Thiruvallur Veeraraghava Perumal Temple , Thiruevvul , திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில்

Описание к видео Thiruvallur Veeraraghava Perumal Temple , Thiruevvul , திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில்

This video shows the Veeraraghava Perumal Temple , hope you like this video

பாசுரம் -1

**.கசையாடை மூடியோடிக் காதல் செய்தானவனுர்
நாசமாக நம்பவல்ல நம்பி நம் பெருமான்
வேயினன்ன தோள் மடவார் வெண்ணெயுண்டான் இவனென்று
ஏசநின்ற எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே .

பாசுரம் --2

**2. தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன்முடிகள் ஒன்பதோடொன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னில் அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள
எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே

Pasuram 3.

முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாயினால் மாள முனிந்து அவனே ,
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்காகி பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே .

Pasuram 4.

பந்தணைந்து மெல்விரலாள் பாவை தன் காரணத்தால் ,
வென்திறலேறேழும் வென்றவேந்தன் விரிபுகழ்சேர்
நந்தன் மைந்தனாகவும் நம்பி நம் பெருமான் ,
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே .

Pasuram 5.

பாலனாகி ஞாலமேழும் உண்டு பண்டு ஆலிலைமேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரை கண்ணன் ,எண்ணில்
நீலமார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம்புறவில் எவ்வுள் கிடந்தானே .

Pasuram 6

சோத்த நம்பியென்று தொண்டர்மிண்டித் தொடர்ந்து தழைக்கும்
ஆத்தன்நம்பி செங்கணம்பி ஆகிலும் தேவர்க்கெல்லாம்
மூத்த நம்பி முக்கணம்பி என்று முனிவர் தொழுது
ஏத்தும் நம்பி எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே .

Pasuram 7.

திங்களப்பு வானெரி காலாகி திசை முகனார்
தங்களப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீள்முடியான் சூழ்கடல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே .

Pasuram 8

முனிவன் முர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்து
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன்
தனியன் சேயன் தானொரு வனாகிலும் தன்னடியார்க்கு
இனியன் எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே .

Pasuram 9

பந்திருக்கும் மெல்விரலாள் பாவை பனி மலராள்
வந்திருக்கும் மார்வன் நீலமேனி மணிவண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் மைந்த
இந்திரற்கும் தம்பெருமான் எவ்வுள் கிடந்தானே

Pasuram 10

இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம்புறவின் மங்கையர்கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் மாலை ஈரைந்தும் வல்லார்
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வார் அமருலகே


for enquiries : [email protected]
if you like to support or sponsor me, you can do it through

Google pay upi id : ganeshraghav522@okaxis

paypal : https://www.paypal.me/ganeshraghav





facebook:   / ganeshraghav.  .

twitter:   / ganeshraghav2  

instagram:   / ganeshragha.  .

#VeeraraghavaPerumalTemple #Thiruvallur #Ganeshraghav

Комментарии

Информация по комментариям в разработке