Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть புதுமை 34. உத்தரிக்கிற ஸ்தலத்தில் நம் பாவங்களுக்காய் தகுந்த தண்டனை உண்டு!

  • Catholic Tamil Official
  • 2023-11-17
  • 227
புதுமை 34. உத்தரிக்கிற ஸ்தலத்தில் நம் பாவங்களுக்காய் தகுந்த தண்டனை உண்டு!
Catholic Tamilcatholictamilபாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபைகத்தோலிக்கம்தமிழ்ஆலயம் அறிவோம்நற்கருணைஆராதனைவானொலிதிருப்பலி நேரலைசூசையப்பர்பாத்திமாஆலயங்கள்தவக்காலம்புனிதர்கள்பாடல்கள்மறைக்கல்விநூலகம்செபமாலைநவநாள்சிலுவைப்பாதைபிரார்த்தனைஉத்தரிக்கிற ஸ்தலம்மோட்சம்நரகம்திருக்குடும்ப ஜெபம்குழந்தை இயேசுமறையுரை சிந்தனைசிலுவைபரிகாரம்திருவிவிலியம்பாவசங்கீர்த்தனம்ஆன்மீகம்தியானம்மரியன்னைக்கான போர்
  • ok logo

Скачать புதுமை 34. உத்தரிக்கிற ஸ்தலத்தில் நம் பாவங்களுக்காய் தகுந்த தண்டனை உண்டு! бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно புதுமை 34. உத்தரிக்கிற ஸ்தலத்தில் நம் பாவங்களுக்காய் தகுந்த தண்டனை உண்டு! или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку புதுமை 34. உத்தரிக்கிற ஸ்தலத்தில் நம் பாவங்களுக்காய் தகுந்த தண்டனை உண்டு! бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео புதுமை 34. உத்தரிக்கிற ஸ்தலத்தில் நம் பாவங்களுக்காய் தகுந்த தண்டனை உண்டு!

உலகில் தாம் வாழுங்காலத்தில் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் பக்தியும், இரக்கமும் மிகுதியாகக் கொண்டிருந்த புனித பிரிஜித்தம்மாள் அந்த ஆத்துமங்கள் மூலம் அநேக காட்சிகளைக் கண்டார். அக்காட்சிகளில் ஒன்றில் ஒரு காவல் வீரன் அவன் இறந்த பிறகு அவன் ஆன்மா தனித்தீர்வைக்காக இயேசுவின் முன் நின்றது. பிசாசு அந்த வீரனின் பேரில் மூன்று குற்றச்சாட்டுகளைக் கூறிற்று. அவையாவன: "மோகப் பார்வை மூலம் கண்களால் அநேக பாவங்களைக் கட்டிக் கொண்டான். சிற்றின்ப உணர்வைத் தூண்டும் பாட்டுகளைப் பாடியதாலும், ஆபாச வார்த்தைகளைப் பேசியதாலும் தன் வாயினால் பாவம் கட்டிக் கொண்டான். ஆபாசச் செயல்களால் நிறைய பாவங்களைச் செய்தான்" என்றது.

பிசாசின் குற்றச்சாட்டுகளைக் கேட்டுக் கொண்டிருந்த காவல் சம்மனசு, அவ்வீரன் இயேசுவை முன்னிட்டு அநேக முறை தானதர்மம் செய்ததாகவும், இருந்ததாகவும், தான் சாகும் தறுவாயில் தேவமாதாவிடம் ஒருசந்திகள் பக்தியோடு வேண்டி உத்தம மனஸ்தாபப்பட்டு இறந்ததாகவும் இயேசுவிடம் அவனின் காவல் சம்மனசு எடுத்துரைத்தது.

வீரனின் ஆன்மா நரகத்துக்குப் போகாமல் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குச் செல்ல இயேசுநாதர் உத்தரவிட்டார். அங்கே கண்களால் செய்த பாவங்களை முன்னிட்டு, கோர உருவமுள்ள தோற்றங்களைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும், நாவினால் செய்த பாவங்களுக்கு தண்டனையாக நாக்கு குத்தப்பட வேண்டும். கைகள் செய்த பாவங்களுக்குத் தண்டனையாய் சுடு நெருப்பில் கைகள் புதைக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.

