நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே பாடல் | Nikkattumaa Pogattuma song | Mano, K. S. Chithra .

Описание к видео நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே பாடல் | Nikkattumaa Pogattuma song | Mano, K. S. Chithra .

#ilayaraja #tamilsongs #karthik #kanaka #lovesongs #4ksongs
நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே பாடல் | Nikkattumaa Pogattuma song | Mano, K. S. Chithra . Tamil Lyrics in Description .
Movie : Periya Veetu Pannakkaran
Music : Ilaiyaraaja
Song : Nikkattumaa Pogattuma
Singers : Mano, K. S. Chithra
Lyrics : Mu. Metha
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
தாவணி போய் சேலை வந்து
சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி….

பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே….
சோலைக் கருங்குயிலே….

குழு : ஆ……ஆ……ஆ…..ஆ….
ஆ……ஆ……ஆ…..ஆ….

பெண் : ஓடையில் நான் அமர்ந்தேன்
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
ஓடையில் பார்த்த முகம்
அது உன் முகம் ஆனதென்ன
வாடையில் மாறிடும் பூவினைப்போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன

ஆண் : தேரடி வீதியிலே ஒரு
தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே
ஒரு சோடியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா
இணைந்திடும் நாள் வருமா

பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே….
சோலைக் கருங்குயிலே….
தாவணி போய் சேலை வரும்
சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே

குழு : ………………………….

ஆண் : ராத்திரி நேரத்திலே
ஒரு ராகமும் கேட்டதடி
கேட்டது கிடைக்குமென்று
ஒரு சேதியும் சொன்னதடி
மல்லிகை பூச்செடி பூத்தது போல்
என் உள்ளமும் பூத்ததடி

பெண் : அம்மனின் கோவிலிலே
அன்று ஆசையில் நான் நடந்தேன்
உன் மனக் கோவிலிலே
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள்வருமா

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
பெண் : தாவணி போய் சேலை வந்து
சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
பெண் : சோலை கருங்குயிலே…..
சோலை கருங்குயிலே…..

Комментарии

Информация по комментариям в разработке