மகா விஷ்ணுவையே அழைத்து வந்து ஆசிர்வதித்த அகத்தியர் | அகத்தியர் அருள்வாக்கு

Описание к видео மகா விஷ்ணுவையே அழைத்து வந்து ஆசிர்வதித்த அகத்தியர் | அகத்தியர் அருள்வாக்கு

சித்தன் அருள் - 1081 - அன்புடன் அகத்தியர், - குருநாதருடன் ஒரு அனுபவம்!

மகா விஷ்ணுவையே அழைத்து வந்து ஆசிர்வதித்த அகத்தியர் | அகத்தியர் அருள்வாக்கு

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைத்தளம் அவரின் நேரடிப் பார்வையில் இயங்கி வருகின்றது, என்பதே உண்மை.

ஆயிரம் பதிவுகளை தாண்டியும் குருவின் திருவருளால் அவரின் அடியவர்களுக்கு உபதேசங்களை, அனுபவ பதிவுகளை நல் வழிகாட்டியாக அமைத்து தருகிறார் குருநாதர்.

நாடி வாசித்து பல அடியவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த திரு அகத்தியர் மைந்தன் அவர்களின் மூலம் குருநாதரின் உபதேசங்கள் அனுபவப் பதிவுகள் சுமார் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உபதேசித்த வாக்குகள் இன்றைய தலைமுறையினருக்கும் நல்வழி காட்டியாக, வாழ்க்கை துணையாக, ஒருவர் எப்படி எல்லாம் வாழ வேண்டும், எப்படி எல்லாம் பக்தியாக இருக்க வேண்டும் என்று நெறி முறையை காட்டி வருகின்றது.

பல அற்புதங்கள், பல அதிசயங்கள், பல பல புண்ணிய ஷேத்திரங்கள், அவற்றின் மகிமைகள், பலப்பல தேவரகசியங்கள், கொடிய வியாதிக்கான மருத்துவ முறைகள், தூய அன்பான எளிய பக்திக்கும் சித்தர்கள் ஓடோடி வந்து கருணை செய்த நிகழ்வுகள் என, இந்த தலைமுறையினருக்கும் ஒரு அற்புத பாடங்களாகவே இருந்து வருகின்றது.

இந்தத் தலைமுறையினருக்கும் குருநாதர் அகத்திய பெருமான் கருணையுடன் திரு ஜானகிராமன் ஐயாவை தன்னுடைய மகனாக ஏற்றுக் கொண்டு, ஜீவ நாடியின் மூலம் நம் தலைமுறையினருக்கு, வாக்கு உபதேசங்களை தந்து நம்மை வழி நடத்திச் செல்கின்றார். பலபல புண்ணியம் வாய்ந்த பெருமைமிகு ஆலயங்கள், அவற்றின் இதிகாசங்கள், பலப்பல மகத்துவம் வாய்ந்த, யாரும் அறிந்திராத ஜீவசமாதிகள், அவற்றின் சிறப்புகள், இதுவரை யாரும் அறிந்திராத ஆலயத்தின் சிறப்புகள் என, ஜானகிராமன் ஐயாவை வழிநடத்தி புனித யாத்திரை செய்வித்து, ஒவ்வொரு புனித ஸ்தலங்களையும் வெளிப்படுத்தி, மக்கள் அங்கு சென்றால், அவர்களுடைய துன்பங்கள் தீரும் நல்வழிக்கு வந்துவிட முடியும் என, கருணையோடு வாக்குகளை தந்து நம்மையெல்லாம் வழிநடத்தி சென்று கொண்டிருக்கின்றார்.

சித்தன் அருள் வலைத்தளம் ஒரு ஆவணமாக இருக்கும். தேடித்தேடி ஓடிஓடி நாடிநாடி வரும் அனைவருக்கும், வாழ்வியல் ஆன்மிக நெறி காட்டும் ஒரு போதிமரம் ஆக இருக்கும்.

சித்தன் அருள் வலைத்தளம் Link, comment செக்ஷனில் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குருநாதர் அகத்தியர், சிறப்பான தொண்டாற்றி வரும் அந்த மதுரை அடியவருக்கு தித்திக்கும் தேன் மதுர வாக்கினை, அவருடைய திருவாய் மலர்ந்தருளியதை காண்போம்.

வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றியே பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே யானும் வந்தேனப்பா, உன் அருகிலே, அப்பனே எவைஎன்று கூற, அப்பனே பின் உன்னாலும் முடியவில்லை என்பேன், ஆனாலும் யான் கையைப்பிடித்து அழைத்தேன் என்பேன், அப்பனே நலமாக நலம் ஆக நீ என் மீது காட்டும் அன்பு அப்பனே பெரியதப்பா.

