'கனவு மெய்ப்பட' தலைப்பில், உணர்ச்சி வயப்படுதல், அறிவு வயப்படுதல் இவற்றில் மூளையின் பங்கு என்ன என்பது குறித்து...
உணர்ச்சிவயப்படுதலுக்கும், அறிவுவயப்படுதலுக்குமான காரண காரியங்களை உடற்கூறு ரீதியில் ஆராய்தல்
ஆரம்ப காலகட்ட உயிரினங்களுக்கு பசி, காமம், அச்சம் போன்ற உணர்வுகள் இருந்தன. பிறகு ‘நியோகார்டக்ஸ்’ என்ற பகுதி மூளைப்பகுதியில் உருவானது. அதன் பிறகுதான் அன்பு, பாசம், காதல் போன்ற உணர்வுகள் எல்லாம் உண்டாகின. சில விலங்குகளுக்கு ‘நியோகார்டக்ஸ்’ கிடையாது. அதனால்தான் தன்னுடைய குட்டிகளைக்கூட அவை சாப்பிட்டு விடுகின்றன. ஏனெனில் அதற்கு அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் இருக்காது.
நமக்குள் ஒரு செயல் எவ்வாறு உருவாகிறது? நமது மூளைக்கு ஒரு தகவல் நமது ஐம்புலன்களின் வழியாக தெரிவிக்கப்படுகிறது. மூளை அதனைச் செயலாக்குவதற்கான பணியை உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆணையிடுகிறது.
-மூளையில் 'தலாமஸ்', 'விஷுவல் கார்டெக்ஸ்', 'அமிக்டலா' என மூன்று பகுதிகள் உள்ளன. இவற்றில் தலாமஸ் என்பது செய்தியை உள்வாங்கி, அது அறிவுபூர்வமான செயலுக்குரியது என்றால் கார்டெக்ஸுக்கும், உணர்ச்சிபூர்வமான செயலுக்குரியது என்றால் அமிக்டலாவுக்கு அனுப்பும். இதுதான் அதன் இயல்பானப் பணி. மாறாக, ஒரு செய்தியானது நமது ஐம்புலன்களின் மூலமாக மூளையின் தலாமஸ் பகுதிக்குச் செல்லாமல் நேரடியாக உணர்ச்சிவயப்படுதலுக்குரிய அமிக்டலாவுக்குச் செல்ல நேரிட்டு விடுகிறது. அப்போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. தலாமஸ் மூலமாக ஆய்வு செய்து அறிவு சார்ந்த கார்டெக்ஸுக்கு அனுப்பப்பட்டிருந்தால் அறிவுபூர்வமாக செயற்பட்டு பிரச்சனை நடைபெறாமல் தடுத்திருக்க முடியும்.
அறிவு செயற்பட ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் எடுத்துக் கொள்கிறது, ஆனால், உணர்ச்சியானது பன்னிரெண்டாயிரத்தில் ஒரு பங்கு அளவுக்கு அதிவிரைவாகவே செயற்பட்டுவிடுகிறது. ஆகவே, மூளையின் தலாமஸ் பகுதியின் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக அமிக்டலாவுக்கு செய்தி சென்றுவிடுவதால் உடனடியாக உணர்ச்சிவயப்பட்டு மோசமான சம்பவங்களில் ஈடுபட நேரிடுகிறது.
நம்முடைய மூளை மூன்று பவுண்ட் எடை மட்டுமே கொண்டது. இதில் சதைக்கோளம், நரம்புகள், இரத்த ஓட்டம், சில நாளமில்லா சுரப்பிகள், சில ஹார்மோன்கள் போன்றவை இருக்கும். இந்த மூளையின் மூலமாகத்தான் நம்முடைய எல்லா வேலைகளும் நடக்கின்றன. நாம் உணர்ச்சிவயப்படுதலுக்கு ஹார்மோன் எனப்படும் சுரப்பிதான் முக்கிய காரணம்.
ஒரு மனிதன் உணர்ச்சிவயப்படும் பொழுது எரிச்சல், கோபம், பயம்... இவை போன்ற விரும்பத்தகாத உணர்ச்சிகள்தான் தலைதூக்கும். ஆனால், அறிவுவயப்படும்பொழுது அன்பு, கருணை, சரியான திட்டமிடல், சரியான புரிதல் ஆகியன நடைபெறும். இதனை நன்கு அறிந்து கடைபிடிக்கக் கூடியவர்கள்தான் சாதனையாளர்கள் ஆகிறார்கள்.
