Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть பரமந்தூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் | நவபாஷாண பெருமாள் அருளும் தலம் | திருமண தடை நிவர்த்தி தலம்

  • ஆன்மீகத்துடன் நட்பு
  • 2023-08-22
  • 13422
பரமந்தூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் | நவபாஷாண பெருமாள் அருளும் தலம் | திருமண தடை நிவர்த்தி தலம்
  • ok logo

Скачать பரமந்தூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் | நவபாஷாண பெருமாள் அருளும் தலம் | திருமண தடை நிவர்த்தி தலம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно பரமந்தூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் | நவபாஷாண பெருமாள் அருளும் தலம் | திருமண தடை நிவர்த்தி தலம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку பரமந்தூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் | நவபாஷாண பெருமாள் அருளும் தலம் | திருமண தடை நிவர்த்தி தலம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео பரமந்தூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் | நவபாஷாண பெருமாள் அருளும் தலம் | திருமண தடை நிவர்த்தி தலம்

பரமந்தூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்

மூலவர் : ஆதிகேசவ பெருமாள்
தாயார்: பரிமளவல்லி
ஊர்: பரமந்தூர்
மாவட்டம்: புதுக்கோட்டை

மிகப் பழைமையான இந்தக் கோயில் 13-ம் நூற்றாண்டுகளில் பாண்டியர்களால் நிர்மாணிக் கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆலயத்தின் கட்டுமானம் தொன்மைக்குச் சான்றாகத் திகழ்கிறது. ராமர் பூஜை செய்து வழிபட்ட ஆலயம் என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.

தலவரலாறு

ஆதிகாலத்தில் பெரும் தவசீலரான பராசர மகரிஷி இந்தத் தலத்துக்கு வந்து தவம் இருந்தார். அவரின் பிரார்த்தனைக்கு ஏற்ப, பெருமாள் அந்த மகரிஷிக்குக் காட்சி கொடுத்து அருள்பாலித்தார் என்கின்றது தல புராணம். கருவறையில் ஶ்ரீதேவி - பூதேவி சமேதராக அருள்புரிகிறார் ஶ்ரீஆதிகேசவப் பெருமாள்.

நவபாஷாண பெருமாள்

இவர் நவபாஷாண திருமேனியர் என்கிறார்கள். மூலவருக்குத் திருமஞ்சனம் ஏதும் கிடையாது. வருஷத்துக்கு ஒருமுறை பெருமாளுக்குத் தைலக் காப்பு நடைபெறும். தைலக்காப்பு முடிந்து 48 நாள்கள் பெருமாளின் முழுத் திருமேனியை தரிசிக்க இயலாது. திருவடி மற்றும் திருமுக தரிசனம் மட்டுமே கிடைக்கும்.

பிராத்தனை

இந்தப் பெருமாள் கல்யாணத் திருக்கோலத்தில் அருள்வதாக ஐதிகம். ஆகவே, கல்யாண வரம் வேண்டும் அன்பர்கள் இவரின் சந்நிதிக்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டிச் செல்கின்றனர்.
பரிமளவல்லித் தாயாரை மனமுருக வேண்டி, சுமங்கலிப் பிரார்த்தனை செய்வதால் மாங்கல்ய பலம் பெருகும், மங்கல வரம் கிடைக்கும் என்பது ஐதிகம். வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்குக் குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

தலசிறப்பு

இந்தப் பெருமாளின் திருவருளால் தடைகள் நீங்கி விரைவில் கல்யாண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் குழந்தை வரம் வேண்டியும், வெகு நாள்களாக பிணியால் அவதிப்படும் அன்பர்களும் இந்தப் பெருமாளை வேண்டி வணங்கிச் செல்கின்றனர். `இந்தக் கோயிலை தரிசித்துச் சென்றால் விரைவில் பிரச்னைகள் நீங்கிவிடும்’ என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

பொது தகவல்

பெருமாள் மட்டுமல்ல இந்தக் கோயிலில் அருளும் மற்ற மூர்த்தியரும் சிறந்த வரப்பிரசாதி யாகத் திகழ்கின்றனர். கோயிலில் தனிச் சந்நிதியில் அருள்கிறார் பரிமளவல்லித் தாயார். இவரை தரிசித்துவிட்டே ஆதிகேசவரைத் தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள். இவரைப் படிதாண்டா பத்தினி எனப் போற்றுகிறார்கள்.
இங்கு இறக்கையுடன் திகழும் கருடாழ்வார் பெருமாள் சந்நிதியை நோக்கியவண்ணம் அருள் கிறார். மகா மண்டபத்தில் செல்வ வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்மர், நம்மாழ்வார், ராமாநுஜர் சந்நிதிகள் உள்ளன.

வித்தியாசமான ஆஞ்சநேயர்

இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் விசேஷமானவர். வயதானவர் போன்று தோற்றம் காட்டும் இந்த அனுமன், தெற்கு நோக்கி அருள்வதும், வாலின் நுனி தலைக்கு மேல் இருப்பது போன்ற கோலம் கொண்டிருப்பதும் விசேஷ அம்சம் என்கிறார்கள்.

இவரின் திருமுகத்தைக் கிழக்குப் பக்கம் இருந்து தரிசித்தால் கோபமாகவும், மேற்குப் பக்கம் இருந்து தரிசித்தால் சிரித்தமுகத்துடனும் காட்சி அளிப்பதுபோல் இருக்குமாம். அனுமன் ஜயந்தி அன்று இவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் பிரார்த்தனையின் பொருட்டு இவருக்கு மட்டைத் தேங்காய் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள்.

திருவிழா

இந்தக் கோயிலில் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் 7 நாள் திருவிழா நடைபெறுகிறது. பெருமாள் வெள்ளாற்றாங்கரையில் எழுந்தருள்வார். மன்னர்கள் காலத்தில் பெரும் விழாக்களும் வழிபாடுகளுமாக கோலாகலமாகத் திகழ்ந்த ஆலயம் இது. தற்போது, பக்தர்கள் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது. தற்போது கோயிலில் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.

நடைதிறப்பு

காலை 07.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்

அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார் கோயில் செல்லும் வழியில் அறந்தாங்கியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆவுடையார் கோயிலில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரமந்தூர் ஆதிகேசவ பெருமாள் கோயில். அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார் கோயில் செல்லும் பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

+91 7994347966

கோயில் Google map link
https://maps.app.goo.gl/Cq6eD97Z1hDAk...

if you want to support us via UPI id

nava2904@kvb

Join this channel to get access to perks:

   / @mathina  

தமிழ்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]