Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть தாயின் கண்முன் நிர்வாணமாக நின்ற துரியோதனன்| ஏன் தெரியுமா

  • Endless Mysteries
  • 2025-09-06
  • 4574
தாயின் கண்முன் நிர்வாணமாக நின்ற துரியோதனன்| ஏன் தெரியுமா
mahabharatமகாபாரதம்krishnarhinduepictamilhindumythologymotivationindianepicmahabharatstorymahabharathammahabharatham_tamilmahabharathamintamilvijaytvmahabharathamkarnanstorytamilendlessmysteries@Endlessmysteries696
  • ok logo

Скачать தாயின் கண்முன் நிர்வாணமாக நின்ற துரியோதனன்| ஏன் தெரியுமா бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно தாயின் கண்முன் நிர்வாணமாக நின்ற துரியோதனன்| ஏன் தெரியுமா или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку தாயின் கண்முன் நிர்வாணமாக நின்ற துரியோதனன்| ஏன் தெரியுமா бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео தாயின் கண்முன் நிர்வாணமாக நின்ற துரியோதனன்| ஏன் தெரியுமா

தாயின் கண்முன் நிர்வாணமாக நின்ற துரியோதனன்| ஏன் தெரியுமா

தான் பெற்ற மகனான துரியோதனனை பிறந்தமேனியாக பார்க்கவேண்டும் என்று கூறிய காந்தாரி. உடலில் ஆடையே இல்லாமல் பிறந்த மேனியுடன் தன் தாயின்முன் நிற்க துணிந்தான் துரியோதனன். ஏன், என்ன காரணம். என்ன நடந்தது தெரியுமா. மகாபாரதம் தர்மத்தையே நிலைக்களமாக கொண்டிருந்தது. இதில் காணப்படும் தர்மங்கள் எண்ணிலடங்காதவை. மகாபாரத கதையில் வீரம், சூழ்ச்சி, வஞ்சகம் என எத்தனையோ இருந்தாலும் தர்மத்தின் அடிப்படையில்தான் வெற்றி கிட்டியுள்ளது. பாண்டவர்கள் ஒருபோதும் தர்மத்தை மீறாமல் இருந்தனர். ஆனால் கௌரவர்கள் பாண்டவர்களுக்கு வஞ்சகமும் சூழ்ச்சியும் செய்து துன்பத்தையே கொடுத்தனர். துன்மதி கொண்ட துரியோதனன் பக்கமும் நல்லவர்கள் இருந்தனர். ஆனால் அந்த நல்லவர்களில் முதலிடம் பிடிப்பது யார் தெரியுமா. துரியோதனனின் தாயான காந்தாரியே. திருதராஷ்டிரர் பார்வையற்றவர் என்று தெரிந்தேதான் திருமணம் செய்துகொண்டாள் காந்தாரி. பிறவிக் குருடணான திருதராஷ்டிரரை திருமணம் செய்தபிறகு, தன் கணவன் காணாத இந்த உலகத்தை தானும் காணமாட்டேன் என்று தன் கண்களை கட்டிக்கொண்டு இறுதிவரை வாழ்ந்தாள். காந்தாரியின் பதிவிரதா தர்மத்தின்முன் கிருஷ்ணரே செயலிழந்து நின்றான். கடுமையாக நடந்த குருக்சேத்திர போர் பதினேழு நாட்கள் முடிந்துவிட்டது. குருக்சேத்திர பகுதி முழுவதும் குருதி வெள்ளத்தில் மிதந்தது. கௌரவ சேனையின் பாசறை முழுவதும் சூன்யம் நிறைந்து காணப்பட்டது. கௌரவர்கள் தரப்பில் போரிட்ட வீரர்கள் அனைவரும் மண்ணுலகைவிட்டு விண்ணுலகம் சென்றுவிட்டனர். கௌரவ சேனையின் பாசறை முழுவதும் விதவைகளின் அழுகுறலே ஒலித்தது. என்றும் தனக்காக நின்ற உயிர்நண்பன் கர்ணன், மற்றும் அவனின் சகோதரர்கள், மாமன் சகுணி என யாருமே துரியோதனனின் அருகில் இல்லை. கௌரவர்களுக்காகவும் அஸ்த்தினாபுர அரசனையை காப்பதற்காகவே வாழ்ந்த பீஷ்மர் தன் உயிரை விடாமல் உத்திராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்து வெட்டப்பட்ட மரம்போல அம்புப் படுக்கையில் சயனித்துவிட்டார். தனித்துவிடப்பட்ட அஸ்த்தினாபுரத்தின் இளவரசன் தன்னந்தனியாக நிற்கிறான். பாண்டவர்கள் பக்கமே வெற்றி கிடைக்கும் நிலை. துரியோதனனின் மனம் எதையெதையோ எண்ணி கொந்தளித்தது. அன்று கிருஷ்ணர் கூறிய