அப்பனே, அதனால் என் பிள்ளையாகவே வாழ்ந்துவிடு என்பேன். யான் இருக்கின்றேன் உன் தந்தையாக, லோபமுத்ராவும் இருப்பாள் கடைசி நாள் வரையிலும், குற்றங்கள் இல்லை அப்பனே!

அப்பனே இன்னும் பல புண்ணியங்கள் நீ செய்வாய் அப்பனே, அப்பனே யானே அங்கு பொதிகைமலை பூஜைகள் செய்யும் பொழுது, உன்னை நல் விதமாக ஆசீர்வதித்தேன் அப்பனே.

அனைவருக்கும் எம் ஆசிகள் அப்பனே.

அப்பனே வரும் காலங்களில், அப்பனே நல்லோருக்கு கலியவன் (அதாவது கலிபுருஷன்) எதைஎதை என்றுகூறாத அளவிற்கு கஷ்டங்கள் கொடுப்பான் அப்பனே.

ஆனாலும் குறைகள் இல்லை, யான் எதனைஎன்று கூறும் அளவிற்குகூட, அதனை நீக்கி விடுவேன்அப்பனே, என்னுடைய அருளால். அப்பனே எவைஎன்று கூற, யானும் மறு ரூபத்தில் வந்தேனப்பா.

அப்பனே ஓர் ஏழை இல்லாள் திருமணத்திற்கு, நல் விதமாக கையேந்தினேன் உன்னிடத்தில் அப்பனே.

நீயும் தந்தாயப்பா, அப்பனே அதையும் சேர்த்து விட்டேன் மறைமுகமாக வந்து அப்பனே புண்ணியங்கள்! அப்பனே எதைஎன்றும் கூற, நீ எதனை உன்னிடத்தில் எவைஎன்று சில விற்பனை செய்யும் இடத்திற்கு.

அப்பனே நலமாக நலமாக இக்கலியுகத்திலும், அப்பனே யாங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றோம், நல்லோர்கள் யார்யார் என்றுகூட கண்டு ஆசீர்வதித்து வருகின்றோம். அப்பனே மனித ரூபத்தில் இன்னும் வருவோமப்பா.

அப்பனே யாரும் செய்ய இயலாத உதவியைக்கூட நீ செய்து கொண்டிருக்கின்றாய் அப்பனே, இதுதான் நல்விதமாக பின் புண்ணியம் என்பேன்அப்பனே.

இவையன்றி கூற, அதனால்தான் அப்பனே, இன்னும் அடிக்கடி உன்னிடத்தில் யான் வருவேன்அப்பனே.

அப்பனே எதனைஎன்று கூற, சில ஆன்மாக்களுக்கு எவைஎன்று கூறாத அளவிற்குகூட, அப்பனே பின் மறைமுகமாகவே உதவிகள், ஆனாலும் மனித ரூபத்தில் யான் உன்னிடத்திலே எவ்வாறு என்பதையும்கூட, வருவேனப்பா, வருவேனப்பா அடிக்கடி என்பேன்.

அப்பனே இவைபோன்று, மனிதர்கள் செய்தாலே போதுமானது அப்பனே. யான் வந்து சில கர்மங்களை எடுத்து விட்டு செல்வேன் அப்பனே. ஆனாலும் இதை மனிதர்கள் யாரும் உணர்வதில்லை அப்பனே. அவை இவை என்றுகூட, அப்பனே புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும்.

அப்பனே அவை செய்கின்றேன், இவை செய்கின்றேன், அப்படி இப்படி எல்லாம் ஆகும் என்பதைக்கூட அப்பனே, தரித்திர மனிதன் என்பேன் அப்பனே.

அவைகூட பரவாயில்லை அப்பனே, இதையன்றிகூற என்னால் அனைத்தும் செய்ய இயலும் என்றுகூட, மனிதன் பொய்யான கணக்கை வகுத்துள்ளான் என்பேன்.

அப்பனே இவையெல்லாம் மனிதனின் ஆட்டங்களே, சிறிது நேரம்தானப்பா அவை ஆட்டங்கள், அப்பனே யாங்களே கண்கூடாக பார்த்துக் கொண்டிருப்போம், அப்பனே ஆட்டம் முடிந்தால், அவந்தன் எழும்பவே முடியாது அப்பனே கடைநாள் வரையில், மனிதனுக்கு தெரிவதில்லையப்பா.

ஆனாலும் அப்பனே, பொய் சொல்லி அதைச் சொல்லி இதைச் சொல்லி, எல்லாம் அப்பனே இவ்வாறு இருக்க, அவ்வாறு இருக்க, இவ்வாறு மந்திரங்களை ஜெபித்தால், அவ்வாறு இருக்கலாம் என்பதெல்லாம், அப்பனே மனிதனின் வேடிக்கையாக உள்ளது.

#siththanarul
#sithanarul
#arul

Комментарии

Информация по комментариям в разработке