Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் - திருஞானசம்பந்தர் தேவாரம்

  • Thiruneriya Thamizhosai
  • 2025-06-15
  • 381
திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் - திருஞானசம்பந்தர் தேவாரம்
ThevaaramThirumuraiDeiva ThamizhPanniru ThirumuraiPanniru ThirumuraigalThirugnanasambanthar PathigamThirunavukarasar PathigamSundaramurthy PathigamManikkavasagarThiruvasagamThiruneriya Thamizhosaiபன்னிரு திருமுறைகள்தேவாரம்திருவாசகம்திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரமூர்த்திமாணிக்கவாசகர்தெய்வத் தமிழ்திருநெறிய தமிழோசைDevara Paadal Petra Sthalamதிருச்சோற்றுத்துறைSri Odhanavaneswarar TempleThiruchotruthurai
  • ok logo

Скачать திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் - திருஞானசம்பந்தர் தேவாரம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் - திருஞானசம்பந்தர் தேவாரம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் - திருஞானசம்பந்தர் தேவாரம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் - திருஞானசம்பந்தர் தேவாரம்

01.028 திருச்சோற்றுத்துறை | செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் | திருஞானசம்பந்தர் தேவாரம்

#SriOdhanavaneswararTemple | #Thiruchotruthurai | #ThiruneriyaThamizhosai | #PanniruThirumurai | #Devaram | #Thiruvasagam | #Thevaaram | #Thirugnanasambanthar | #Thirunavukarasar | #Sundarar | #திருஞானசம்பந்தர் | #திருநாவுக்கரசர் | #சுந்தரர் | #மாணிக்கவாசகர் | #திருமுறை | #தேவாரம் | #திருவாசகம்

இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப் பிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும். சிறந்த சிவபக்தரான அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலம் சப்தஸ்நான தலங்களில் ஒன்றாகும். அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது.

பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன் ஆகியோர் வழிபட்டுள்ள சிறப்பைப் பெற்றது இத்தலம். இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என்று அழைக்கப்படும். அவ்வகையில் இத்தலத்திலும் அம்பாள் அன்னபூரணியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளதால் திருச்சோற்றுத்துறை ஒரு திருமணத் தலமாக கருதப்படுகிறது.

அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்ஷய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று.

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சோற்றுத்துறை நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அன்னபூரணி

திருமுறை : முதலாம் திருமுறை 028 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்

திருக்கண்டியூரை வணங்கிய திருஞானசம்பந்தப் பிள்ளையார், வெண்ணீற்றப்பர் சோற்றுத்துறையை வணங்கத் திருவுளங்கொண்டு எழுந்தருளுகின்றபோது, வழிநடையில் "செப்பம் நெஞ்சே" என்னும் திருப்பதிகத்தை அருளிச்செய்தார்கள். இப்பதிகத்தைச் சேக்கிழார் "ஒப்பில் வண்தமிழ் மாலை" எனச் சிறப்பிக்கின்றார். இப்பதிகத்தில் "ஒளிவெண்ணீற்றப்பர் உறையும் செல்வம் உடையார்" என இறைவன் திருநாமமாகிய தொலையாச் செல்வர் என்பது தோற்றுவிக்கப்படுகிறது.

00:14 செப்பம் நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்பன் என்னாது அருளே துணையாக
ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண்ணீற்று
அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே. ..... (01)

02:45 பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி
தோலும் நூலும் துதைந்த வரைமார்பர்
மாலும் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே. ..... (02)

05:30 செய்யர் செய்ய சடையர் விடை ஊர்வர்
கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
தையலாள் ஓர் பாகமாய எம்
ஐயர் சோற்றுத்துறை சென்று அடைவோமே. ..... (03)

06:21 பிணிகொள் ஆக்கை ஒழிய பிறப்பு உளீர்
துணிகொள் போரார் துளங்கும் மழுவாளர்
மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
அணிகொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே. ..... (04)

07:44 பிறையும் அரவும் புனலும் சடை வைத்து
மறையும் ஓதி மயானம் இடமாக
உறையும் செல்வம் உடையார் காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே. ..... (05)

08:28 துடிகளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசி புறங்காடு அரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்று ஆடும்
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே. ..... (06)

09:31 சாடிக் காலன் மாள தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார் தாம்
பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து
ஆடி சோற்றுத்துறை சென்று அடைவோமே. ..... (07)

10:40 பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகம் கலந்த நுதலினார்
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல் சோற்றுத்துறை சென்று அடைவோமே. ..... (08)

11:19 தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியால் மிக்க எம்
எழிலார் சோற்றுத்துறை சென்று அடைவோமே. ..... (09)

12:09 கோது சாற்றித் திரிவார் அமண் குண்டர்
ஓதும் ஓத்தை உணராது எழு நெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே. ..... (10)

14:56 அந்தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்
சிந்தை செய்ம்மின் அடியர் ஆயினீர்
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்தவாறே புனைதல் வழிபாடே. ..... (11)

பதிகப் பலன் : அடியவர்களாக உள்ளவர்களே! அழகு தண்மை ஆகியவற்றோடு விளங்கும் திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளிய எம் முதல்வனை மனத்தால் தியானியுங்கள். சந்த இசையால் ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தைத் தமக்கு வந்தவாறு பாடி வழிபடுதலே அவ்விறைவற்கு நாம் செய்யும் வழிபாடாகும்.

ஆலய முகவரி : அருள்மிகு ஓதவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, திருச்சோற்றுத்துறை அஞ்சல், (வழி) கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சை மாவட்டம், PIN - 613 202

எப்படிப் போவது : தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து திருக்கண்டியூர் வழியாக சுமார் 6 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. திருசோற்றுத்துறையில் இருந்து தெற்கே 3 கி.மீ. லைவில் திருவேதிக்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருசோற்றுத்துறை செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

Subscribe Us :    / thiruneriyathamizhosai  

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]