ஓம் ஸ்ரீ காருண்யாய கருடாய | கருட பிரயோக மந்திரம் | garuda prayoga mantra in tamil

Описание к видео ஓம் ஸ்ரீ காருண்யாய கருடாய | கருட பிரயோக மந்திரம் | garuda prayoga mantra in tamil

கருட பிரயோக மந்திரம்:
ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய நாகதோஷம், சனி தோஷம், ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் இப்படிப்பட்ட பல பெரிய தோஷங்களை நிவர்த்தி செய்யக் கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. நாம் அறிந்த நமக்கு தெரிந்த தோஷங்களும் தீரும். நாம் அறியாத, நமக்குத் தெரியாத பல வகையான தோஷங்களையும் தீர்த்து வைக்கக் கூடிய சக்தியும் இந்த மந்திரத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.
சரி, இப்போது ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய தோஷத்தை நீக்கக் கூடிய, சக்தி வாய்ந்த அந்த மந்திரத்தை பற்றி தெரிந்துகொள்ளுவோம். இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் முறையாக உச்சரித்து, அதற்கான பலனை நீங்கள் பெற்று விட்டால், உங்களின் மனபயம் நீங்கும். விஷ ஜந்துக்களால் இருக்கும் ஜாதக தோஷங்கள் நீங்கும். உங்களை அறியாமலேயே, ஒரு சக்தி உங்களுக்குள் வந்து சேரும், என்பதில் சந்தேகமே இல்லை.

தன்னை விட எடையில் அதிகமாக இருக்கும் எந்த ஒரு பொருளையும், தன் கால்களால் தூக்கிச் செல்லக் கூடிய சக்தி இந்த கருடனுக்கு உண்டு. நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும். குறிப்பாக இந்த மந்திரத்திற்கு அந்த சக்தி அதிகமாகவே உள்ளது.

ஒருவருக்கு இருக்கக்கூடிய தீராத உடல் உபாதைகள் தீர வேண்டுமென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் கருடாழ்வாரை வழிபட வேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டுமென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது. உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க்கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது. எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்பவர்களும் கருடாழ்வாரை புதன்கிழமை வழிபடுவது நல்லது. நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது. வீட்டில் பணப் பிரச்சனை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும்.

சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள். இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட சங்கடங்களும், சிறு துரும்பாக மாறும் .
Garuda is considered to be the King of birds. As per Hindu mythology, Garuda is believed to carry Vishnu on his shoulders. He is depicted as a bird with a human face and body with wings and a beaked nose.

Sloka: “||om shri karunyaya, garudaya, vedaroopaya, vinada puthraya, vishnu bakthipriyaya, amrutha kalasahastaya,bahuparakramaya, pakshi rajaya, sarvavakra , sarvadosha, sarpadorsha, vishasarpa,vinashnaya swaha ||”.

Translation: Oh Lord of Mercy Garuda, visualization of Veda’s, son of Vinada, the one who protects the dearest devotee of Lord Vishnu. The Lord who holds the nectar of immortality in his hands, the strongest, King of Birds, the lord who cures all sins, I surrender myself at your feet.

Benefits: Reciting this mantra helps in reducing anxiety, stress and replace negative influence with positivity.

When to chant: The best time to recite is in morning and its good to recite 108 times if possible.

Ōm srī kāruṇyāya, karuṭāya, vēta rūpāya,
viṉatā putrāya, viṣṇu pakti piriyāya, amruta
kalaca hastāya, pahu parākramāya, pakṣi rājāya,
carva vakkira nācanāya, carva tōṣa, carppa tōṣa,
viṣa carppa vinācanāya svāhā

ஸ்ரீ கருட பிரயோக மந்திரம்

தீய கர்ம வினைகள் அகல
சர்ப்ப தோஷம் நீங்க
நோய்கள் தீர
சகல தோஷங்களும் தீரும்

ஓம் ஸ்ரீ காருண்யாய கருடாய
வேத ரூபாய வினதா புத்ராய
விஷ்ணு பக்தி பிரியாய
அமிர்த கலச ஹஸ்தாய
பஹு பராக்ரமாய
பக்ஷி ராஜாய
சர்வ வக்கிர நாசனாய
சர்வ தோஷ, சர்ப்ப தோஷ
விஷ சர்ப்ப விநாசனாய ஸ்வாஹா

பலன்கள் :

நாக சர்ப்ப தோஷம் நீங்கும்.
விஷ ஜந்துகளால் ஆபத்து நேராது.
பகை விலகும்.
கடன் தீரும்.
தரித்திரம், கஷ்டங்கள் அனைத்தும் விட்டு தொலையும்.
பயண ஆபத்து அகலும்.
தத்துவ அறிவு உண்டாகும்.
நல்ல காரியங்கள் நடந்தேறும்.
நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும்.
கருடனைத் துதித்தால் நாராயணனின் அருளும் கிடைக்கும்.

#கருடபிரயோகமந்திரம்
#garudaprayogamantraintamil #nimalararul

Комментарии

Информация по комментариям в разработке