வார்த்தைகள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் காலம் வரும்போது மீண்டும் தர்மமே வெல்லும் என்று கிருஷ்ணர் கூறினாரே. அந்த காலம் வந்துவிட்டதே. இன்று தனக்கு துணையாக யாருமே இல்லையே என்று கலங்கினான் துரியன். அன்று அரசவையில், பாவி துச்சாதனா உன் செந்நீர் குருதியையும் உன் அண்ணன் துரியோதனனின் ரத்தத்தையும் என் கூந்தலிழும் மேனியிலும் பூசி நறுநெய் குளித்தபிறகே என் கூந்தலை முடிவேன் என்று பாஞ்சாலி கூறிய வார்த்தைகள் துரியோதனனின் காதுகளில் ஒலித்தது. இருண்ட பாசறையில் தன்னந்தனியாக புலம்பி தவித்தான் துரியோதனன். கூடாரத்தில் இருந்த பகடைக் காய்கள் துரியனை பார்த்து சிரிப்பது போன்ற பிரமை தோன்றியது. பித்துபிடித்து வெறி பிடித்தவன் போல அங்குமிங்கும் சுற்றினான் துரியன். பாசறையில் யாரோ நடந்து வருவதுபோல் காலடி சத்தம் கேட்டது. அந்த இருளில் மனித நிழல் தெரிந்தது. துரியன் திரும்பி பார்த்தான். அங்கு அவனை பெற்ற தாய் காந்தாரி நின்றிருந்தாள். ஆச்சரியத்தோடு துரியோதனன் கூறினான். அம்மா நீங்களா. என்ன இந்த நேரத்தில். அதுவும் இந்த யுத்தகளத்தில் என்று வேதனையோடு கேட்டான். என் அன்பு மகனே உன்னுடைய இந்த நிலையறிந்து தாயான நான் எப்படி நிம்மதியாக இருப்பேன். ஒரு குழந்தையின் வலியை தாயைத்தவிர யாரால் அறிய முடியும் என்று அழுதபடி கூறினாள் காந்தாரி. துரியன் கூறினான். அம்மா நாளை நடக்கும் இறுதிநாள் போர் எனக்கும் இறுதி நாளாகிவிடுமோ. நாளைய போரில் எனக்கு மரணம் நிச்சயம் என்று என்மனம் அச்சுறுத்துகிறது என்றான். மகனின் இந்த வேதனையான நிலையை கண்டு கண்களை துடைத்துகொண்டு காந்தாரி கூறினாள். எங்கள் கௌரவ குலத்தோன்றலே. நீயா மரணத்தை கண்டு அச்சப்படுகிறாய். எந்த சமயத்திலும் கோழையாகிவிடாதே துரியோதனா. உன் மரணத்திலிருந்து தப்ப ஒரு வழியுண்டு மகனே. யாராலும் இனி உன்னை வெல்ல இயலாது. அதற்கான உபாயத்தை கூறவே இங்குவந்தேன். நான் சொல்வதை நீ செய்ய வேண்டும் துரியோதனா என்றாள் காந்தாரி. நான் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் தாயே, நிச்சயம் செய்கிறேன் என்றான் துரியன். துரியோதனா இந்த போர்களத்தின் அருகிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு உடலில் ஆடையேதும் இல்லாமல். பிறந்த மேனியாக என்னிடம் வா மகனே. இத்தனை காலமாக கட்டியிருந்த என் கண்களை திறந்து உன்னை பார்த்து என் பரிபூரண கடாட்சம் உன் மேனி முழுவதும் பட்டுவிட்டால் உனக்கு மரணமே நேராது என்றாள். விரைவாக சென்று வா மகனே என்றாள். பாண்டவர்களை நிச்சயம் வென்றுவிடலாம் என்ற எண்ணம் துரியோதனனின் மனதில் தோன்றியது. புன்னகையுடன் குளத்தை நோக்கி சென்றான் துரியன். அதே சமயம் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கிருஷ்ணரின் மனம் நிலையில்லாமல் தவித்தது. காந்தாரியும் துரியோதனனும் பேசியதை தன் ஞானத்தால் அறிந்தார் கிருஷ்ணர். காந்தாரியின் கற்பின் ஆற்றலையும், அவளின் பதிவிரதா தர்மத்தின் சக்தியையும் நினைத்து கிருஷ்ணர் கவலையடைந்தார். கடவுளே கவலைப்படலாமா என்றால்.
#mahabharat
#மகாபாரதம்
#krishnar
#hinduepic
#tamil
#hindumythology
#motivation
#indianepic
#mahabharatstory
#mahabharatham
#mahabharatham_tamil
#mahabharathamintamil
#vijaytvmahabharatham
#karnan
#storytamil
#endlessmysteries
#‪@Endlessmysteries696‬

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]