ்பாட வைத்திடுவாய் இறைவா
3
கிருபை செய்திடுவாய்
கேடுகளை தடுத்திடுவாய்
கருணை மழைபொழிந்தே
கவலையெல்லாம் போக்கிடுவாய்
பெரியோரைப் பேணிடவும் நெறியோடு வாழ்ந்திடவும்
வறியோர்க்கு உதவிடவும் இறைவா
என்னை வளமோடு வாழவைப்பாய் இறைவா

கைகளை ஏந்தி விட்டேன்
கண்ணீரைச் சிந்தி விட்டேன்
கல்புக்குள் உனை நினைத்து இறைவா
கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா
உந்தன் கருணைக்கு ஏங்குகின்றேன் இறைவா
----------------------------------------------------------------------------------------------------------------

Комментарии

Информация по комментариям в разработке