நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன் கோவில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
கொங்கு குலாலர் கிழங்கு நாடு நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன் கோவில் பிரம்மாண்ட பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் கொங்கு குலால மரபினரின் மனு விக்யமான ரிஷி கோத்திரம் கிழங்கு நாடு மூன்று அண்ணன்மார்களான ஈரோடு கே. மாணிக்கம், சின்ன தாராபுரம் ஏ.சந்திரசேகரன், ஈரோடு வில்லரசம்பட்டி எஸ்.அருணாச்சலம் ஆகியோருக்கு குலதெய்வமாக விளங்கும் மோகனூர் ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மிக பிரம்மாண்டமாய் கோலாகல பொங்கல் விழா நடைபெற்று. விழாவின் முதல் நாள் நிகழ்வாக கடந்த 2023 மார்ச் மாதம் 2 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த அரசுத்துறை அதிகாரிகள், மாவட்ட காவல்துறையினர், முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட, வட்டார, ஒன்றிய, நகர கட்சி நிர்வாகிகள் பல்வேறு துறை அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் பல்வேறு துறை வல்லுனர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முழு ஏற்பாடுகளை கொங்கு குலாலர் கிழங்கு நாடு மூன்று அண்ணன்மார்கள் செய்திருந்தனர். இந்த விழாவில் சிறப்பு நிகழ்வாக கோவில் யானை, குதிரையுடன் அண்ணன்மார்கள், மாமன்மார்கள், உற்றார் உறவினர்களை வரவேற்கும் விதமாக வான வேடிக்கை முழங்க, ஜெண்டை மேளம், பம்பை, தாரை தப்பட்டை, மேளதாள
இசைக்கருவிகள் முழங்க சிறப்பு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு கோவில் அரங்க மேடையில் விழா குழு சார்பில் விழாக்குழு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விழா குழுவினர்கள் மைசூர் மகாராஜா அரண்மனையின் தூதகர், மலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று விழாக்குழு மலரை வெளியிட்டனர். கோவில் வளாக மேடையில் நடன நாட்டிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு மார்ச் மாதம் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அக்னி குண்டத்தில் பக்தர்கள் வள்ளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் நாமக்கல் மாவட்ட காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினர், சுகாதாரத் துறையினர் கோவில் வளாகத்தில் குடில் அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு மற்றும் மருத்துவம் பணிகள் செய்தனர். இந்த பிரம்மாண்ட பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டு நாள் பொங்கல் விழா குறித்த நிகழ்வுகளை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கீரவாணி அழகு இளையராஜா குழுவினர்கள் உதவி பேராசிரியர் கலைவளர்மணி கீரவாணி அழகு இளையராஜா நேமத்தான்பட்டி சீனிவாசன் ஆகியோர் நேர்முக வர்ணனை செய்திருந்தனர். மேலும் இந்த பொங்கல் விழாவில் தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ,ராமநாதபுரம், கன்னியாக்குமரி, புதுக்கோட்டை, சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர், சிதம்பரம், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகை, விழுப்புரம், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான குலாலர்கள், பொதுமக்கள் என சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
#namakkal #namakkaljobs #nammakudlanews24x7 #namakkalanjaneyar #namakkalbaba #நாமக்கல்மாவட்டம் #நாமக்கல் #நாமக்கல்ஜல்லிக்கட்டு #நாமக்கல்மாவட்டம்ஜல்லிக்கட்டு #நாம்தமிழர்கட்சி #ponnamaravathy #polimernews #lions #news #keeravani #jallikattu_2023 #கொங்குநாடு #கொங்கு #கொங்குதமிழ் #கொங்குவம்சம் #கொக்கு #கொங்ககோசாலை #கொங்கு #konguvellalar #kongugirlswhatsappstatus #kongu_media #kongu #pongal #kilangu #mohanur #மோகனூர் #kongustatus #kilangu #kulalar #kulalampur #KULALAR #குலாலர் #குருபூஜை #குயவர்
Информация по комментариям в разработке