Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть இஸ்லாம் ஒரு திறந்த புத்தகம்! நபிகள் நாயகமோ ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்! யாரும் பின்பற்றலாம்! - அண்ணா.

  • Let Us Ask Our GOD
  • 2025-09-15
  • 110
இஸ்லாம் ஒரு திறந்த புத்தகம்! நபிகள் நாயகமோ ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்! யாரும் பின்பற்றலாம்! - அண்ணா.
  • ok logo

Скачать இஸ்லாம் ஒரு திறந்த புத்தகம்! நபிகள் நாயகமோ ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்! யாரும் பின்பற்றலாம்! - அண்ணா. бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно இஸ்லாம் ஒரு திறந்த புத்தகம்! நபிகள் நாயகமோ ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்! யாரும் பின்பற்றலாம்! - அண்ணா. или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку இஸ்லாம் ஒரு திறந்த புத்தகம்! நபிகள் நாயகமோ ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்! யாரும் பின்பற்றலாம்! - அண்ணா. бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео இஸ்லாம் ஒரு திறந்த புத்தகம்! நபிகள் நாயகமோ ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்! யாரும் பின்பற்றலாம்! - அண்ணா.

#அண்ணா#நபிகள்நாயகம்#இஸ்லாம்#முஸ்லிம்#
முஹம்மத் நபி ஸல் அவர்கள் பற்றி
அறிஞர் அண்ணா.

★கண் மூடிப் பழக்கங்களை மண் மூடச் செய்து, காட்டு மிராண்டித்தன்மையினரை உயர்ந்த சமுதாயமாய் உருவாக்கி, நெருக்கடியான வேளைகளிலும் இலட்சியங்களை நிறை வேற்றத் தவறாத கடமை வீரர் நபிகள் நாயகம்.

★வழிதப்பியவர்களுக்கு கலங்கரை விளக்காக, திசை தப்பி யோருக்கு திசைகாட்டியாக, இறை பக்தி என்னும் இறையருள் இல்லாதவர்களுக்கு அவர்களின் வறண்டு வெடித்துவிட்ட பாழ் நிலத்தில் ஆலோலம் பாடும் அருவியாக வெப்பக்கனல் வீசிடும் வேளையில் தண்ணென்று வீசும் குளிர் தென்றலாக இருட்டறைக்கு ஒளி விளக்காக, இருண்ட கருத்த இரவுக்கு பவுர்ணமி நிலவாய் வந்தவரே நபிகள் நாயகம்
C.N. அண்ணாத்துரை.

இஸ்லாம் ஒரு திறந்த புத்தகம்! அதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்! நபிகள் நாயகமோ ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்! யார் வேண்டுமானாலும் அவர் வழி நடக்கலாம்.

(அறிஞர் C.N. அண்ணாதுரை அவர்கள் சென்னை மெரீனா கடற்கரை மீலாது விழா கூட்டத்தில் பேசியது. - ஜனவரி 84)

★இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கம்

★இஸ்லாமின் உயரிய பண்புகள் இதற்கு முன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டனவோ அதைவிட, இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளி தேடியலையும் இந்த உலகுக்கு மிக அவசரம் அவசரமாகத் தேவைப்படுகின்றன.

★இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிற தென்றால், மனிதனுக்கு என்ன என்ன ஐயப்பாடுகள் தோன்று கின்றனவோ, அவற்றையெல்லாம் நீக்கக் கூடிய வகையில் அதிக நல்ல கொள்கைகள் அதில் இருக்கின்றன. 

★நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று. ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது என்பதாகும். இதை நான் கொஞ்சம் நெக்குருகஎண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். "ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் இப்படி இருக்கக் கூடும்" என்ற சிந்தனை முடிவடைவதில்லை. எனவேதான் பழந்தமிழ் மக்கள், "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" பார்த்தவர் சொன்னதில்லை. சொன்னவர் பார்த்ததில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதனால் =1 தான் ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது என்ற போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள். அது என்னை மிகவும் ஈர்க்கக் கூடிய கொள்கை.

★இஸ்லாமில் எனக்கு மற்றும் ஒன்று பிடித்திருக்கிறது; அது, மனிதனை மனிதனாக ஆக்குவது. மனிதனை முழு மனிதனாக ஆக்குகிறது இஸ்லாமிய மார்க்கம். மனிதனை முடிந்தால் ஆண்டவனுக்குரிய உயர்ந்த லட்சியக் கோட்பாட்டின் உயரத்துக்கு உயர்த்தக் கூடிய வலிமை இஸ்லாம் மார்க்கத் திற்கு இருக்கிறது.

★இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு சிறந்த மார்க்கம் உலகில் உள்ள பெரும் குணவான்கள் இஸ்லாமை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.

