🙏"திருக்கருகாவூர் ஸ்ரீ முல்லைவனநாதர் கர்ப்பரட்சாம்பிகை கோவில்"🙏
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய இரு இடங்களிலிருந்தும் 20 கிலோமீட்டர் தொலைவில் திருக்கருகாவூரில் இக்கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் பாபநாசம் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோயில், மாநிலத்தின் பிற பகுதிகளுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது.
இத்தலத்துக்கு ஈசனான முல்லைவன நாதர் வினைப்பயனால் ஏற்படும் வியாதிகளை தீர்ப்பதால் அவருக்கு பவரோக நிவாரணன் என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கு தல நாயகராக கற்பக விநாயகர் உள்ளார்.
இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
மழைப்பேறும் மகப்பேறும் மகேசனுக்கே தெரியாது’ என்றொரு பழமொழி உண்டு. திருமணமான எல்லாத் தம்பதிகளுக்கும் பிள்ளைப்பேறு கிடைத்துவிடுவதில்லை. அதிலும் தற்போது குழந்தைப்பேறின்மை பலருக்கும் இருந்துவரும் கவலை. மருத்துவம், கோயில்கள், சோதிடம், பரிகாரம் என அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போனவர்களுக்குக்கூட நம்பிக்கைப் பேரொளியாக விளங்குபவள் திருக்கருகாவூர் அன்னை கர்ப்பரட்சாம்பிகை.
“கர்பா என்றால் கருப்பை; ரக்ஷா என்றால் பாதுகாப்பது என்றும் அம்பிகை என்றால் பார்வதி என்றும் பொருள். கர்ப்பரக்ஷாம்பிகா என்றால் "கருப்பைக் காக்கும் தாய்" என்று பொருள்.
முன்பொரு காலத்தில் சோழ நாட்டில் உள்ள வெட்டாற்றின் தென் கரையில் நிருத்துவர் என்ற முனிவர், தனது மனைவி வேதிகை என்பவருடன் இல்லறம் நடத்தி வந்தார். இந்த நிலையில் வேதிகை கருவுற்றாள். ஒரு நாள் மனைவியை ஆசிரமத்திலேயே விட்டு விட்டு, நிருத்துவ முனிவர் மட்டும் வெளி யே சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து ஊர்த்துவ பாதர் என்னும் முனிவர், அந்த ஆசிரமத்திற்கு வந்து உணவு கேட்டார்
கருவுற்றிருந்த வேதிகை உடல் சோர்வு காரணமாக எழுந்து வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. இதை அறியாத ஊர்த்துவ பாதர், வீட்டில் இருந்த பெண் தன்னை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சாபமிட்டு விட்டுச் சென்று விட்டார். முனிவரின் சாபம் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தாள். பின்னர் தான் நித்தம் வணங்கும் அம்பிகையிடம் தனது நிலை குறித்து வேண்டி முறையிட்டாள்.
அன்னையும் காக்கும் கடவுளாக எழுந்தருளி, வேதிகையின் உடலில் இருந்த அகன்ற கருவை, ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்து, முழுக் குழந்தையாக உருவாகும் நாள்வரை காத்தாள். முழுக் குழந்தையாக ஜனித்ததும், அந்தக் குழந்தைக்கு 'நைதுருவன்' எனப் பெயரிட்டு, பெற்றோரிடம் சேர்த்தாள் அம்பிகை.
இவ்வாறு பூவுலகத்தில் முதல் 'கருமாற்றம்' செய்து, இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவள், திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை என்னும் கருக்காத்த நாயகி அம்மன்.
பக்தர்களின் பிரார்த்தனை பலித்ததும், தம்பதி சமேதராகவும், தாய் தனது குழந்தையை ஏந்திக் கொண்டும் ஆலயத்திற்கு வருகிறார்கள். பின்னர் அம்பாளின் சன்னிதிக்கு வந்து தங்களின் சக்திக்கேற்ப கற்கண்டு, வாழைப்பழம், பணம், சர்க்கரை போன்றவற்றை எடைக்கு எடை துலா பாரம் தருகிறார்கள்.
மேலும் அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை செய்வதும், புடவை சாத்துவதும் திருக்கோவிலில் நாளும் காணக்கூடிய அற்புதமான காட்சிகளாகும்.
பிரம்மன் படைப்புத்தொழிலில் ஆணவம் கொண்டதால் படைப்புத் தொழில் தடைப்பட்டது, இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி முல்லை வன நாதரை பூஜித்ததால் மீண்டும் படைப்புத்தொழில் கைவரப் பெற்றார்
கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள திருக்குளம், ‘ஷீரகுண்டம்’ (பாற்குளம்) என்று பெயர் பெற்று திகழ்கிறது. இதற்கு தெய்வப் பசுவான காமதேனுவின் பால் கலந்த குளம் என்பது பொருள் ஆகும்.
🙏Thirukarugavur Mullaivanathar Karparakshambigai Temple 🙏
The temple is located in Thirukarukavur, which is 20 kilometers from both Thanjavur and Kumbakonam. The temple is located in the Papanasam District of Tamil Nadu, and it is well connected to the rest of the state by road.
The Garbharakshambigai Temple is a Hindu temple dedicated to Shiva, located in Thirukarukavoor, Tamil Nadu, India. The temple is believed to have been built during the Cholas period in the 7th century. It was designed and built in the Dravidian style of architecture. Shiva is worshipped as Mullaivananathar and his consort Parvathi as Garbharakshambigai.
Sri Mullaivananathar Swamy
He is known for being worshipped for better health and well-being.
Garbarakshambigai Amman
The goddess at this temple, is known for curing infertility related problems in women, blessing them to conceive, and also helping them for safe and trouble-free delivery
#tamil #sivantemple #amma #ammantemple #amman #pregnancy #safepregnancy #kumbakonam #thanjavur #thanjai #baby #cholas #appar #omnamahshivaya #thiruvarur #travel #templesofindia #tamil #cholas #sivan #sivantemple #thiruvarurther #heaven #culturalheritage #history #kumbakonam #choladesam #amazingtemple #amazing #natarajar #lordsiva #viral #sivasivaya #vlog #templesoftamilnadu #rajendracholan #navagraham #sivalingam #god #ancient #ancienttemple #tamilnadu #padalpetratemple #mustvisit #mustvisitplaces #beautifultemple #devotional #hindutemple #religiousplace #lordsiva
⚠️DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities. All contents provided by This Channel for Entertainment purpose only.
Информация по комментариям в разработке