Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть 02.048 திருவெண்காடு | கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் | திருஞானசம்பந்தர் தேவாரம்

  • Panniru Thirumurai
  • 2025-05-15
  • 476
02.048 திருவெண்காடு | கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் | திருஞானசம்பந்தர் தேவாரம்
ThevaaramThirumuraiDeiva ThamizhPanniru ThirumuraiPanniru ThirumuraigalThirugnanasambanthar PathigamThirunavukarasar PathigamSundaramurthy PathigamManikkavasagarThiruvasagamபன்னிரு திருமுறைகள்தேவாரம்திருவாசகம்திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரமூர்த்திமாணிக்கவாசகர்தெய்வத் தமிழ்Devara Paadal Petra Shiva Sthalamதிருவெண்காடுSri Swetharanyeswarar TempleThiruvenkadu
  • ok logo

Скачать 02.048 திருவெண்காடு | கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் | திருஞானசம்பந்தர் தேவாரம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно 02.048 திருவெண்காடு | கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் | திருஞானசம்பந்தர் தேவாரம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку 02.048 திருவெண்காடு | கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் | திருஞானசம்பந்தர் தேவாரம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео 02.048 திருவெண்காடு | கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் | திருஞானசம்பந்தர் தேவாரம்

02.048 திருவெண்காடு | கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் | திருஞானசம்பந்தர் தேவாரம்

காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவெண்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை திருவையாறு, திருசாய்க்காடு(சாயாவனம்), திருவிடைமருதூர், திருவாஞ்சியம் மற்றும் மயிலாடுதுறை ஆகும்.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், என்னும் முக்குளங்களிலும் முறையே நீராடி மூலவர் சுவேதாரண்யேஸ்வரை வழிபட்டால் பெரும் பலனும், நன்மக்கட்பேறும் இறைவன் அருளால் கிடைக்கும். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகங்கள் ஒன்றின் இரண்டாவது பாடலில் இதை குறிப்பிடுகிறார்.

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி

திருமுறை : இரண்டாம் திருமுறை

பதிகம் எண் : 048 பாடல் எண் : 01 மற்றும் 11

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

பதிக குரலிசை : திரு முருகானந்தம் ஓதுவார்

அம்பிகையே குருவாக இருந்து - நான்முகனாகிய பிரம்மனுக்கு உபதேசித்த திருத்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெண்காட்டு நங்கை பிறந்த தலம் என்ற சிறப்பும் திருவெண்காட்டிற்கு உண்டு. இந்திரன், ஐராவதம், சுவேதகேது, சுவேதன், மகாவிஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர்.

திருச்சாய்க்காட்டில் பதிகங்கள் பாடி வழிபட்ட திருஞானசம்பந்தர், இறைவர் எழுந்தருளி இருக்கும் திருவெண்காட்டினைப் பணியப் புறப்பட்டார். திருவெண்காட்டில் உள்ள தொண்டர்கள், பிள்ளையாரை வரவேற்று, அழைத்துக்கொண்டு அந்நகரத்துள் புகுந்தனர். பிள்ளையார் திருக்கோபுரத்தைத் தாழ்ந்து வணங்கி, உட்சென்று திருக்கோயிலை வலம் வந்து, இறைவரின் திருமுன்பு சென்று, நிலம் பொருந்த விழுந்து தொழுது, பணிந்து போற்றியது இத்திருப்பதிகம்.

கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே. ..... (01)

பொருளுரை : வெண்காட்டில் உறையும் பெருமான், நுதலிடைக் கண் கொண்டவன்: கையில் கனல் ஏந்தியவன்: உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியன்: பிறையணிந்த சடைமுடியினன்: பண்ணில் இசைவடிவானவன்: பயிரை வளர்க்கும் மேகமானவன்: விடைஏந்திய கொடியை உடையவன்.

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே. ..... (11)

பதிகப் பலன் : குளிர்ந்த பொழிலால் சூழப்பட்ட சண்பை நகர்த் தலைவனாகிய தமிழ் ஞானசம்பந்தன், விண்ணிற் பொலியும் பிறைமதி சேர்ந்த சென்னியினை உடைய விகிர்தன் உறையும் திருவெண்காட்டைப் பண்ணிசை பொலியப் பாடிய இச்செந்தமிழ் மாலை பத்தையும் வல்லவர், மண்பொலிய வாழ்வதோடு வான்பொலியவும் சென்று வாழ்வர்.

ஆலய முகவரி : அருள்மிகு சுவேதாரன்யேஸ்வரர் திருக்கோவில், திருவெண்காடு, திருவெண்காடு அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், PIN - 609 114.

எப்படிப் போவது : சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மி. தொலைவில் திருவெண்காடு சிவஸ்தலம் இருக்கிறது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. நவக்கிரஹ ஸ்தலங்களில் திருவெண்காடு புதன் ஸ்தலமாக விளங்குகிறது.

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

Subscribe Us :    / panniruthirumurai  

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]