கொட்டுக்களி கொட்டு நாயனம் பாடல் | Kottukkali song | S.P.Balasubrahmanyam, K.S. Chithra | Chinnavar .

Описание к видео கொட்டுக்களி கொட்டு நாயனம் பாடல் | Kottukkali song | S.P.Balasubrahmanyam, K.S. Chithra | Chinnavar .

#prabhu #kasthuri #spb #ilayaraja #chithra #mano #tamilsongs #lovesongs #4ksongs
கொட்டுக்களி கொட்டு நாயனம் பாடல் | Kottukkali song | S.P.Balasubrahmanyam, K.S. Chithra | Chinnavar . Tamil Lyrics in Description .
Movie : Chinnavar
Music : Ilaiyaraaja
Starring : Prabhu, Chandrasekhar, Kasthuri
Song : Kottukkali
Singers : S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Lyrics : Gangai Amaran
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே

பெண் : வெள்ளி மணிச் சத்தம்
துள்ளி குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன்
செல்லக் கயல்களும் நாளும் கூட

ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே…….

பெண் : தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே

பெண் : சின்னவரும் பார்க்கும் போது
தேகம் மோகம் கேக்குது
மன்னவரும் கூடும் போது
மயக்கமாகுது

ஆண் : கண்ணிரண்டும் ஜாலம் பேசி
காதல் போதை ஏத்துது
பொண்ணு இட்ட தூண்டில்
என்னை போட்டு இழுக்குது

பெண் : கோடி ஆசை கூடிக் கூடி
கோலம் போடுது
கோலம் போட்டு பாடிப் பாடி
தாளம் போடுது

பெண் : ராஜராஜனும்
கை கோர்த்த ராணியாகனும்

ஆண் : காதல் சாகரம்
அதில் இன்பத் தோணி போகணும்

பெண் : ஏழு லோகம் மாலை போட
வாழ்ந்து பார்க்கணும்

ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே

பெண் : வெள்ளி மணிச் சத்தம்
துள்ளி குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன்
செல்லக் கயல்களும் நாளும் கூட

ஆண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே…….

பெண் : தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே

ஆண் : முத்துமணி மாலை போல
மோதிப் பார்க்க ஆசை தான்
வெட்கம் இனி ஓட வேணும்
விலகித் தூரம்தான்

பெண் : பொட்டு வைத்து பூவைச் சூடி
பார்த்து ஏங்கும் பாவைதான்
தொட்டணைத்து தூக்கும் போது
தீரும் பாரம்தான்

ஆண் : காத்து வாக்கில் பூத்த வாசம்
கன்னி வாசம்தான்

பெண் : நேத்து பூத்த பூவின் மீது
என்ன பாசம்தான்

ஆண் : மூட மூடவே
என்னோட மோகம் ஏறுது

பெண் : பாடப் பாடவே
என்னோட பாட்டும் சேருது

ஆண் : தேடத் தேட கோடிக் கோடி
சேதி தெரியுது

பெண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே

ஆண் : வெள்ளி மணிச் சத்தம்
துள்ளி குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன்
செல்லக் கயல்களும் நாளும் கூட

பெண் : கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே…….

ஆண் : தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே

Комментарии

Информация по комментариям в разработке