இயேசுநாதர் கூறியபடி அந்த ஆன்மா உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போய் இத்துன்பங்களையெல்லாம் அனுபவித்ததை புனித பிரிஜித்தம்மாள் காட்சியாகக் கண்டார். அவ்வீரன் வாழ்ந்தபோது தேவதாயின் திருநாட்கள் ஒவ்வொன்றுக்கும் முந்தின நாளில் ஒருசந்தி இருந்ததால் புனித பிரிஜித்தம்மாளும், மற்ற கிறிஸ்தவர்களும் அவ்வீரனுடைய ஆத்துமம் குறித்து ஒருசந்தி, தர்மம் முதலான புண்ணியங்களைச் செய்யும்படி தேவமாதா தயை செய்தார்கள். இவ்விதம் தேவதாயின் வழியாக அவ்வீரனுடைய வேதனை முடிவு பெற்றது.

கிறிஸ்தவர்களே! இப்போது குறிப்பிடப்பட்ட வீரன் கண், வாய், கை மூலம் பாவம் கட்டிக் கொண்டதால் அம்மூன்று உறுப்புகளின் வழியாய் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வேதனையுற்றான். நீங்கள் உங்கள் வாழ்நாளில் கோள், புறணி, மோகம் கொண்ட வார்த்தைகளைப் பேசினால், கைகளின் மூலம் தவறான காரியங்களைச் செய்தால் நரகத்துக்குப் போகாமல் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போக வேண்டியிருந்தால் உங்களுடைய கண், வாய், கை ஆகிய இவைகள் மூலம் கொடிய வேதனைகளை அங்கே அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்பதை மறவாதீர்கள்.

எனவே, இப்படிப்பட்ட மோசமான நிலை உங்களுக்கு வராதபடி மோகப் பார்வையோடு பிறரை நோக்குவது, தீய வார்த்தைகளைப் பேசுவது, கோள், குண்டனி, புறணி பேசுவது போன்ற தீமை தரும் செயல்களைக் கட்டாயம் கைவிட வேண்டும். விஷப் பாம்பைக் கையினால் தொட அஞ்சுவதைப்போல் பாவம் செய்ய அஞ்ச வேண்டும்.

இறந்த அந்த வீரன் வாழும்போது சில சனிக்கிழமைகளில் தேவமாதாவைக் குறித்து ஒருசந்தியிருந்ததால் தேவமாதாவுக்குப் பிரியமானவனாக ஆகி அவரின் கிருபையினால் உத்தரிக்கிற ஸ்தலத்து தண்டனை விரைவில் முடிந்து போனது. இவ்விதம் தேவமாதாவைக் குறித்து நாம் செபித்து ஆன்மிக காரியங்களைச் செய்தால் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குச் சென்று கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்தாலும், தேவதாயின் இரக்கத்தால் வேதனைகள் விரைவில் முற்றுப்பெறும்.

மேற்கூறிய தரிசனத்தால் புனித பிரிஜித்தம்மாள் இரக்கம் மிகக் கொண்டு அந்த வீரனின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒருசந்தி முதலிய புண்ணியங்களால் உதவி புரிந்தார்.

அதுபோல இறந்த தாய், தந்தை, உறவினர் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிருந்து அவர்களுக்காக பூசை கண்டு ஒப்புக்கொடுத்தல், ஜெபமாலை ஒப்புக் கொடுத்தலில் செய்யும் தர்மங்களினாலும் வேண்டுதல்களினாலும் நாமும் உதவ முடியும். இப்படிப்பட்ட உதவிகளால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வாடும் அவர்களுடைய துன்பத்துக்கும் முடிவு வரும். அந்த ஆத்துமங்களும் நன்றி மறக்க மாட்டார்கள். அந்த ஆத்துமங்களுக்காக நாம் செய்யும் தர்மங்களாலும், வேண்டுதல்களாலும் அந்த ஆத்துமங்கள் மோட்சம் போனபின் நீங்கள் கட்டாயம் மோட்சம் சேர உங்களுக்காக விடாது ஆண்டவரிடம் பரிந்துரைப்பார்கள் என்பது திண்ணம்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]