உறுமியாட்டம் | தேவனூர் புதூர் அருள்மிகு பாலமுருகன் காவடிக் குழு | மலர்க் காவடிப் பெருவிழா

Описание к видео உறுமியாட்டம் | தேவனூர் புதூர் அருள்மிகு பாலமுருகன் காவடிக் குழு | மலர்க் காவடிப் பெருவிழா

மார்கழி 9 - புதன்கிழமை...
மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை 23 ஆம் ஆண்டு #மலர்க்_காவடிப்_பெருவிழா காலை 10 மணியளவில் சுங்கம், செல்லப்பம்பாளையம் அருள்மிகு செல்வமாரியம்மன் திருக்கோயிலில் தொடங்கியது. சிரவை ஆதீனம், பேரூர் ஆதீனம், தென்சேரி மலை ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் எழுந்தருளி வழிபாடுகள் செய்து மலர்க் காவடிப் பெருவிழாவினை தொடங்கி வைத்தார்கள்.
2000 க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்துகொண்டு தேவனூர் புதூர் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் வரை மலர்க் காவடிகளை எடுத்துவந்தனர், உற்சவ மூர்த்திக்கு மலர் அர்ச்சனையும் பேரொளி வழிபாடும் செய்து குருமகா சன்னிதானங்கள் அன்பர்களுக்கு ஆசி வழங்கினார்கள். நிகழ்வில் கலை நிகழ்சிகளும் அன்பர்களுக்கு அன்னம் பாலிப்பும் நடைபெற்றது.
தேவனூர் புதூர் அருள்மிகு பாலமுருகன் காவடிக் குழுவின் குரு முருக.வேலுகுட்டி சாமி உள்ளிட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.

Комментарии

Информация по комментариям в разработке