தலை விதி கொஞ்சமாவது எடம் தந்தா தான் இந்த1வார்த்தை 1முறையாவது சொல்லி இந்த சாமியகும்புடவும்முடியும்

Описание к видео தலை விதி கொஞ்சமாவது எடம் தந்தா தான் இந்த1வார்த்தை 1முறையாவது சொல்லி இந்த சாமியகும்புடவும்முடியும்

Pesum Deivam Maha Periyava:
Email id : [email protected]


SRI CHANDRASEKARENDRA SATHGURU AKSHARA PAAMALAI
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சத்குரு அட்க்ஷரப்பாமாலை

அன்பின் வடிவமான சங்கரன்

அத்வைத பேரொளி ஞான சங்கரன்

அம்மை அப்பனான அருங்குரு சங்கரன்

ஆனந்த குருவான காஞ்சி சங்கரன்

இம்மையும் மறுமையும் காக்கும் சங்கரன்

ஈசனோடு ஆடிடும் இணையடி சங்கரன்

உன்னத நிலைகொள் உத்தம சங்கரன்

ஊழ்வினை நீக்கிடும் ஊர்தவ சங்கரன்

எந்தனை ஆளும் எழில்மிகு சங்கரன்

ஏற்றமும் அருளிடும் ஏகாந்த சங்கரன்

ஐம்புலன் அடக்கியே ஆண்டிடும் சங்கரன்

ஒப்புயர்வில்லா ஒளிர்மிகு சங்கரன்

ஓதிடும் வேதத்தின் உட்பொருள் சங்கரன்

ஒளவைபோல் அருள்மொழி உணர்த்தும் சங்கரன்

கண்ணனின் இமைபோல் காக்கும் சங்கரன்

காந்தமாய் கவர்ந்தனை ஈர்க்கும் சங்கரன்

கிள்ளை எனைஏற்று மகிழும் சங்கரன்

கீர்த்தனைகள் பாடி துதித்திடும் சங்கரன்

குறைகளை போக்கிடும் கொற்றவன் சங்கரன்

கூட்டின் மெய்ப்பொருள் உணர்த்தும் சங்கரன்

கேடில் விழிச்செல்வமாம் ஞான சங்கரன்

கைகொண்டு அணைத்தனை காக்கும் சங்கரன்

கொன்றை மலர்தனை சூடும் சங்கரன்

கோபுர கலசமாய் திகழும் சங்கரன்

கௌதமர் போற்றிடும் கருணா சங்கரன்

சந்திர பிறைகொள் சுந்தர சங்கரன்

சாந்த சொரூபமாய் வாழும் சங்கரன்

சிறுமை மதியினை மாற்றும் சங்கரன்

சீலமும் ஞானமும் உணர்த்திடும் சங்கரன்

சுந்தரன் போற்றிடும் பித்தன் சங்கரன்

சூழ்ந்த இருளகற்றும் மாய சங்கரன்

செல்வமும் வளமையும் அருளும் சங்கரன்

சேர்ந்த மெய்பொருள் உணர்த்தும் சங்கரன்

சைவத்திருமுறை போற்றும் சங்கரன்

சொல்லும் பொருளும் காக்கும் சங்கரன்

சோர்விலா மனத்திடை வாழும் சங்கரன்

சௌந்தர்ய லகரியை அருளிய சங்கரன்

ஞமலியின் எந்தனை சேர்த்த சங்கரன்

ஞானத்தின் வடிவான சத்குரு சங்கரன்

தத்துவ நெறிதனை அளிக்கும் சங்கரன்

தாயாய் பாசமும் பொழிந்திடும் சங்கரன்

திக்கெட்டும் புகழ்கொள் ஜகத்குரு சங்கரன்

தீஞ்சுவை அமுதென சொற்சுவை சங்கரன்

துன்ப இன்னல்கள் அகற்றும் சங்கரன்

தூயவர் மனத்தினில் அமர்ந்திடும் சங்கரன்

தென்திசை அமர்ந்திட்ட குருவடி சங்கரன்

தேனினும் இனிய நல்வாய்மொழி சங்கரன்

தொண்டர்தம் அன்பிலே மகிழும் சங்கரன்

தோடுடை செவியனாய் ஆடும் சங்கரன்

நடமாடும் தெய்வமாம் காஞ்சி சங்கரன்

நானிலத்தில் தர்மமதை காக்கும் சங்கரன்

நிறைமதி அழகென நிறைந்த சங்கரன்

நீக்கமற எங்கும் நிறைந்த சங்கரன்

நுண்ணுயிர் அனைத்தும் காக்கும் சங்கரன்

நூலரிவில் மெய்ஞான சங்கரன்

நெஞ்சமதில் வஞ்சகத்தை அகற்றும் சங்கரன்

நேசமும் காட்டும் தாய்மை சங்கரன்