சிலர், உலகம் அன்புமயமானது, நடப்பவை எல்லாம் நல்லவையே, நல்லதே நடக்கும்... என்று இயற்கையாகவே எண்ணம் கொண்டிருப்பார்கள். எந்த காரணம் கொண்டும் சட்டென பதற்றம் ஆகமாட்டார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சனைகள் வராதவாறு முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள். அதையும் மீறி பிரச்னைகள் வருகிறதென்றால் அதனை எளிதில் கையாண்டு, அதிலிருந்து விடுபட்டு விடுவார்கள்.
சிலர், உணர்ச்சிவயப்பட நேரிடும்போது, அமைதியாக அமர்ந்து மூச்சை இழுத்து விடுவது, ஒன்றிலிருந்து பத்து வரை எண்களைச் சொல்வது போன்ற சில உத்திகளைப் பயன்படுத்தித் தங்களை கட்டுப்படுத்திக் கொள்வார்கள். சிலர், தனக்கு மிக விருப்பமான வேறு ஏதேனும் ஒன்றிற்கு தனது கவனத்தை திசை திருப்புவார்கள். இவையெல்லாம் அவர்களுக்கு உணர்ச்சிவயப்படுதலிலிருந்து தற்காலிகமான விடுதலையைக் கொடுக்கும்.
பெரிய தொழில் நிறுவன முதலாளிகள் சிலர், தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் ஆக்ரோசமாக போராட்டத்தில் ஈடுபடும்போது, அப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த மிக இயல்பாக, மென்மையாக அவர்களைக் கையாளும் வித்தையைக் கற்றிருப்பார்கள்.
உதாரணத்திற்கு, ஒரு தொழிற்சாலையின் தொழிலாளர்கள் திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகிறார்கள் என்றால், அப்போது அத்தொழிற்சாலையின் முதலாளி, தொழிலாளர்களை அழைத்து, “நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்காகத்தான் நான் இருக்கிறேன். முதலில், உங்களுக்குத் தேவையானவற்றை ஒரு பட்டியலிடுங்கள். அந்தப் பட்டியலை நாளைக்குக் கொண்டு வாருங்கள். உங்களுடைய பிரதிநிதி யாராவது இருந்தால் அவர்களையும் அழைத்து வாருங்கள். உங்களுக்குத் தேவையானவற்றை நான் உறுதியாக நிறைவேற்றித் தருகிறேன்’’ என்று சொல்லி அப்போதைய ஆக்ரோஷச் சூழலை அமைதியாக் கையாள்வார். உடனே போராட்டக்காரர்கள் கலைந்து சென்று விடுவார்கள். அடுத்த நாள் தொழிலாளர்கள் வருவதற்கு பிரச்னையை வேறு விதத்தில் எவ்வாறு கையாளலாம் என்பதை யோசிக்கத் தொடங்கிவிடுவார். தொழிலாளர்களின் அவ்வளவு பெரிய போராட்டத்தை முதலாளியும் உணர்ச்சிவயப்பட்டால் பிரச்னை இன்னும் தீவிரமாகுமே தவிர, தணியாது. ஆகவே, அந்நேரத்தில் அறிவுபூர்வமாக செயல்படுவதுதான் சிறப்பு. இதைதான் மூளையின் தலாமஸ் செய்கிறது.
பொதுவாக, வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே நாம் கூர்ந்து கவனித்தால், அவர்கள் எந்த சூழ்நிலையிலும் சட்டென உணர்ச்சிவயப்படாதவர்களாகவும், உடனே எதிர்வினை புரியாதவர்கள் ஆகவும் இருப்பார்கள்.
மற்றும் சில...
The Course Director Dr.S.Sivakumar is a
Consultant Psychologist and Hypnotist.
He, along with Hypnotist Ramamurthy conducts couse on
Holistic Mesmerism and Hypnotism
and
Chino-Indian Acupressure
at
I am an IAS academy
3362-B, AE-Block,
8th Street, 10th main road,
Anna Nagar, Chennai 600 040
Tamil Nadu
India
#motivation #mindpower #Emotional Intelligence
Информация по комментариям в разработке