Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть அரபிக் கடல் நடுவில் 123 அடி உயரத்தில் சிவபெருமான் அருளும் முருதேஷ்வரர் கோயில் பஞ்சலிங்க தலம்

  • ஆன்மீகத்துடன் நட்பு
  • 2025-08-04
  • 2813
அரபிக் கடல் நடுவில் 123 அடி உயரத்தில் சிவபெருமான் அருளும் முருதேஷ்வரர் கோயில் பஞ்சலிங்க தலம்
முருதேஷ்வரர் கோயில்murudeshwar kovil templeMurudeshwar Templemurudeshwar temple in karnataka
  • ok logo

Скачать அரபிக் கடல் நடுவில் 123 அடி உயரத்தில் சிவபெருமான் அருளும் முருதேஷ்வரர் கோயில் பஞ்சலிங்க தலம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно அரபிக் கடல் நடுவில் 123 அடி உயரத்தில் சிவபெருமான் அருளும் முருதேஷ்வரர் கோயில் பஞ்சலிங்க தலம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку அரபிக் கடல் நடுவில் 123 அடி உயரத்தில் சிவபெருமான் அருளும் முருதேஷ்வரர் கோயில் பஞ்சலிங்க தலம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео அரபிக் கடல் நடுவில் 123 அடி உயரத்தில் சிவபெருமான் அருளும் முருதேஷ்வரர் கோயில் பஞ்சலிங்க தலம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற
#முருதீசுவரம் (முருடேஷ்வரா)
#முருதீசுவரர் (முருடேஸ்வரர்)

கர்நாடக மாநிலம் வட கன்னட மாவட்டத்தில் உள்ள பாத்கல் என்ற இடம் உள்ளது. இந்த நகரம் அரபிக் கடலோரத்தில் அமைந்திருக்கிறது. அந்த அரபிக் கடலை ஒட்டியே அமைந்திருக்கிறது முருதீசுவரர் திருக்கோவில். இந்த ஆலயம் பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழ்கிறது.

மூலவர்: முருடேஷ்வரர்
ஊர் : உத்தர் கன்னடா
மாநிலம்: கர்நாடகம்

தல வரலாறு:

இது ராமாயண காலத்து ஆலயம் என்று கூறப்படுகிறது. ராவணன் ஒருமுறை கயிலாயத்தில் இருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு இலங்கை நோக்கிச் சென்றான்.

வழியில் அவன் நீராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்போது அவன் கொண்டு சென்ற சிவலிங்கத்தை கீழே வைக்க விரும்பாமல், அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் கீழே வைக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறிச் சென்றான். அப்போது அந்தச் சிறுவன், ‘நான் மூன்று முறை உங்களை அழைப்பேன். அதற்குள் வரவில்லை என்றால், கீழே வைத்துவிடுவேன்’ என்று நிபந்தனை விதித்தான். அதை ஏற்றுக்கொண்ட ராவணன் நீராடச் சென்றான்.


அந்தச் சிறுவன் வேண்டுமென்றே வேகமாக மூன்று முறை ராவணனை அழைத்து விட்டு, சிவலிங்கத்தை கீழே வைத்துவிட்டான். சத்தம் கேட்டு ஓடோடி வந்த ராவணன், சிவலிங்கம் கீழே இருப்பதைக் கண்டான். அதை தூக்க முயன்றபோது அவனால் இயலவில்லை.

அவன் பலம் அனைத்தையும் திரட்டியும் சிவலிங்கத்தை அங்கிருந்து தூக்க முடியவில்லை. இதனால் வெகுண்ட ராவணன், அந்தச் சிறுவனை தண்டிக்க முயல, சிறுவன் விநாயகப் பெருமானாக மாறி காட்சியளித்து மறைந்தார். விநாயகப் பெருமானால் கீழே வைக்கப்பட்ட சிவலிங்கம் உள்ள தலமே இது என்று கூறப்படுகிறது.

புராண வரலாறு:

முருதேஸ்வரர் கோயில் அமைந்ததின் பின்னணியில் இராமாயண காலத்தில் நடந்த சுவாரஸ்யமான புராண வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது இறவா நிலையை அருளும் ஆத்மலிங்கத்தை வணங்கி தேவர்களும் கடவுளர்களும் இறப்பே இல்லாத நிலையை பெற்றனர்.

இது கேள்வியுற்று தானும் அந்நிலையை அடைய பேராவல் கொண்டான் பெரும் சிவபக்தனும் இலங்கையின் மன்னனுமான ராவணன்.