நொடிப்பொழுதில் எமை காக்கும் சங்கரன்

நோய் நொடி தீர்க்கும் மருத்துவ சங்கரன்

ஜோதி வடிவமான ஜோதி சங்கரன்

பண்பினைக் காக்கும் பரமசிவ சங்கரன்

பாமரரை அறிஞராய் மாற்றும் சங்கரன்

பிள்ளாயினி மொழி கேட்டு மகிழ்ந்த சங்கரன்

புண்ணிய சீலனாய் வாழும் சங்கரன்

பூமியில் தர்மத்தை ஊன்றிய சங்கரன்

பெற்ற தாய்போல் நமை பேணும் சங்கரன்

பேரின்ப நிலைகாட்டும் மோட்க்ஷ சங்கரன்

பைங்கிளி அம்மையின் பால சங்கரன்

பொற்பதம் தூக்கியே ஆடும் சங்கரன்

போற்றிடும் பாமாலை ஏற்கும் சங்கரன்

மகிமை காட்டியே மகிழ்விக்கும் சங்கரன்

மரவுரிதரித்த மாமுனி சங்கரன்

மாந்தர் குறைதீர்க்கும் மங்கள சங்கரன்

மின்னிடும் ஒளிபோல் மேனிகொள் சங்கரன்

மீட்டிடும் வீணையின் நாத சங்கரன்

முப்பிறப்பு வினைதனை அகற்றும் சங்கரன்

மூன்றாம் பிறை அணி சூடும் சங்கரன்

மென்மையாய் அருள்மொழி விழையும் சங்கரன்

மேன்மைகொள் வாழ்வையே அளிக்கும் சங்கரன்

மைந்தனாய் எனைஏற்று மகிழும் சங்கரன்

மோகம் அழித்து மெய்ஞானம் கொள் சங்கரன்

மௌனம் காக்கும் மாதவ சங்கரன்

யஜுர்வேத சாரமாய் விளங்கும் சங்கரன்

யாவர்க்கும் குருவான மூர்த்தி சங்கரன்

ரம்யமாய் மனதினில் உலவும் சங்கரன்

ராப்பகல் இல்லா உலகை ரட்ஷிக்கும் சங்கரன்

ரீங்கார நாதத்தில் லயிக்கும் சங்கரன்

ருத்திராக்ஷ மாலைதனை அணியும் சங்கரன்

ரூபமில்லா தத்துவத்தின் உருவ சங்கரன்

ரோகம் நீக்கி உயிர்காக்கும் சங்கரன்

ரௌத்திரம் தவிர்த்து அன்பு நாட்டிடும் சங்கரன்

லலிதாம்பிகை அருள்பால சங்கரன்

லாவண்யமாய் மனதை ஈர்க்கும் சங்கரன்

லிங்க வடிவமாய் அருளும் சங்கரன்

லீலாவிநோதனாய் லீலைகொள் சங்கரன்

வள்ளலாய் அருள்கரம் காட்டும் சங்கரன்

வானவர் போற்றும் தேவ சங்கரன்

வில்வ மாலைதனை ஏற்கும் சங்கரன்

வெண்திருநீரணியும் சிவகுரு சங்கரன்

வேள்விகள் காத்திடும் வேத சங்கரன்

வையகம் போற்றிடும் காஞ்சி சங்கரன்

அனைத்துமாய் தோன்றியே அருளும் சங்கரன்

ஆருயிர்க்கெல்லாம் தாய்மை சங்கரன்

விண்ணும் மண்ணுமாய் விளங்கும் சங்கரன்

சந்திர வடிவம் கொள் சுந்தர சங்கரன்

அறுபத்தெட்டாம் பீட ஆனந்த சங்கரன்

காமாட்சி பதம் பணியும் காமகோடி சங்கரன்

காமகோடி பீடத்தை ஆளும் சங்கரன்

ஏன் அகத்தில் அமர்ந்தனை காக்கும் சங்கரன்

அடியேன் வெங்கடேசன் மாலையை ஏற்று அருளும் சங்கரன்

அன்னபூர்ணாஷ்டகம் அருளிய சங்கரன்

கனகதாரா ஸ்தோத்திரம் உரைத்திட்ட சங்கரன்

பிடிஅரிசி தர்மத்தை காட்டிய சங்கரன்

திருப்பாவை திருவெம்பாவை திருகொளாருபதிகம்

உரைத்திட வகை செய்த சங்கரன்

அபார கருணா சிந்தும்

ஞானதம் சாந்தரூபிணம்

ஸ்ரீ சந்திர சேகர குரும்

பிரணதாத்மி விபாகரம்

ஸ்ரீ பாத குரும் சங்கரம் போற்றி போற்றி

சர்வக்யன் சர்வவியாபி மகாபெரியவா போற்றி போற்றி

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

திருச்சிற்றம்பலம்...
periyava
mahaperiyava experiences

Комментарии

Информация по комментариям в разработке