Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருவாசகம் - திருஉந்தியார் - வளைந்தது வில்லு - மாணிக்கவாசக சுவாமிகள்

  • Thiruneriya Thamizhosai
  • 2025-10-23
  • 192
திருவாசகம் - திருஉந்தியார் - வளைந்தது வில்லு - மாணிக்கவாசக சுவாமிகள்
ThevaaramThirumuraiDeiva ThamizhPanniru ThirumuraiPanniru ThirumuraigalThirugnanasambanthar PathigamThirunavukarasar PathigamSundaramurthy PathigamManikkavasagarThiruvasagamThiruneriya Thamizhosaiபன்னிரு திருமுறைகள்தேவாரம்திருவாசகம்திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரமூர்த்திமாணிக்கவாசகர்தெய்வத் தமிழ்திருநெறிய தமிழோசைDevara Paadal Petra Sthalamதிருஉந்தியார்Thiruundhiyar
  • ok logo

Скачать திருவாசகம் - திருஉந்தியார் - வளைந்தது வில்லு - மாணிக்கவாசக சுவாமிகள் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருவாசகம் - திருஉந்தியார் - வளைந்தது வில்லு - மாணிக்கவாசக சுவாமிகள் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருவாசகம் - திருஉந்தியார் - வளைந்தது வில்லு - மாணிக்கவாசக சுவாமிகள் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருவாசகம் - திருஉந்தியார் - வளைந்தது வில்லு - மாணிக்கவாசக சுவாமிகள்

08.014 திருவாசகம் | திருஉந்தியார் | வளைந்தது வில்லு விளைந்தது பூசல் | மாணிக்கவாசக சுவாமிகள்

உந்தி பறத்தல என்பது மகளிர் விளையாட்டுகளுள் ஒன்று. இதில் அவர்கள் சில பொருளமைத்து, 'உந்திபற' என்று முடியும் பாட்டுகளைப் பாடுவர் என்பது அறியக்கிடக்கின்றது(தில்லையில் அருளிச்செய்தது).

00:10 வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீ பற
ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற. ..... (01)

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீ பற. ..... (02)

01:45 தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும்
அச்சு முறிந்தது என்று உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற. ..... (03)

உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இளமுலை பொங்க நின்று உந்தீ பற. ..... (04)

03:18 சாடிய வேள்வி சரிந்திட தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீ பற
உருத்திர நாதனுக்கு உந்தீ பற. ..... (05)

ஆவா திருமால் அவிப்பாகம் கொண்டு அன்று
சாவாது இருந்தான் என்று உந்தீ பற
சதுர்முகன் தாதை என்று உந்தீ பற. ..... (06)

04:18 வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று உந்தீ பற
கலங்கிற்று வேள்வி என்று உந்தீ பற. ..... (07)

பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பது என்னே ஏடி உந்தீ பற
பணை முலை பாகனுக்கு உந்தீ பற. ..... (08)

05:28 புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி
மரந்தனில் ஏறினார் உந்தீ பற
வானவர் கோன் என்றே உந்தீ பற. ..... (09)

வெஞ்சின வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சினவா பாடி உந்தீ பற
தொடர்ந்த பிறப்பற உந்தீ பற. ..... (10)

06:31 ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டியவா பாடி உந்தீ பற
கொங்கை குலுங்க நின்று உந்தீ பற. ..... (11)

உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே
கண்ணைப் பறித்தவாறு உந்தீ பற
கருக்கெட நாம் எல்லாம் உந்தீ பற. ..... (12)

07:33 நாமகள் நாசி சிரம் பிரமன் பட
சோமன் முகம் நெரித்து உந்தீ பற
தொல்லை வினைகெட உந்தீ பற. ..... (13)

நான்மறையோனும் அகத்திய மான்படப்
போம் வழி தேடுமாறு உந்தீ பற
புரந்தரன் வேள்வியில் உந்தீ பற. ..... (14)

08:40 சூரியனார் தொண்டை வாயினில் பற்களை
வாரி நெரித்தவாறு உந்தீ பற
மயங்கிற்று வேள்வி என்று உந்தீ பற. ..... (15)

தக்கனார் அன்றே தலை இழந்தார் தக்கன்
மக்களைச் சூழ நின்று உந்தீ பற
மடிந்தது வேள்வி என்று உந்தீ பற. ..... (16)

09:47 பாலகனார்க்கு அன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீ பற
குமரன் தன் தாதைக்கே உந்தீ பற. ..... (17)

நல்ல மலரின்மேல் நான்முகனார் தலை
ஒல்லை அரிந்தது என்று உந்தீ பற
உகிரால் அரிந்தது என்று உந்தீ பற. ..... (18)

10:49 தேரை நிறுத்தி மலை எடுத்தான் சிரம்
ஈரைந்தும் இற்றவாறு உந்தீ பற
இருபதும் இற்றது என்று உந்தீ பற. ..... (19)

ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென்று உந்தீ பற
அதற்கப்பாலூங் காவலென்று உந்தீ பற. ..... (20)

பொருளுரை : மேலாடை அணிந்துள்ள, முனிவர்கள் அழிந்து போகாமல், ஆகாயத்தில் இறைவன் இருக்கின்றான் என்றும், ஆகாயத்துக்கு அப்பாலுள்ளவர்க்கும் அவனே காவல் என்றும் உந்தீபறப்பாயாக.

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]