🥹குழந்தையே பிறக்காதுனு சொல்லிட்டாங்க.. ஆனால் 🙏🏻முருகப் பெருமான் என்னை கைவிடவில்லை/

Описание к видео 🥹குழந்தையே பிறக்காதுனு சொல்லிட்டாங்க.. ஆனால் 🙏🏻முருகப் பெருமான் என்னை கைவிடவில்லை/

கந்த சஷ்டி விரதம் 2024:-

7 நாட்கள் கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் வழிமுறைகள் , விரதத்தை முறையாக நிறைவு செய்யும் முறை

#கந்தசஷ்டி #கந்தசஷ்டிவிரதம் #சஷ்டி #சஷ்டிவிரதம் #வேல்மாறல் #வேல்வழிபாடு #சூரசம்ஹாரம் #கந்தசஷ்டி #கந்தசஷ்டிவிரதம் #48நாள்கந்தசஷ்டிவிரதம்
#சஷ்டிவிரதம் #சஷ்டி #சூரசம்ஹாரம் #சிவன்மலை #kandasashti #kandasasti #soorasamharam #48daysKandasashti #kandasashtifasting
#முருகன் #murugan #palanimurugan #thiruchendur #palanimurugantemple #palani #swamimalai #thiruparankundram #thiruthani #pazhamudircholai

✨பச்சிளங்குழந்தைகளை பேணிக் காக்கும் சஷ்டி தேவியைப் பற்றி உங்களுக்கு தெரியுமா!?🤔மகா கந்த சஷ்டி விரதம்
#கந்தசஷ்டிவிரதம்
#சஷ்டிவிரதம்
#சூரசம்ஹாரம்
#முருகன்கோவில்
#ஆறுபடைவீடு
#ஆறுமுகம்
#சடாட்சரமந்திரம்
#சரவணபவ
#முருகன்மந்திரம்
#முருகன்_கதைகள்
#யாமிருக்கபயமேன்
#அருணகிரிநாதர்
#திருப்புகழ்
##கந்தர்_அலங்காரச்_சொற்பொழிவு
#கந்தர்அநுபூதி
#கந்தன்
#சிவப்புராணம்
#சிக்கல்சிங்காரவேலன்
#வேல்வழிபாடு
#தமிழ்கடவுள்
#சுப்பிரமணியசுவாமிகோவில்
#திருக்கல்யாணம்

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ...... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ...... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

செகமாயை யுற்று ... இந்த உலக மாயையில் சிக்குண்டு,

என் அகவாழ்வில் வைத்த ... எனது இல்லற வாழ்வில் எனக்குக்கிட்டிய

திருமாது கெர்ப்பம் உடல் ஊறி ... அழகிய மனைவியின் கருவில்
உருவாகி அவளது உடலில் ஊறி

தெசமாத முற்றி ... பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து,

வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த ... நல்ல வடிவோடு கூடி
பூமியில் நன்கு தோன்றிய

பொருளாகி ... குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து,

மக அவாவின் ... குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை

உச்சி விழி ஆநநத்தில் ... உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து,
முகத்தோடு முகம் சேர்த்து,

மலைநேர்புயத்தில் உறவாடி ... எனது மலை போன்ற தோள்களில்
நீ தழுவி உறவாடி,

மடிமீதடுத்து விளையாடி ... என் மடித்தலத்தில் அமர்ந்து
குழந்தையாக விளையாடி,

நித்த மணிவாயின் முத்தி தரவேணும் ... நாள்தோறும் உன் மணி
வாயினால் முத்தம் தந்தருள வேண்டும்.

முகமாய மிட்ட குறமாதி னுக்கு ... முக வசீகரம் மிக்க குறப்பெண்
வள்ளியின்

முலைமேல் அணைக்க வருநீதா ... மார்பினை அணைக்க வந்த
நீதிபதியே*,

முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் ... பழம் பெரும்
வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே

மொழியேயு ரைத்த குருநாதா ... பிரணவப் பொருளை சிவனாருக்கு
உபதேசித்த குருநாதனே,

தகையாது எனக்கு ... தடையொன்றும் இல்லாது எனக்கு

உன் அடிகாண வைத்த ... உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த

தனியேரகத்தின் முருகோனே ... ஒப்பற்ற திருவேரகத்தின்
(சுவாமிமலையின்) முருகனே,

தருகாவிரிக்கு வடபாரிசத்தில் ... மரங்கள் இருபுறமும் நிறைந்த
காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே

சமர்வேலெடுத்த பெருமாளே. ... போர் வேல் விளங்க நிற்கும்
பெருமாளே.

#tiruchendur #tiruchendurmurugantemple #tiruchendurmurugan #tiruchendur #godmurugan #aanmegam #murugantemple #kandhasasti #thiruvizha #tiruchendurtemplethiruvizha #tirchendurhistory #tirchendurstory #thiruchendursoorasamharam #tiruchendurmurugantemplehistory #thiruchendurmuruganstory #thiruchendurstory #thiruchendurhistory #arupadaiveedu #arupadaiveedumurugan #பங்குனிஉத்திரம்2024 #பங்குனிஉத்திரம் #PanguniUthiram #PanguniUthiram2024 #PanguniUthiramsirappu

Комментарии

Информация по комментариям в разработке