Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்..

  • தெய்வீகம்_Official
  • 2025-11-21
  • 601
மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்..
  • ok logo

Скачать மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்.. бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்.. или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்.. бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்..

நீங்காத செல்வமும், வளமிக்க கல்வியும், நீண்ட ஆயுளும் தரும் நரசிம்மர் ஸ்தோத்திரம்......
#narasimhaswami
#narasimhasongs
#eeswaran
#to relief from disease
#divine
#tamil
#நீண்ட ஆயுளும் தரும்
#நீண்ட ஆயுளும்
#நரசிம்மர் ஸ்தோத்திரம்

ஸ்ரீ ஈஸ்வர உவாச:
1. அன்றலர்ந்த செந்தாமரையினை வென்று நிற்கும் திருமுக மண்டலமும், திருநேத்ரமும் படைத்தவன் எம்பெருமான். அடி பணிந்தோரின் பகைவர்களை அறவே பூண்டோடு அழித்திடுபவன்.
தமது சிம்ம கர்ஜனையால் அண்டங்கள் அனைத்தையும் அதிரச் செய்தவன். அப்படிப்பட்ட எங்கும் பரவி நின்ற உக்ர ரூபியான எம்பெருமானை நான் வணங்குகிறேன் என்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன்.
2. திதியின் மகனும், கொடிய அரக்கனுமான் இரணியன், உலகத்தில் எவராலும் தன்னைக் கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே. உம்மை நான் வணங்குகிறேன்.
3. விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையிலுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையிலுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார்.அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ள விஸ்வரூபம் கொண்ட, அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.
4. சூரியன, சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட (தேஜஸ்) ஒளிமிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகறேன்.
5 . சக இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோ முகம்’ என போற்றப்படும் சக்தியையுடைய நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.
6. பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன்.
7. உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல் ‘நரசிம்மா’ என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோய்களையும் தீர்ப்பவரே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.
8. அண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே! எல்லா நன்மையை அருள்வதால் ‘பத்ரை’ என்று பெயர் பெற்ற ‘ஶ்ரீ லக்ஷ்மி தாயாரால்’ விரும்பப்படுபவரே! சிறப்பு மிக்க ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.
9. மரணகாலத்தில் எம தூதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்கள் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலியவந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவருமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.
10. எந்த கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரசிம்மரை வணங்குகிறேன்.
11. இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து சரணடைகிறேன்.
12. இந்த மந்திரங்களுக்கு எல்லாம் ராஜாவான ஸ்ரீ மந்திர ராஜத்தின் பதங்களின் தத்வ நிர்ணயம் சங்கரனான என்னால்மிகவும் உகந்து வெளியிடப்பட்டது. இந்த ஸ்ரீ மந்திர ராஜ பத ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் மதியத்தில், மாலையில் யார் உகந்து உரைக்க வல்லார்களோ அவர்களுக்கு நீங்காத செல்வமும், வளமிக்க கல்வியும், நீண்ட ஆயுளும் நலமுடன் விளங்கும் என்று பலச்ருதி கூறி முடிக்கிறார் ஸ்ரீ ஈஸ்வரன்.

கோபம், வீரம், தேஜஸ் (பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர்என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளும் தரவல்லவருமான அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

ஶ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் சம்பூர்ணம்
ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் என்ற மகாதெய்வத்திற்கு நமஸ்காரம்.
லக்ஷ்மி தாயாருக்கு நமஸ்காரம்.
பூமாதேவிக்கு நமஸ்காரம்.
நீளாதேவிக்கு நமஸ்காரம்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]