உபவாச ஜெபமும், ஆசீர்வாதமும். (Fasting prayer and blessing)

Описание к видео உபவாச ஜெபமும், ஆசீர்வாதமும். (Fasting prayer and blessing)

11. கர்த்தர் தமது சேனைக்கு முன் சத்தமிடுவார், அவருடைய பாளயம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது, கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்?
யோவேல் 2:11

12 ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
யோவேல் 2:12

13 நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள், அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர், அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
யோவேல் 2:13

14 ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.
யோவேல் 2:14

15 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.
யோவேல் 2:15

16 ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள், முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள், மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப் புறப்படுவார்களாக.
யோவேல் 2:16

17 கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்திரத்தை ஒப்புக்கொடாதிரும், உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.
யோவேல் 2:17

18 அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங் கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.
யோவேல் 2:18

19 கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள்.
யோவேல் 2:19

20 வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன் தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின் தண்டு மேற் கடலுக்கும் நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்தி விடுவேன், அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும், அது பெரிய காரியங்களைச் செய்தது.
யோவேல் 2:20

21 தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு, கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
யோவேல் 2:21

22 வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள், வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும், விருட்சங்கள் காய்களைக் காய்க்கும், அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத் தரும்.
யோவேல் 2:22

23 சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள், அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப் பண்ணுவார்.
யோவேல் 2:23

24 களங்கள் தானியத்தினால் நிரம்பும், ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.
யோவேல் 2:24

25 நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப்பூச்சிகளும், பச்சைப்புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.
யோவேல் 2:25

26 நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.
யோவேல் 2:26

27 நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறெருவர் இல்லையென்றும் அறிந்து கொள்வீர்கள், என் ஜனங்கள ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.
யோவேல் 2:27

Комментарии

Информация по комментариям в разработке