Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть புதுமை 02. உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவுவதால் வரும் நன்மைகள்!

  • Catholic Tamil Official
  • 2023-11-01
  • 353
புதுமை 02. உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவுவதால் வரும் நன்மைகள்!
Catholic Tamilcatholictamilபாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபைகத்தோலிக்கம்தமிழ்ஆலயம் அறிவோம்நற்கருணைஆராதனைவானொலிதிருப்பலி நேரலைசூசையப்பர்பாத்திமாஆலயங்கள்தவக்காலம்புனிதர்கள்பாடல்கள்மறைக்கல்விநூலகம்செபமாலைநவநாள்சிலுவைப்பாதைபிரார்த்தனைஉத்தரிக்கிற ஸ்தலம்மோட்சம்நரகம்திருக்குடும்ப ஜெபம்குழந்தை இயேசுமறையுரை சிந்தனைசிலுவைபரிகாரம்திருவிவிலியம்பாவசங்கீர்த்தனம்ஆன்மீகம்தியானம்மரியன்னைக்கான போர்
  • ok logo

Скачать புதுமை 02. உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவுவதால் வரும் நன்மைகள்! бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно புதுமை 02. உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவுவதால் வரும் நன்மைகள்! или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку புதுமை 02. உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவுவதால் வரும் நன்மைகள்! бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео புதுமை 02. உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவுவதால் வரும் நன்மைகள்!

இத்தாலி நாட்டில் நேப்பிள்ஸ் நகரத்தில் சேசு சபையைச் சார்ந்த மர்செல்லுஸ் மஸ்திரில்லி என்கிற குருவானவர் நோயுற்றிருந்த பொழுது கிழக்கிந்திய நாடுகளுக்கு அப்போஸ்தலரான அர்ச்.சவேரியார் பரலோகத்திலிருந்து வந்து வெகு ஆனந்தத்தோடும், மகிமையோடும் அவருக்குப் பலமுறை தரிசனம் அளித்தார். ஒருமுறை அர்ச். சவேரியார் அநேக ஆன்மாக்களோடு இருந்து அவருக்குத் தோன்றினார்.

வியாதியாயிருந்த அக்குருவானவர் இக்காட்சியைக் கண்டு புனிதரை நோக்கி "உம்மோடு கூட வந்திருக்கும் இவர்கள் யார்?” என்று கேட்டார். அதற்குப் அர்ச்.சவேரியார் “உம்மு டைய நண்பர்கள்” என்று பதிலளித்தார். குருவானவர் "இவர்கள் யாவரும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களோ?” என்று கேட்க, அதற்குப் அர்ச்.சவேரியார் "இவர்கள் உம் நண்பர்களாகிய உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள்தான். நீர் வியாதியாய் இருக்கிறபடியால் இந்த ஆன்மாக்கள் உம்மைக் குறித்து மிகவும் துயரப் படுகின்றன. ஏனென்றால் நீர் நன்றாயிருந்தபோது இந்த ஆன்மாக்களைக் குறித்து ஒப்புக்கொடுத்த திருப்பலிகளால் இவர்கள் மிகுந்த பயனடைந்தார்கள். இப்போது நீர் நோயுற்றிருப்பதனால் திருப்பலி நிறைவேற்ற முடியாமல் போக இவர்களுக்கும் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை” என்றார்.

குருவானவர் மஸ்திரில்லி, "நான் வேறு குருக்களைக் கொண்டு திருப்பலி ஒப்புக்கொடுத்து கிறிஸ்தவர்களைக் கொண்டு செபங்கள் செய்தால் இந்த ஆன்மாக்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார். அதற்குப் அர்ச்.சவேரியார், "அப்படிச் செய்தால் இந்த ஆன்மாக்களுக்கு நிச்சயம் நன்மை கிடைக்கும்” என்றார்.

இவற்றைக் கூறிய பிறகு அர்ச்.சவேரியாரும் அவருடன் வந்த ஆன்மாக்களும் மறைந்து போயினர். மஸ்திரில்லி குருவானவர் தாம் இருக்கிற மடத்திலுள்ள குருக்களை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களைக் குறித்து திருப்பலி நிறைவேற்றி அவர்களுக்காய் ஒப்புக்கொடுக்கவும், மடத்திலுள்ள மற்றவர்கள் 153 மணி செபமாலையை செபிக்கவும் வேண்டிக்கொண்டதால் அவர்களும் அவ்வாறே செய்தனர்.

கிறிஸ்தவர்களே! அர்ச்.சவேரியார் பூமியில் வாழ்ந்தபோது உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் பேரிலே தமக்குண்டான பக்தியும், இரக்கமும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் ஏற்படும்படி அடிக்கடி அறிவுறுத்தி மிகுந்த முயற்சி செய்தது மட்டுமின்றி அவர் எந்தெந்த ஊர்களில் இருந்தாரோ அங்கெல்லாம் தினந்தோறும் இரவு வேளையில் தெரு வீதிகளிலே சுற்றி தாமே மணியடித்துக் கொண்டு அவ்வூர்க் கிறிஸ்தவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொள்ளும்படி புத்தி சொல்லி வருவார்.

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் பேரில் இரக்கமாயிருந்து, அவர்களுக்கு உதவுவது பெரிய புண்ணியம், அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தால் அந்த ஆத்துமங்கள் உங்களுக்காக எப்போதும் நன்றியுடன் மறவாமல் வேண்டிக்கொள்வார்கள். திருப்பலி வழியாக அந்த ஆன்மாக்களுக்கு பெரும் நன்மை உண்டாகுமென்பதால் அந்த ஆத்துமங்களைக் குறித்து திருப்பலிப் பூசை ஒப்புக்கொடுப்பது மிகவும் நல்லது.

நீங்கள் முழுப் பற்றுதலோடும், முழு பக்தியோடும் திருப்பலியில் கலந்து உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக் களுக்காக ஒப்புக்கொடுத்தால் அது அவர்களுக்கு வெகு உதவியாக இருக்கும். மஸ்திரில்லி என்ற குருவானவர் செய்ததுபோல் நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக் களுக்காக வேண்டிக்கொள்ள மற்றவர்களையும் தூண்டினால் மிக மிக நல்லது. உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக உங்களுக்காக அவர்கள் மோட்சம் போனபின் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்வார்கள்.

மஸ்திரில்லி என்ற குருவானவர் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு உதவி புரிந்ததால் அவர்கள் நன்றியுள்ள வர்களாயிருந்து அவருக்காக வேண்டிக்கொண்டார்கள். அவர்களுடைய வேண்டுதல்களால் குருவானவருக்கு பெரும் நன்மை கிடைத்தது. அர்ச்.சவேரியார் அவருக்கு தரிசனமாகிப் பெரும் புதுமையாக முழு உடல் நலம் பெற்ற பிறகு, அவர் ஜப்பான் நாட்டிற்குப் போய் அங்கே மறைசாட்சியாக மரித்தார்.

நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு செய்கின்ற உதவிகளினால் அவர்களும் உங்களுக்காக வேண்டுதல் புரிவார்கள், நீங்களும் பெரும் பாக்கியம் பெறுவீர்கள்!

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]