ஆத்மலிங்கத்தை அடைய சிவனை நோக்கி பெருந்தவம் மேற்கொண்டான் ராவணன். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் வேண்டிய வரம் கேட்குமாறு ராவணனிடம் சொன்னார்.

ராவணனும் சிவபெருமானிடம் ஆத்மலிங்கத்தை கேட்டுப்பெற்றான். ஆனால் இதை கீழே வைத்தல் திரும்பவும் எடுக்க முடியாது என்ற ஒரே நிபந்தனையுடன் சிவபெருமான் அவ்வரத்தை வழங்கினார்.

ஒருவேளை ராவணன் ஆத்மலிங்கத்தை வழிபட்டு இறப்பை வென்றுவிட்டான் என்றால் அகில உலகத்தையும் அழித்துவிடுவான் என்று பயந்த தேவமுனி நாரதர் விநாயகரிடம் சென்று இதுபற்றி முறையிடுகிறார்.

விநாயகரும் ராவணன் ஆத்மலிங்கத்தை வழிபடாத வண்ணம் சூழ்ச்சி ஒன்றை செய்கிறார்.
ராவணனுக்கு தினமும் மாலை சிவபெருமானுக்கு பூசை செய்வதை வழக்கமாக கொண்டவன். ஆத்மலிங்கத்துடன் கோகர்னாவை கடக்கும் வேளையில் விஷ்ணு பகவான் சூரியனை மறையும்படி செய்துவிடுகிறார்.

அந்நேரத்தில் லிங்கத்தை கையில் வைத்துக்கொண்டு எப்படி சிவபெருமானுக்கு பூசை செய்வது என்று ராவணன் குழம்பிய நேரத்தில் அந்தணராக மாறுவேடமிட்டு செல்கிறார் விநாயகர்.

அந்தணரான விநாயகர் தான் ஆத்மலிங்கத்தை கையில் வைத்துக்கொள்வதாகவும் அந்நேரத்தில் ராவணன் சிவ பூஜை மேற்கொள்ளலாம் என்றும் சொல்கிறார். ஒருவேளை தான் மூன்று முறை அழைத்தும் ராவணன் செவிமடுக்கவில்லை என்றால் தான் லிங்கத்தை கீழே வைத்துவிடுவேன் என்றும் சொல்கிறார் அந்தண வேடத்தில் வந்த விநாயகர்.

சிவ பூசைக்காக ராவணன் சென்றவுடனேயே விநாயகர் லிங்கத்தை கீழே வைத்துவிடுகிறார். விஷ்ணுவும் சூரியன் மறந்தது போன்ற மாயத்தோற்றத்தை விளக்கிவிடுகிறார்.

தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்றுணர்ந்த ராவணன் தன்னுடைய பெரும்பலத்தை கொண்டு ஆத்மலிங்கத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறான். என்ன முயற்சி செய்தும் ஆத்மலிங்கத்தை எடுக்கமுடியாமல் போகிறது.

எனினும் ஆத்மலிங்கத்தின் சில பகுதிகள் மட்டும் உடைந்து சில இடங்களில் பரவி விழுகின்றன. அப்படி விழுந்த ஒரு லிங்கத்தின் கோயில் தான் முருதேஸ்வரர் கோயில் என்று சொல்லப்படுகிறது.

கோயில் அமைப்பு:

இந்தக் கோவில் கன்டுக்க மலையின் மீது, மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் 237.5 அடி உயரம் கொண்டதாகும். சுமார் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல மின்தூக்கி உள்ளது. இது மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம். மலையின் அடிவாரத்தில் இராமேசுவர் லிங்கம் உள்ளது. இதற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் படிகட்டுகளின் நுழைவாயிலில் இரு முழு உருவ யானை சிலைகள் பைஞ்சுதை மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராசகோபுரத்தின் உயரம் 237.5 அடி ஆகும். இது உயரமான கோபுரங்களில் ஒன்று.


சிவன் சிலை:

கோவிலின் வெளியே 123 அடி உயரம் கொண்ட சிவபெருமானின் சிலை அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிவன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய சிலை இது என்று கூறப்படுகிறது. சிவனுக்கு எதிரில் நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும், இந்தச் சிலை தெரிவது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம்

மங்களூர் - கொங்கன் ரெயில் பாதையில், முருதீசுவரர் என்ற பெயரில் ரெயில் நிலையம் இருக்கிறது. இதில் இறங்கினால் முருதீசுவரர் கோவிலை அடையலாம்.

கோயில் Google Map Link

https://maps.app.goo.gl/GhU9gxJyBT1Zg...


if you want to support our channel via UPI Id

nava2904@kvb


Join this channel to get access to perks:

   / @mathina  

தமிழ்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]