ஒரு நாளும் விலகாது I Oru nalum I இடைவிடா சகாய மாதா பாடல்I தனம் செபாஸ்டின் I பிரிட்டோ

Описание к видео ஒரு நாளும் விலகாது I Oru nalum I இடைவிடா சகாய மாதா பாடல்I தனம் செபாஸ்டின் I பிரிட்டோ

அஞ்சல் நகர் சகாய அன்னை ஆலய பொன்விழா நினைவாக....

பாடல்:
இறைக்கவி திரு பிரிட்டோ ஆரோக்கியதாஸ், மதுரை.

இசை: தனம் செபாஸ்டின், மதுரை.

இசையமைப்பு & ஒலிக் கலவை:
திரு ஏ ஆர் தேவ நேசன், சென்னை.

பாடியவர்கள்:
திரு ரிச்சி ஜோஸ், பாஸ்டின் நகர்.
செல்வி ஜோன்ஸ், விளாங்குடி

குரல் பதிவு:
திரு சதீஷ், மதுரை.

படத்தொகுப்பு:
MWC Blessing River , Madurai

தயாரிப்பு
Sandhana Creations

ஒரு நாளும் விலகாது,
ஒரு பொழுதும் மறவாது
உடனிருக்கும் தாயன்பே,
சகாயத் தாய் மரியே.

இடை தாங்கும் மகளருளால்
இடை விடாமல் எமைத் தாங்கும்
இறையருளே,
சகாயத் தாய் மரியே...
சகாயத் தாயே அம்மா!
அபாயம் நீக்கும் அம்மா!

1. இறைவார்த்தை கருச்சுமந்து வளர்த்தெடுத்தாயே,
இறை வார்த்தை வழியில் எம்மை
வளர்த்திடுவாயே!
பிறர்க்கெனவே வாழ்ந்திருப்பதிலே,
மகிழ்ந்திருந்தாயே-உன் உறவெனவே தினம் எம்முடனே உறைந்திடுவாயே-துயர் களைந்திடுவாயே...
சகாயத் தாயே அம்மா!
அபாயம் நீக்கும் அம்மா!

2. ஒருகையில் இறைமகனைச் சுமந்திடும் தாயே,
மறுகையில் எனைப் பிடித்து நடத்திடுவாயே
கரம் சுமக்கும் இறை மகன்அருளை
கரம் மாற்றிடுவாய்-உன்
மகன் எனவே உருமாறிடவே
வரம் பொழிந்திடுவாய்-மனத்
திடம் வழங்கிடுவாய்...

சகாயத் தாயே அம்மா!
அபாயம் நீக்கும் அம்மா!

Комментарии

Информация по комментариям в разработке