கதை 41 # பிரபஞ்சனின் கருணை - வாழ்விலும், எழுத்திலும்!!! அப்பாவு கணக்கில் 35 ரூபாய்

Описание к видео கதை 41 # பிரபஞ்சனின் கருணை - வாழ்விலும், எழுத்திலும்!!! அப்பாவு கணக்கில் 35 ரூபாய்

அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேல் தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரிய பங்களித்த உன்னத ஆளுமையான திரு.பிரபஞ்சன் அவர்களின் மரணம் ஓர் ஈடு செய்ய முடியா இழப்பு. அது அவர் ஓர் நல்ல எழுத்தாளர் என்பதால் மட்டுமல்ல அவர் கருணை மிக்கதொரு நல்ல மனிதர் என்பதாலும் தான். அவரைப் பற்றி நான் தெரிந்து கொள்ள முயன்ற பொழுது, அவருடைய அளவிடமுடியா கருணையினால் நான் வெகுவாக ஈர்க்கப்பட்டேன். அவருடைய கதைகளிள் நான் உணர்ந்த கருணைப் பிரவாகம் அவரின் உண்மை இயல்பு என்பதை உணர்ந்து கொண்டேன். நான் உணர்ந்து பிரமித்த அந்த மா மனிதரைப் பற்றிய செய்திகளையும், அவருடைய கதைகளையும் என்னுடைய நண்பர்களும் அறிந்து கொள்ளத் தூண்டுவதே அவருக்கு நான் செலுத்தக் கூடிய அஞ்சலியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த வாரக் காணொளி கதை 41 # பிரபஞ்சனின் கருணை - வாழ்விலும், எழுத்திலும்!!!

Комментарии

Информация по комментариям в разработке