★இஸ்லாமின் இன்னொரு சிறப்பு, இஸ்லாமில் யார் சேர்ந்தாலும், சாதியை மறைத்து விடுகிறது. முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர் தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் எவரானாலும் சரி, எவர் இஸ்லாமில் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கி விடுகிறது. இஸ்லாமின் கொள்கை! இதனால், அது என்னை மிகவும் ஈர்க்கக் கூடிய கொள்கையாக இருக்கிறது.

★இதையெல்லாம் அறிந்துதான், எதையும் துருவித் துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், ‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் ஒன்றுதான்!' என்று எழுதியிருக்கிறார்.

★லுங்கித் துணியையும், குல்லாவையும் அணிந்து கொள்வதால் மட்டும் ஒருவன் சரியான முஸ்லிமாக ஆகிவிட முடியாது. நபிகள் நாயகம் அன்பைப் போதிக்கச் சொன்னார். நானும் அன்பைப் போதிக்கிறேன். அவர் சகோதரத்துவத்தை வளர்த்தார். நானும் சகோதரத்துவத்தை வளர்க்கிறேன். அவர் அறிவே ஆண்டவன் என்றார். நானும் அதே கொள்கை உடையவன்.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்றார் நபிகள் நாயகம். அதையே நானும் நீண்ட நாளாகப் போதித்து வருகிறேன். ஆகவே முஸ்லிமுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ?
நீங்கள் ஏன் முஸ்லிமாகவில்லை?
நான் இஸ்லாமியன்தான்.

★தஞ்சையில் கபீர் உன்னிசா என்பவர் ஒரு முறை மீலாத் விழாவில் பேசவந்த அண்ணாவைச் சந்தித்தார்.

"நீங்கள் இவ்வளவு நன்றாக முகமது நபியையும், இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பற்றிப் பேசுகிறீர்களே, ஏன் நீங்கள் இஸ்லாமிய மதத்தில் சேர்ந்து விடக்கூடாது?" என்று அண்ணா அவர்களிடம் கேட்டார்.

அதற்கு அண்ணா அளித்த பதில் இதுதான்:
★"இஸ்லாமிய மார்க்கக் கட்டளை என்றும்; திட்டங்கள் என்றும் சில உண்டு. இஸ்லாமிய சமுதாய அமைப்புக்கு 'ஜமாத்' என்று பெயர். இஸ்லாமிய கோட்பாடுகளை மார்க்கத் துறையை ஏற்று; அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஏக தெய்வம் என்ற கொள்கை உடையவர்களாக இருக்க வேண்டும். ஆண்டவனுக்கு உருவம் கொடுத்து அதற்கு பூஜை செய்து பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது. அந்த வகையில் பார்த்தால் நான் இஸ்லாமியன்தான் ஆனால். இஸ்லாமிய 'ஜமாத்தில்' நான் இல்லை.

★நான் இஸ்லாமில் சேர்ந்து, அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமை இல்லை. என் வீடு மிக நல்ல வீடு என்று நானே எடுத்துச் சொல்வது எப்படி சரி இல்லையோ, அதைப் போலத்தான் அது அமையும். என் வீட்டைப் பற்றி நான் பெருமைப்படுவதை விட இஸ்லாமின் நன்மைகளை எடுத்துச் சொல்வது தான் பெருமை.
★எச்.ஜி. வெல்ஸ், ஜார்ஜ் பெர்னாட்ஷா, காந்தி போன்ற பெரியோர்கள் முகமது நபியைப் பற்றிக் கூறியுள்ளார்கள். அந்தப் பெரியோர்கள் எல்லாம் இஸ்லாமியர் அல்லாதவர் களான காரணத்தால் தான், அவர்கள் பாராட்டியதிலே பெருமை இருக்கிறது. எனவே, ஆயிரத்தோடு ஆயிரத்து ஒன்று என்று என்னையும் இஸ்லாமியனாக்குவதில்லை" என்றார்.
ஆதாரம்: தென்னரசு - தி.மு.க. வார இதழ் (19-6-1972).

★இஸ்லாமின் உயர்ந்த மார்க்கம் இன்று யாருக்குப் பயன்படுகிறது? இதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆதிக்கக்காரர் களுக்கு பயன்படுமானால் அதில் இந்த உயரிய மார்க்கத்தின் பலன் இல்லை. இவ்வுயரிய மார்க்கம் அக்கிரமத்தை அழிக்கப் பயன்படவேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்கு இம் மார்க்கம் பயன்படுகின்றதோ, அன்றைக்குத்தான் மார்க்கத்தின் முழுப் பயன்களையும் அடைய முடியும்.

★அறிஞர் அண்ணா (7-10-1957 சென்னை கடற்கரை மீலாத் விழாவில் ஆற்றிய சொற்பொழிவு)

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]