இன்று கேட்க பலன் பன்மடங்கு குடும்பத்தில் இருக்கும் குழப்பங்களை தீர்க்கும் பதிகம் Purattasi Pournami

Описание к видео இன்று கேட்க பலன் பன்மடங்கு குடும்பத்தில் இருக்கும் குழப்பங்களை தீர்க்கும் பதிகம் Purattasi Pournami

#purattasi #pournami #venkatavanthuthi #ummaheswaraviratham #umamaheswara #sathyanarayana #sathyanarayanaarthi #tamil
#thirugnanasambandar #thevaram #sirkazhi #shiva #saivam #sambandar
அனைவரும் இல்லற வாழ்க்கை இனிமையாக
இருக்க சொல்லவேண்டிய பதிகம்; குடும்பத்தில்
இருக்கும் குழப்பங்களை தீர்க்கும். சகல
ஐஸ்வர்யங்களும் கொடுக்கும்.

thanls to புலவர் சா இராமாநுசம் - #வேங்கடவன்துதி

#திருஞானசம்பந்தர்
#மூன்றாம்திருமுறை பதிகம் எண்-24

மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில்நல் லகதிக்கு யாதுமோர் குறைவில்லை
கண்ணில் நல் அஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்’லாளொடும் பெருந்தகை யிருந்ததே.

போதையார் பொற்கிண்ணத்து அடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத் தான்எனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையால் அவளொடும் பெருந்தகை யிருந்ததே.

தொண்டணை செய்தொழில் துயரறுத்து உய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணை ஆகவோர் பெருந்தகை யிருந்ததே.

அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.

அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடைuயுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை அவளொடும் பெருந்தகை யிருந்ததே.

மற்றொரு பற்றில்லை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை ஆளுடைப் பெருந்தகை யிருந்ததே.

குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை அவளொடும்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.

அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவால் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீர் அவளொடும் பெருந்தகை யிருந்ததே.

நெடியவன் பிரமனும் நினைப்பரிது ஆய்அவர்
அடியொடு முடியறி யாஅழல் உருவினன்
கடிகமழ் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிடிநடை அவளொடும் பெருந்தகை யிருந்ததே.

தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந்து அடியிணை அடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.

கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோடு டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள்போய் விண்ணுலகு ஆள்வரே.

Комментарии

Информация по комментариям в разработке