திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 41 I KSS ICF

Описание к видео திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 41 I KSS ICF

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை - நாள் 02/09/2024
திருவையாறு

பாடல் எண் : 1

தானலா துலக மில்லை சகமலா தடிமை யில்லை
கானலா தாட லில்லை கருதுவார் தங்க ளுக்கு
வானலா தருளு மில்லை வார்குழன் மங்கை யோடும்
ஆனலா தூர்வ தில்லை யையனை யாற னார்க்கே.

பாடல் எண் : 2

ஆலலா லிருக்கை யில்லை யருந்தவ முனிவர்க் கன்று
நூலலா னொடிவ தில்லை நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி மலரடி வணங்க வேலை
ஆலலா லமுத மில்லை யையனை யாற னார்க்கே.

பாடல் எண் : 3

நரிபுரி சுடலை தன்னி னடமலா னவிற்ற லில்லை
சுரிபுரி குழலி யோடுந் துணையலா லிருக்கை யில்லை
தெரிபுரி சிந்தை யார்க்குத் தெளிவலா லருளு மில்லை
அரிபுரி மலர்கொ டேத்து மையனை யாற னார்க்கே.

பாடல் எண் : 4

தொண்டலாற் றுணையு மில்லை தோலலா துடையு மில்லை
கண்டலா தருளு மில்லை கலந்தபின் பிரிவ தில்லை
பண்டைநான் மறைகள் காணாப் பரிசின னென்றென் றெண்ணி
அண்டவா னவர்க ளேத்து மையனை யாற னார்க்கே.

பாடல் எண் : 5

எரியலா லுருவ மில்லை யேறலா லேற லில்லை
கரியலாற் போர்வை யில்லை காண்டகு சோதி யார்க்குப்
பிரிவிலா வமரர் கூடிப் பெருந்தகைப் பிரானென் றேத்தும்
அரியலாற் றேவி யில்லை யையனை யாற னார்க்கே.

பாடல் எண் : 6

என்பலாற் கலனு மில்லை யெருதலா லூர்வ தில்லை
புன்புலா னாறு காட்டிற் பொடியலாற் சாந்து மில்லை
துன்பிலாத் தொண்டர் கூடித் தொழுதழு தாடிப் பாடும்
அன்பலாற் பொருளு மில்லை யையனை யாற னார்க்கே.

பாடல் எண் : 7

கீளலா லுடையு மில்லை கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் காயப் பட்ட வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை யையனை யாற னார்க்கே.

பாடல் எண் : 8

சகமலா தடிமை யில்லை தானலாற் றுணையு மில்லை
நகமெலாந் தேயக் கையா னாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை யையனை யாற னார்க்கே.

பாடல் எண் : 9

உமையலா துருவ மில்லை யுலகலா துடைய தில்லை
நமையெலா முடைய ராவர் நன்மையே தீமை யில்லை
கமையெலா முடைய ராகிக் கழலடி பரவுந் தொண்டர்க்
கமைவிலா வருள்கொ டுப்பா ரையனை யாற னார்க்கே.

பாடல் எண் : 10

மலையலா லிருக்கை யில்லை மதித்திடா வரக்கன் றன்னைத்
தலையலா னெரித்த தில்லை தடவரைக் கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னு மையனை யாற னார்க்கே.

Комментарии

Информация по комментариям в разработке