பிரசங்கிகள் நடுவில் நியாயத்தீர்ப்பு துவங்கட்டும்! |Why Revival Tarries?

Описание к видео பிரசங்கிகள் நடுவில் நியாயத்தீர்ப்பு துவங்கட்டும்! |Why Revival Tarries?

பிரசங்கிகள் நடுவில் முதலாவது நியாயத்தீர்ப்பு துவங்கட்டும்! | #revival #leonardravenhill #judgement

Book: ஏன் எழுப்புதல் தாமதிக்கிறது?
Chapter 6: எழுப்புதல் தாமதிக்கிறது - ஏனெனில் . . .
Author: லியானார்டு ரேவன்ஹில்

(6) முடிவாக, எழுப்புதல் தாமதிக்கிறது... ஏனெனில், தேவனுக்குரிய மகிமையை நாம் திருடிக்கொள்ளுகிறோம்.

எழுப்புதல் தாமதிக்கிறது... ஏனெனில் தேவனுக்குரிய மகிமையை நாம் திருடிக்கொள்ளுகிறோம். இதோ உங்களை அதிசயிக்கச் செய்க்கூடிய சில வார்த்தைகள்: இயேசு, "நான் மனுஷரால் வரும் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை." "தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?" என்றார் ( யோ 5:41,44), உலகப் பிரகாரமான புகழ்ச்சியும், மேடைப் பாராட்டலும் ஒழியட்டும்! 'என்னுடைய வானொலி நிகழ்ச்சி' 'என்னுடைய சபை' 'என்னுடைய புத்தகங்கள் என்று பெருமையடித்துக்கொள்வது ஒழியட்டும்! 'இன்று நம் நடுவில் இவர் வந்திருப்பது நமக்குப் பெரும் பாக்கியம்' என்றெல்லாம் பாராட்டுவதைப் பிரசங்கிமார் அதிகம் விரும்புகிறார்கள். இவர்களில் பலர் பிரசங்கித்து முடித்த பிறகுதான் அவர்களது வண்டவாளம் தெரியும். முன்னுரை அவ்வளவு பிரமாதமாக நாம் கொடாதிருந்தால் யாரும் பொறுமையாகக் கேட்டிருக்கக்கூடமாட்டார்கள். பாவம் தேவன்! இவையெல்லாவற்றிலும் அவருக்குக் கிடைப்பது ஒன்றுமேயில்லை. அப்படியானால், தேவன் தம்முடைய வார்த்தையின்படி நம்மை வாந்திப்பண்ணிப் போடாதது ஏனோ? நாம் முற்றும் தவறிவிட்டோம். அசுத்தமாயிருக்கிறோம். 'தேவனே எங்களை இந்த ஆபத்திலிருந்தும், ஆழத்திலிருந்தும் தூக்கியெடும். நொறுங்குதல் எனும் ஆசீர்வாதத்தைத் தாரும்! பிரசங்கிகளாகிய எங்கள் நடுவில் முதலாவது நியாயத்தீர்ப்பு துவங்கட்டும்!

https://tamilchristian-library.blogsp...

Комментарии

Информация по комментариям в разработке