ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 11. அனுமார் கூறிய ஸ்ரீராம சரிதம்

Описание к видео ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 11. அனுமார் கூறிய ஸ்ரீராம சரிதம்

ஸ்ரீ ராமஜயம்! ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 11. அனுமார் கூறிய ஸ்ரீராம சரிதம்

எழுத்து & இயக்கம் : வேதாந்த கவியோகி நாகஸுந்தரம்- புதுடில்லி

இசையமைப்பு & பாடல் : அபர்ணா கிருஷ்ணன்- மும்பை

தைரியம், நல்லபுத்தி, வாக்குவன்மை அனைத்தும் அருளுபவர் ஸ்ரீமாருதி என்கிற ஆஞ்சநேயஸ்வாமி. அவரின் வீரச்செயல், சீதையைக்கண்டது, தூதுபோனது, இலங்காதகனம் ஆகிய இராமாயண காவியத்தின் சிறப்பு மிக்க பகுதியே ஸுந்தர காண்டம் ஆகும். இராமாயணம் முழுவதுமே இசை நாடகமாக இராமநாடக கீர்த்தனைகளாக ஆக்கியவர் ஸ்ரீஅருணாசல கவிராயர். இப்பால் நாகஸுந்தரத்தால் சில பாடல்கள் எழுதப்பட்டு அவை ஸ்ரீமதி அபர்ணா கிருஷ்ணனால் இசைப்பாடல்களாக பாடப்பட்டு இங்கே வெளிவருகிறது.

11. அனுமார் கூறிய ஸ்ரீராம சரிதம்*

ராகம் : ராகமாலிகை
(பிருந்தாவன சாரங்கா, நலினகாந்தி, சாரங்கா, காபி, மலயமாருதம்)

காதையில் சிறந்தது இராம காதை
காதிலே கேளுங்கள் கூறுவேன் கீதை
(கா)

தயரதர் என்னும் தயை கொண்ட தலைவர்
அயராத அவருக்கு அழகான புத்திரர்
(கா)

ஜானகியை கைப்பிடித்தான் ஜெயராமன்
ஆனந்தமாய் ஆனது அவர் வாழ்க்கை
கானகம் சென்றார் கைகேயி வரத்தால்
வானத்தில் ஏகினார் விவேக தயரதர் (கா)

கங்கையைத் தாண்டியே கானகம் வந்தார்கள்
நங்கை சீதையை சிறையெடுத்தான் இராவணன்
மங்கையைப் பிரிந்து மனம் நொந்தார் இராமரும்
ஆங்குதான் அனுமன் என்னையே கண்டனர் (கா)

வாலியை வதைத்து வானரர் காத்தார்
கூலியாய் இராமனின் தூதனாய் வந்தேன்
சீதையைத் தேடி சிம்சுபா அமர்ந்தேன்
வாதையை விலக்கும் வேதம் இராமநாமம்
(கா)

Комментарии

Информация по комментариям в разработке