படிப்பில் சராசரி மாணவர்களையும் நன்கு படிக்க வைக்கும் சரஸ்வதி வழிபாடு | சக்தி வாய்ந்த மந்திரத்துடன்

Описание к видео படிப்பில் சராசரி மாணவர்களையும் நன்கு படிக்க வைக்கும் சரஸ்வதி வழிபாடு | சக்தி வாய்ந்த மந்திரத்துடன்

சரஸ்வதி காயத்ரி மந்திரம்:
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

தியான மந்திரம்
சித்த, கந்தர்வ், யக்யாதிர்,சூர்ஆர் மரைரபி,
சேவயாமணா சதா போயாத் சித்திதா சித்தி தாயினீ

DHYANA MANTRAM
SIDDHA, KANDHARV, YAGYAADHIR, SOOR AAR MARAIRABI,
SEVAYAAMANAA SADHAA POYAATH SIDDHIDHA SIDDHI DHAYINEE

சரஸ்வதி துவாதச நாமாவளி
ஓம் பாரதியை நமஹ
ஓம் சரஸ்வதியை நமஹ
ஓம் சாரதாயை நமஹ
ஓம் ஹம்ஸவாஹின்யை நமஹ
ஓம் ஜகதிக்யாதாயை நமஹ
ஓம் வாகீஸ்வர்யை நமஹ
ஓம் கௌமார்யை நமஹ
ஓம் பிரம்மசாரின்யை நமஹ
ஓம் புத்திதாத்ரி நமஹ
ஓம் வரதாயின்யை நமஹ
ஓம் க்ஷ்த்ரகண்டா நமஹ
ஓம் புவனேஸ்வர்யை நமஹ

Dwadasha Namavali of Goddess Saraswati
Om Bharatyai Namah।
Om Saraswatyai Namah।
Om Sharadayai Namah।
Om Hamsavahinyai Namah।
Om Jagatikhyatayai Namah।
Om Vagishwaryai Namah।
Om Kaumaryai Namah।
Om Brahmacharinyai Namah।
Om Buddhidatri Namah।
Om Varadayinyai Namah।
Om Kshudraghanta Namah।
Om Bhuwaneshwaryai Namah।

சரஸ்வதி அந்தாதி முழு தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.
https://drive.google.com/file/d/1OMOW...

சகல கலா வல்லி மாலை:
வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள் வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே

பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய பொற்பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே நெடுந் தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே!

சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே!

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

Комментарии

Информация по комментариям в разработке