Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருச்சுழியல்(திருச்சுழி) | ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும் | சுந்தரர் தேவாரம்

  • Shaivamum Thamizhum
  • 2025-11-06
  • 416
திருச்சுழியல்(திருச்சுழி) | ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும் | சுந்தரர் தேவாரம்
ThevaaramThirumuraiDeiva ThamizhPanniru ThirumuraiPanniru ThirumuraigalThirugnanasambanthar PathigamThirunavukarasar PathigamSundaramurthy PathigamManikkavasagarThiruvasagamThiruneriya Thamizhosaiபன்னிரு திருமுறைகள்தேவாரம்திருவாசகம்திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரமூர்த்திமாணிக்கவாசகர்தெய்வத் தமிழ்திருநெறிய தமிழோசைDevara Paadal Petra SthalamThiruvembavaiMargazhi FestivalSri Thirumeninathar TempleTiruchuliTiruchuzhiதிருச்சுழிதிருச்சுழியல்
  • ok logo

Скачать திருச்சுழியல்(திருச்சுழி) | ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும் | சுந்தரர் தேவாரம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருச்சுழியல்(திருச்சுழி) | ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும் | சுந்தரர் தேவாரம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருச்சுழியல்(திருச்சுழி) | ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும் | சுந்தரர் தேவாரம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருச்சுழியல்(திருச்சுழி) | ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும் | சுந்தரர் தேவாரம்

07.082 திருச்சுழியல்(திருச்சுழி) | ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும் | சுந்தரர் தேவாரம் | ‪@ShaivamumThamizhum‬

#SriThirumeninatharTemple | #Tiruchuli | #Tiruchuzhi | #ShivamumThamizhum

சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவதுண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டினான். அவனது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவனும் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் "சுழி" என்று பெயர் பெற்றுப் பின்னர் "திரு" எனும் அடைமொழி சேர்ந்து "திருச்சுழியல்" ஆயிற்று என் தலபுராணம் விவரிக்கிறது.

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திருமேனிநாதர், ஸ்ரீ பூமிநாத சுவாமி

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சகாயவல்லி, ஸ்ரீ துணைமாலை நாயகி

திருமுறை : ஏழாம் திருமுறை 082 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

பதிக குரலிசை : திரு கரூர் சுவாமிநாதன்

இத்திருத்தலத்தில் திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், கௌதமர், அகலிகை, கண்ணுவமுனிவர், அருச்சுனன், சேரமான் பெருமாள் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர் என்பது சிறப்பு. இத்தலத்தில் பூமிதேவி இறைவனை வழிபட்டிருப்பதால் இறைவனுக்கு பூமிநாதசுவாமி என்ற பெயரும் உண்டு. ஆண்டுக்கு இருமுறை சூரிய ஒளி மூலவரின் திருமேனி மீது விழுமாறு கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும்
வானாய்வரு மதியாய் விதி வருவான் இடம் பொழிலின்
தேன் ஆதரித்து இசை வண்டினம் மிழற்றும் திருச்சுழியல்
நானாவிதம் நினைவார்தமை நலியார் நமன் தமரே. ..... (01)

தண்டு ஏர் மழுப்படையான் மழவிடையான் எழு கடல் நஞ்சு
உண்டே புரம் எரியச் சிலை வளைத்தான் இமையவர்க்கா
திண் தேர்மிசை நின்றான் அவன் உறையும் திருச்சுழியல்
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே. ..... (02)

கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற
கொவ்வைத்துவர் வாயார் குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார்
அவ் அத்திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே. ..... (03)

மலையான் மகள் மடமாது இடம் ஆகத்தவன் மற்றுக்
கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான் திருச்சுழியல்
அலையார் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம்
நிலையார் திகழ் புகழால் நெடுவானத்து உயர்வாரே. ..... (04)

உற்றான் நமக்கு உயரும் மதிச் சடையான் புலன் ஐந்தும்
செற்றார் திருமேனிப் பெருமான் ஊர் திருச்சுழியல்
பெற்றான் இனிது உறைய திறம்பாமைத் திருநாமம்
கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும்மது கடனே. ..... (05)

மலம் தாங்கிய பாசப் பிறப்பு அறுப்பீர் துறைக் கங்கைச்
சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடமாம் திருச்சுழியல்
நிலம் தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்து ஏத்தும்
தலம் தாங்கிய புகழான் மிகு தவமாம் சதுராமே. ..... (06)

சைவத்த செவ்வுருவன் திருநீற்றன் உரும் ஏற்றன்
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரிசெய்தான்
தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திருச்சுழியல்
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே. ..... (07)

பூ ஏந்திய பீடத்தவன் தானும் அடல் அரியும்
கோ ஏந்திய வினயத்தொடு குறுகப் புகல் அறியார்
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திருச்சுழியல்
மா ஏந்திய கரத்தான் எம சிரத்தான் தனது அடியே. ..... (08)

கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி
செண்டாடுதல் புரிந்தான் திருச்சுழியல் பெருமானைக்
குண்டாடிய சமண் ஆதர்கள் குடைச் சாக்கியர் அறியா
மிண்டாடிய அது செய்தது ஆனால் வரு விதியே. ..... (09)

நீரூர் தரு நிமலன் திருமலையார்க்கு அயல் அருகே
தேரூர் தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திருச்சுழியல்
பேரூர் என உறைவான் அடிப்பெயர் நாவலர் கோமான்
ஆரூரன தமிழ்மாலை பத்து அறிவார் துயர் இலரே. ..... (10)

பதிகப் பலன் : அருவிகள் பாய்கின்ற இறைவனது திருமலையில் எதிரொலி உண்டாக, அதன் அருகில் தனது ஊர்தியைச் செலுத்திய இராவணனது தலையை நெரித்தவனும், திருச்சுழியலைத் தனது பெரிய ஊராகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனது திருவடிப் பெயரைப் புனைந்தவனும், திருநாவலூரார்க்குத் தலை வனும் ஆகிய நம்பியாரூரனது இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் உணர்கின்றவர், துன்பம் யாதும் இலராவர்.

ஆலய முகவரி அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில், திருச்சுழி அஞ்சல், திருச்சுழி வட்டம், விருதுநகர் மாவட்டம், PIN - 626 129.

எப்படிப் போவது : மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை சென்று அங்கிருந்து 15 கி.மி. தொலைவில் உள்ளது. மதுரை, அருப்புக்கோட்டையில் இருந்து நேரடி பேருந்து வசதிகள் இருக்கின்றன. மதுரையில் இருந்து காரியாபட்டி வரை நகரப் பேருந்தில் சென்று, அங்கிருந்து மீண்டும் நகரப் பேருந்தில் திருச்சுழியல் வரை செல்லலாம். மதுரை - காரியாபட்டி - திருச்சுழி தான் நேர் வழி. மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை சென்று பின திருச்சுழி செல்வது சுற்று வழியாகும்.

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]