Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Vilayath Buddha Book Review | G. R. Indugopan | Tamil translation | Suhana | Vanavil puththakalaya 📑

  • BOOK MARK
  • 2025-11-24
  • 75
Vilayath Buddha Book Review | G. R. Indugopan | Tamil translation | Suhana | Vanavil puththakalaya 📑
  • ok logo

Скачать Vilayath Buddha Book Review | G. R. Indugopan | Tamil translation | Suhana | Vanavil puththakalaya 📑 бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Vilayath Buddha Book Review | G. R. Indugopan | Tamil translation | Suhana | Vanavil puththakalaya 📑 или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Vilayath Buddha Book Review | G. R. Indugopan | Tamil translation | Suhana | Vanavil puththakalaya 📑 бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Vilayath Buddha Book Review | G. R. Indugopan | Tamil translation | Suhana | Vanavil puththakalaya 📑

2025 புத்தக விமர்சனம் : 20

------------------------------------------------

புத்தகம் : விலாயத் புத்தா
வகை : நாவல்

------------------------------------------------

ஆசிரியர் : ஜி. ஆர். இந்துகோபன் (தமிழில் : சுகானா)
வெளியீடு : வானவில் புத்தகாலயா
பக்கம் : 136
விலை : 222/-

------------------------------------------------

மூணார் அருகிலுள்ள மறையூர் எனும் சிறு மலைக்கிராமத்தையும், அங்கு இயற்கையாகவே வளரும் சந்தனக் காட்டையும், அங்கு வாழும் எளிய மனிதர்களையும் களமாக அமைத்து, கற்பனையில் கதை புனைந்து சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ள நாவல் தான் ஜி. ஆர். இந்துகோபன் அவர்கள் எழுதிய "விலாயத் புத்தா"

90 - களிலும் இரண்டாயிரங்களின் ஆரம்ப காலத்திலும் அங்கு பரவலாக பல சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன. அந்த சந்தனக் கடத்தல் சம்பவங்களை, யாருக்காக யார் செய்தார்கள். எதற்காக எளிய மனிதர்கள் அந்த செயலில் ஈடுபடுத்தப்பட்டனர், அதிலிருந்து அவர்களுக்கு என்ன பலன்/விளைவு ஏற்பட்டது என்பதை, கதையின் போக்கிலேயே மெல்லிய இழையாக இப்புத்தகம் முழுக்க பரவ விட்டுள்ளார் ஆசிரியர்.

டபுள் மோகனன் எனும் கதாபாத்திரம் வழியாக, எளிய மனிதர்களின் சாதாரண வாழ்க்கையில் சிறு பிசகு/எதிர்பாராத சம்பவம் மூலம் ஏற்படும் தாக்கம், அவர்கள் வாழ்க்கையை என்னவாக மாற்றுகிறது என்பதை ஆழமாக சிந்திக்க வைக்கிறது இப்புத்தகம்.

அந்த ஊரில் மக்களால் மிகவும் மதிக்கப்படும், அரசியல் அதிகாரமுள்ள பாஸ்கரன் எனும் கதாபாத்திரம், எதிர்பாராத ஒரு நிகழ்வு மூலம் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க, எந்த எல்லை வரை செல்கிறார் என்பதை இப்புத்தகம் கையாண்டுள்ள விதம், மனிதர்களின் மனம் எவ்வளவு பூஞ்சையானது என்பதையும், கௌரவம் எனும் உருவகத்தைக் காப்பாற்ற மனிதர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதையும் மிக நுட்பமாக அணுகியுள்ளது.

அதேபோல, செண்பகம் எனும் பெண்ணும் அவரது மகள் சைதன்யமும் அவர்களது வாழ்க்கையை அந்த சமூகம் பார்க்கும் விதமும், அப்பார்வையிலிருந்து தப்ப சைதன்யம் கைக்கொள்ளும் நிலைப்பாடு தீர்க்கமாக அமைந்ததும், இச்சமூகம் விதித்துள்ள விதிகளை உடைக்க ஒரு பெண் எவ்வளவு பிரயத்தனப்பட வேண்டியுள்ளது என்பதையும், இச்சமூகம் கட்டமைத்து வைத்துள்ள ஒழுக்க விதிகள் எவ்வளவு பாரபட்சமிக்கது என்பதையும் அலசுகிறது.

மொத்தத்தில் ஒரு மனிதன் இச்சமூகத்தில் பிழைத்துக் கிடப்பது மட்டுமே போதாது, இச்சமூகம் வைத்துள்ள ஒழுக்க கௌரவ விதிகளுக்கு உட்பட்டு வாழ வேண்டும். இல்லையெனில் அவர்களை இச்சமூகம் எந்த எல்லைக்கும் செல்லும் அளவு அழுத்தி மூச்சு முட்ட வைக்கும் என்பதையும், சாதாரண எளிய மனிதர்களின் நுண்ணுணர்வுகளை இச்சமூகம் எவ்வளவு துச்சமாக எண்ணுகிறது என்பதையும் ஆழமாக பேசுகிறது இப்புத்தகம். அதனோடு சேர்ந்து மனித இருப்பை தத்துவார்த்த ரீதியில் அணுகுகிறது இப்புத்தகம்.

இத்தனை அழுத்தங்களுக்கிடையிலும், இயன்றவரை மகிழ்ச்சியாக வாழும்/வாழ எத்தனிக்கும் எளிய மனிதர்களைப் பற்றி, நம்மை சிந்திக்க வைக்கிறது இப்புத்தகம். முழுமையாக இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது, ஆங்காங்கே சில வெற்றிடம் இருப்பது போல உணர முடிகிறது. ஆனாலும் ஒரு நல்ல வாசிப்பனுபவமாக அமைந்தது "ஜி. ஆர். இந்துகோபன்" அவர்கள் எழுதிய "விலாயத் புத்தா" நாவல்

குறிப்பு :- இப்புத்தகத்தை தழுவி நடிகர் பிரித்விராஜ் அவர்கள் நடிப்பில் "விலாயத் புத்தா" எனும் பெயரிலேயே திரைப்படம் வெளியாகவுள்ளது.


நன்றி ♥️

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

#vilayathbuddha #bookreview #booktok #booktube #book #readingtips #pritviraj #malayalammovie #books

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]