முஹம்மது நபியவர்கள் மனித குலம் முழுமைக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்கள். அவருடைய தனித்துவமான குணங்களில் ஒன்று, அவரொரு சிறந்த கணவராக, தந்தையாக, தாத்தாவாக பரிணமித்துள்ளார்கள். இன்னொரு புறம், அவரொரு மகத்தான ஆட்சியாளர், நீதிபதி, ஆன்மிகத் தலைவர். அவரை மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுத்துகிற ஒன்று, அவர் அனைவருக்குமான அருளாக இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளார். அவரது சொல்லும் செயலும் மனிதகுலத்திற்கு அருளாக அமைந்துள்ளது.
தம்மைச் சுற்றியிருந்த அனைவரிடமும் அவர் நீதியை, அன்பை, கண்ணியத்தை வெளிப்படுத்தினார். அவரைப் போல் சகோதரத்துவத்தைப் பரப்பியவரை மனித வரலாற்றில் பார்க்க முடிவதில்லை. இப்படிப்பட்ட மகத்தான சிறப்புகளை அவருக்கு வழங்கியது அல்லாஹ்தான். அவனே அவரைத் தன் தூதராக நியமித்து சத்திய மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுக்குமாறு பணித்தான். இது இறைநம்பிக்கையின் ஓர் அங்கமாக ஆகிவிட்டது.
நபிகளார் தம்மை நம்பிக்கைகொண்டவர்கள் மீது மிகவும் அன்பும் கருணையும் உடையவராக இருப்பார்கள் என்கிறது குர்ஆன். அல்லாஹ் கூறுகிறான்:
ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவர் உங்கள் மீது அவ்வளவு அன்புடையவர்.) மேலும், உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார்.(அல்குர்ஆன் 9.128)
நபியே, உங்களை எல்லா உலகங்களுக்கும் ஓர் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன் 21.107)
ஒரு முறைஅனஸ் இப்னுமாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்'' என்று கூறினார்கள். (புகாரீ6247)
இப்னு அப்பாஸ் எனும் நபித்தோழர் கூறுகிறார்: நபியவர்களிடம் பேரீச்சங்கனிகளின் முதல் அறுவடை கொண்டு வரப்பட்டால், அவற்றைத் தமது கண்களின் மீது வைத்தவர்களாக, “அல்லாஹ்வே, இதன் ஆரம்பத்தை எப்படிக் காண்கிறோமோ அப்படியே இதன் இறுதியையும் காணச் செய்வாயாக” என்று பிரார்த்தனை செய்வார்கள். பிறகு தம்மோடு உள்ள குழந்தைகளுக்கு அவற்றைக் கொடுப்பார்கள். (தபரானீ 11059)
நபியவர்களைச் சந்திக்க வருபவர்கள் குழந்தைகளுடன் வந்தால் அக்குழந்தைகளைத் தம் பக்கம் அழைத்து மடியில் அமர்த்திக்கொள்வார்கள். ஒரு முறை ஒரு குழந்தை அவர்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அதன் மீது தண்ணீர் தெளித்துக்கொண்டார்கள். ஆடையைக் கழுவவில்லை. (அக்குழந்தை பால்குடிப் பருவத்தில் இருந்ததால் அப்படிச் செய்தார்கள் என்பதை நினைவில்கொள்க.) (புகாரீ)
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒருமுறைஅல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களுடைய மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்ட போது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்துகொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாகப் பர்தா அணிந்து கொண்டார்களே'' என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், "எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள்தாம் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) "தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கின்றீர்கள்'' என்று பதிலளித்தார்கள்.அப்போதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில்தான் அவன் செல்வான்'' என்று கூறினார்கள்.(புகாரீ 3294)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:அபூபக்ர் (ரலி) அவர்கள்ஒரு முறைஎன்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள் என்னிடம் (தஃப் எனப்படும்) சலங்கைகள் இல்லாத கஞ்சிராவைத் தட்டி பாடிக்கொண்டிருந்தார்கள். அது, மினாவில் தங்கும் (காலமான துல்ஹஜ் 10, 11, 12, 13ஆகிய) நாட்களில்ஒன்றாகஇருந்தது. நபி (ஸல்) அவர்கள் (படுக்கையில் படுத்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டு) தம் துணியால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் இரு சிறுமிகளையும் அதட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தி-ருந்து (ஆடையை) நீக்கிவிட்டு, "அவ்விருவரையும் விட்டு விடுங்கள், அபூபக்ரே! ஏனெனில், இவை பண்டிகை நாட்கள்'' என்று கூறினார்கள். அந்த நாட்கள் மினாவில் தங்கும் நாட்களாயிருந்தன.(புகாரீ 3529)
மேலும் நபியவர்கள் கூறுகிறார்கள்: உங்களில் மிகச் சிறந்த குணமுடையவரே, இறைநம்பிக்கையால் மிகச்
#thawheethjawadi
#tjislamicvoice #thawheethjawadibayan
Информация по комментариям в разработке