Kumbidukiraen || Vedanayagam Sastriar Keerthanai || Sastriar Mrs.Sarah Martin || A.Christiyaan Kutti

Описание к видео Kumbidukiraen || Vedanayagam Sastriar Keerthanai || Sastriar Mrs.Sarah Martin || A.Christiyaan Kutti

Song : Kumbidukiraen
Album : Ananda Gnana Keerthanaigal
Lyrics : Vedanayagam Sasthiriyar
Sung & Featuring : Sastriar Mrs. Sarah Martin
Introduction Speech : Dr. P. Martin Devaprasath
Music & Tune : A. Christiyaan Kutti
D.O.P. : Youth Sam, MGS. Rajan
Editing : MGS. Rajan
Drone : Daniel Daff
Audio Recording : Samson Ramphony
Audio Mixing & Mastering : Praveen Kumar
Digital on : D.K.Enterprises
Produced by : Dr. P. Martin Devaprasath

All songs also available on
https://music.amazon.com/albums/B0BW3...
  / ananda-gnana-keerthanaigal  
https://open.spotify.com/album/6Gum3C...
https://www.jiosaavn.com/album/ananda...
https://wynk.in/music/album/ananda-gn...

பாடல் வரிகள்
பல்லவி

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் - எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் - பவ
நாசனைக் கிருபாசனைக் கும்பிடுகிறேன்.

தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்கும்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் – கும்பிடு

ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் - ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் - தாவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்


3.நற்றிசையும் நோக்கி நின்று கும்பிடுகிறேன்
வேத நாயகனின் பாட்டனையே கும்பிடுகிறேன்
சாஸ்திர விதத்துடனே கும்பிடுகிறேன்
தாவீது சங்கீர்த்தனங்கள் சொல்லி கும்பிடுகிறேன்

பொருள்

பல்லவி
வணங்குகிறேன். நான் வணங்குகிறேன்.
எங்கள் குருவாகிய இயேசுநாதர் பாதத்தை வணங்குகிறேன்.

சரணங்கள்
1. இவ்வுலகை படைத்தவரை வணங்குகிறேன்.
என்னை ஆட்கொண்டவரை, மீட்டுக்கொண்டவரை வணங்குகிறேன். அவரை நம்பும் அடியார்க்கு அருள்செய்பவரை வணங்குகிறேன் பாவத்தை அழிப்பவரை, கிருபை சிங்காசனத்தில் வீற்றிருப்பவரை வணங்குகிறேன்.

2. எனக்கு நிலையான வாழ்வு தருபவரை, வணங்குகிறேன்
அறியாத அனைத்தும் தருபவரை வணங்குகிறேன்.
மெய்ப்பொருளை ஓசன்னா ஓசன்னா என்று முழங்கி வணங்குகிறேன்.

3. ஒன்றான மெய்த்தேவனை வணங்குகிறேன்.
தனக்கு யாரும் இணையில்லாத மெய்ப்பொருளை வணங்குகிறேன். திரு அவதாரமாக வந்தவரை வணங்குகிறேன்
தாவீது அரசனின் அரியணைக்குரிய அதிகாரியை வணங்குகிறேன்.

4. நான்கு திசைகளில் இருந்தும் உம்மை நோக்கி வணங்குகிறேன்
பாட்டுக்குறிய வேதத்தின் நாயகனாகிய கிறிஸ்துவையே வணங்குகிறேன்
வேதத்தின் சாஸ்திரங்களோடு உம்மை வணங்குகிறேன்
தாவீதின் சங்கீதங்களை சொல்லி உம்மை வணங்குகிறேன்

Комментарии

Информация по комментариям в разработке