Best Tamil Song - Love song - ஊரடங்கும் சாமத்துல - ooradangum saamathula

Описание к видео Best Tamil Song - Love song - ஊரடங்கும் சாமத்துல - ooradangum saamathula

பாடல்: பிரளயன்
பாடியவர்: கிருஷ்ணசாமி
பாடல்:
ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்தில உன் நினைப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சல சலக்கும்
சோலை எல்லாம் உன் சிரிப்பு
புரண்டு படுத்தாலும் பாவி மகன் உன் நினைப்பு
பாவி மகன் உன் நினைப்பு ..


வெள்ளியில தீப்பெட்டியாம் மச்சானுக்கு
விதவிதமா பீடி கட்டாம்
வாங்கி தர ஆச வெச்சேன்
காச சுள்ளி வித்து சேத்து வச்சேன் ..
சம்முகனார் கோயிலுக்கு சூடம் கொளுத்தி வச்சேன்
போறவங்க வரவங்க பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்
நான் பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்


ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமே ..
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமே
உன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்
உன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்


கழனி சேத்துக்குள்ள களை எடுத்து நிக்கையில
கழனி காட்டுக்குள்ள களை எடுத்து நிக்கையில
உன் சொத்த பல்ல போல ஒரு சோழிய நான் கண்டெடுத்தேன்
கண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையில ..
களைஎடுப்பு பின்னுதுன்னு பண்ணையாரு எசினாரே

கருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்
கருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்
உன் பேர எம் பேர ஒரு சேர எழுதினமே
கருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்
கருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்
உன் பேர எம் பேர ஒரு சேர எழுதினமே
ஊருணி கரையோரம் உக்கார்ந்து பேசினமே
ஊருக்காரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே
ஊருக்காரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே


சும்மா கிடக்கும் போதே துள்ளுகிற சாதிக்காரன்
சங்கமா சேந்திருக்கான் .. வம்பு பண்ண காத்திருக்கான்
என்ன செய்ய போறனோ ஏது செய்ய போறனோ
நம் கதிய நினச்சு மச்சான் என் மனசு பதை பதைக்க

சாதி சொல்லி பிரிச்சாலும் யாரு வந்து தடுத்தாலும்
சாதி சொல்லி பிரிச்சாலும் யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே சேருவன்னு துண்டு போட்டு தாண்டினியே ..
அந்த வார்த்தையில நானிருக்கேன் .. வாக்க பட காத்திருக்கேன் ..
வார்த்தையில நானிருக்கேன் .. வாக்க பட காத்திருக்கேன் ..

Комментарии

Информация по комментариям в разработке